search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகிழ்ச்சியின் உச்சத்தில் திருப்பூர் மக்கள் - ஞாயிறு தின கொண்டாட்டம்
    X

    ஞாயிறு கொண்டாட்டத்தின் ஆர்வமாக பங்கு கொண்ட பொதுமக்களின் காட்சி.

    மகிழ்ச்சியின் உச்சத்தில் திருப்பூர் மக்கள் - ஞாயிறு தின கொண்டாட்டம்

    • பொழுதுபோக்கு தினமாக மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு நடத்தப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2023-24 வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய பொழுதுபோக்கு தினமாக மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2வது மண்டலம் எம் .எஸ் .நகர். பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் , சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல பிளாக் சீப் யூ டியூப் சேனல் அணியினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

    தொடர்ந்து இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டம் , கும்மியாட்டம் , காவடியாட்டம் , ஒயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. மேலும் இளைஞர்களுக்கான டி.ஜே நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் நடனம் ஆடினர்.

    இதே போல் சிறுவர் சிறுமியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஓவியப் போட்டிகளும் நடைபெற்றது. மாதந்தோறும் ஒவ்வொரு பகுதியில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வு நடத்தப்படும் எனவும் அடுத்த மாதம் 3வது மண்டலத்தில் நடத்தப்படுவதாக மேடையிலேயே அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×