search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    100 கோடி இந்தியர்களின் இரத்தத்திலும் ஊழல் ஓடுகிறது - உ.பி மந்திரி சர்ச்சை பேச்சு
    X

    100 கோடி இந்தியர்களின் இரத்தத்திலும் ஊழல் ஓடுகிறது - உ.பி மந்திரி சர்ச்சை பேச்சு

    நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக உத்திர பிரதேசத்தில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேசியுள்ளார். #OmPrakashRajbhar
    லக்னோ:

    உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டாக்டர். சகுந்தலா மிஸ்ரா தேசிய மறுவாழ்வு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகெல்டியோ பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரும் அமைச்சரவை மந்திரியுமான ஓம் பிரகாஷ் ராஜ்பரும் கலந்து கொண்டனர்.

    அப்போது வாரணாசியில் சமீபத்தில் ஏற்பட்ட மேம்பால விபத்து குறித்து பேசிய ஓம் பிரகாஷ், ’நாட்டின் 100 கோடி மக்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்துள்ளது., அதை அகற்றுவது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஓம் பிரகாஷ், ‘சட்ட ஒழுங்கு சார்ந்த விஷயங்களில், ஆந்திரா, கேரளாவை விட உ.பி சிறப்பாகவே திகழ்கிறது. இருப்பினும் சிறுபான்மையின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வர் யோகி ஆதியநாத்தும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை’ என தெரிவித்தார்.

    ஓம் பிரகாஷ் ராஜ்பர் இவ்வாறு பா.ஜ.க.வை தாக்கிப் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது என ஓம் பிரகாஷ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Corruptioninblood #OmPrakashRajbhar
    Next Story
    ×