என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "castes"

    • பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்

    தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.

    கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!

    மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



    அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்கமான ‘பீம் படை’ தலைவர் சந்திரசேகர், நாட்டில் உள்ள அனைத்து அனுமார் கோவில்களையும் இனி தலித்துகள் கைப்பற்ற வேண்டும். அந்த கோவில்களில் எல்லாம் தலித்துகளையே அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

    வரும் காலங்களில் சாதி, மதங்களின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் அது எடுபடாது என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
    மங்களூரு :

    கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு அவர் தனது மகனும், சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், “சாதி, மதங்களை பிரிக்க முயற்சி மேற்கொண்டதால்தான் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக மந்திரி டி.கே.சிவக்குமாரே ஒப்புக் கொண்டுவிட்டார். இதன்மூலம் அவரும், காங்கிரசாரும் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

    எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை சாதி, மதங்களால் பிரிக்க நினைக்கக் கூடாது. வரும் காலங்களில் சாதி, மதங்களின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் அது எடுபடாது. நான் தற்போது சொன்ன பதில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்குத்தான். என்னைப்பற்றி குறை கூறி வரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அல்ல. மேலும் நான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறினார்.
    ×