என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seed Sale"

    • விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது.
    • விதை ரகங்களை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்கிட அறிவுறுத்தப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் விவசாயிகள் கார்த்திகை பருவ நிலக்கடலை சாகு படிக்கு தயாராகி வருகின்றனர்.

    விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கிய மானது. எனவே தரமான விதைகள் சரியான விலை யில் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரும் விதை ரகங்களை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வங்கிட அறிவுறுத்தப்படுகிறது.

    தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்பு திறனில் குறைபாடுகளோ இருப்பின் அது குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் 0462-2553017, விதை ஆய்வா ளர்கள்- 9750427427 (நெல்லை) , 96293 61660 (வள்ளியூர்), 93844 47338 ( தென்காசி), 9965050077 ( சங்கரன்கோவில்), 87541 92941 ( நாகர்கோவில்) ஆகிய எண்களில் விதை ஆய்வு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×