search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பட்டிமன்றம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
    X

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பட்டிமன்றம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

    • பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
    • புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பட்டிமன்றம் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குமரேசன் ஏற்பாட்டில் மதுரவாயல், மதுரவாயல் வடக்கு பகுதி 147-வது வட்டம் புஷ்பா கார்டன் பகுதியில் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளரும், எம். எல். ஏ. வுமான காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.

    வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது-பொருளே, புகழே என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பொருளே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், அருள்பிரகாஷ் ஆகியோரும், புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம். எல். ஏ., மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 11-வது மண்டல குழு தலை வருமான நொளம்பூர் வே. ராஜன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ஆலப் பாக்கம் கு.சண்முகம், 147-வது வட்ட செயலாளர் எஸ்.ஜி.மாதவன், பகுதி நிர்வா கிகள் பாலாஜி, செந்தில் சுரேஷ், உதயகுமார், அண்ணாதாசன், சசிகுமார், ஸ்டாலின், ஆலன், ரூபன், மதியழகன், கவுன்சிலர்கள் மாலினி, ரமணி மாதவன், பாரதி அண்ணா வேலன், செல்வி ரமேஷ், ஹேமலதா கணபதி, நிர்வாகிகள் ரமேஷ் ராஜ், ரமேஷ், புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×