search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pattimanram"

    • ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழாவில் ஜோதிடர் கரு.கருப்பையாவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • சிவகிரி பேராசிரியர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மதுரை

    பிரசித்தி பெற்ற ராமேசு–வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நாளை (13-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கோவில் தெற்குவாசல் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிக–ளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் விழா–வின் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை (13-ந்தேதி) மாலை 6 மணிக்கு முதலாம் நாள் நிகழ்ச்சியாக கோவை சூலூர் ஏரோ சித்த மருத்து–வமனை கரு.கருப்பையா வழங்கும் உலகம் சிவமயம் என்ற தலைப்பில் ஆன்மீக் சொற்பொழிவு நடைபெறு–கிறது.

    இதையடுத்து பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா–வின் நடுவர் பொறுப்பில் நகைக்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் சிவகிரி பேராசிரியர் முனைவர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்துகொண்ட பேசுகி–றார்கள். முடிவில் பட்டி–மன்ற நடுவர் கரு.கருப் பையா தீர்ப்பு வழங்கு–கிறார்.

    • பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.
    • புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பட்டிமன்றம் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குமரேசன் ஏற்பாட்டில் மதுரவாயல், மதுரவாயல் வடக்கு பகுதி 147-வது வட்டம் புஷ்பா கார்டன் பகுதியில் நடைபெற்றது.

    பட்டிமன்றத்தை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன், மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளரும், எம். எல். ஏ. வுமான காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்தார்.

    வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது-பொருளே, புகழே என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பொருளே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், அருள்பிரகாஷ் ஆகியோரும், புகழே என்ற தலைப்பில் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி, கவிதா ஜவஹர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம். எல். ஏ., மதுரவாயல் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளரும், 11-வது மண்டல குழு தலை வருமான நொளம்பூர் வே. ராஜன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ஆலப் பாக்கம் கு.சண்முகம், 147-வது வட்ட செயலாளர் எஸ்.ஜி.மாதவன், பகுதி நிர்வா கிகள் பாலாஜி, செந்தில் சுரேஷ், உதயகுமார், அண்ணாதாசன், சசிகுமார், ஸ்டாலின், ஆலன், ரூபன், மதியழகன், கவுன்சிலர்கள் மாலினி, ரமணி மாதவன், பாரதி அண்ணா வேலன், செல்வி ரமேஷ், ஹேமலதா கணபதி, நிர்வாகிகள் ரமேஷ் ராஜ், ரமேஷ், புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×