search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP minister"

    • தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
    • தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.

    நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.

    பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-

    தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.

    அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தரவு.
    • கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், ஆக்ரா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது கல்லூர் கேட் மூடப்பட்டிருந்தது. கல்லூரி வாசலில் அமைச்சர் 15 நிமிடங்கள் காத்திருந்தார். எனினும் கேட் திறக்கப்படாததால் வெறுப்படைந்த அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தர விட்டுள்ளதுடன், கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கல்லூரி ஓவியத்துறை ஆசிரியர்களால் தனியாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கல்லூரி முதல்வர் அனுராக் சுக்லா தெரிவித்தார். தேர்வு நடைபெற்று வந்ததன் காரணமாக கல்லூரி வளாகத்தில் வாகனங்கள் அதிக அளவில் இருந்ததாகவும், குளறுபடிகள் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    உத்தர பிரதேச அமைச்சரவையில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரையின்படி கவர்னர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அக்கட்சியைச் சேர்ந்த மேலும்  சில எம்எல்ஏக்கள் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர்.

    இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலமாக பாஜகவை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என சமீத்தில் பேசினார். அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.



    இந்நிலையில், ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பரிந்துரை செய்தார். இதேபோல் இணை அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளில் இருக்கும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ராம் நாயக் ஏற்றுக்கொண்டு, ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதேபோல் அக்கட்சியின் பிற உறுப்பினர்களும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
    ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து பொய்களையே பேசிவரும் ராகுல் காந்தி கும்பமேளாவுக்கு வந்து கங்கை ஆற்றில் தனது பாவங்களை கழுவ வேண்டும் என உ.பி. மந்திரி குறிப்பிட்டுள்ளார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங் இன்று வாரணாசி நகரில் பிரதமரின் ஆரோக்கிய காப்பீடு திட்டம் தொடர்பான அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தார்த்நாத் சிங், ‘ரபேல் விவகாரத்தில் கடந்த இரண்டாண்டுகளாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறார். தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

    பிரயாக்ராஜ் (முந்தைய அலகாபாத்) நகரில் விரைவில் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவுக்கு ராகுல் காந்தி வர வேண்டும். இங்குள்ள கங்கை ஆற்றில் நீராடி அவர் பேசிய பொய்கள் தொடர்பான பாவங்களை கழுவிக்கொள்ள வேண்டும் என அவரை நான் அழைக்கிறேன். கங்கைத்தாய் அவரது பாவங்களை மன்னிப்பாராக!’ என குறிப்பிட்டார். #UPminister #Rahul #washoffsin #lyingoverRafale
    அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
    லக்னோ:

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



    அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்கமான ‘பீம் படை’ தலைவர் சந்திரசேகர், நாட்டில் உள்ள அனைத்து அனுமார் கோவில்களையும் இனி தலித்துகள் கைப்பற்ற வேண்டும். அந்த கோவில்களில் எல்லாம் தலித்துகளையே அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கியும் சாலை போடப்படாததால் தனது இரு மகன்களின் துணையுடன் மாநில மந்திரி சாலைப் பணியாளராக மாறினார். #UPMinisterconstructsroad #Ministerconstructsroad
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில மந்திரிசபையில் கேபினட் அந்தஸ்துடன் மந்திரியாக பதவி வகிப்பவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான இவர் வாரனாசி மாவட்டம் பதேபூர் கவுடா கிராமத்தை சேர்ந்தவராவார்.

    மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறுகிறது, இந்த திருமண விழாவுக்கு மாநில மந்திரிகள் பலர் வருவார்கள் என்பதால் தனது வீடு இருக்கும் பாதையை முக்கிய சாலையுடன் இணைக்கும் வகையில் தனது வீட்டின் அருகே 500 மீட்டர் தூரத்துக்கு புதிய சாலையை ஏற்படுத்த வேண்டும் என மாநில பொதுப்பணி துறைக்கு இவர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதற்கு அனுமதி அளித்தும் சாலை போடும் பணிக்காக 16.77 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் கடந்த 30-5-2018 அன்று பொதுப்பணி துறை உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், இந்த உத்தரவுக்கு பின்னர் 20 நாட்களாகியும் அங்கு சாலை போட அதிகாரிகள் முன்வராததால் தனது சொந்த செலவில், மகன்கள் அரவிந்த், அருண் ஆகியோரின் துணையுடன் தானே சாலைப் பணியாளராக மாறிய ஓம் பிரகாஷ் ராஜ்பர். சுமார் மூன்று மணிநேர உடல் உழைப்பில் சாலையை போட்டு முடித்து விட்டார்.

    ஒரு மந்திரியால் தனது வீட்டின் அருகே சாலை போட முடியவில்லை என்றால் பொதுமக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்று கேட்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பர். #UPMinisterconstructsroad  #Ministerconstructsroad
    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    ×