search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood"

    • கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர்.
    • மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்றிரவு 8 மணியளவில் இந்த பகுதியில் வாலிபர் ஒருவரின் தலை ஒன்று தனியாக துண்டிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இருட்டான பகுதி என்பதால் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றபோது தலை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியில் வந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடந்த வாலிபருக்கு 35 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் துண்டிக்கப்பட்டு கிடந்த தலையில் இருந்து ரத்தம் வடிந்ததால் கொலை நடந்து சில மணி நேரமே ஆவது தெரியவந்தது. எனவே உடல் இந்த பகுதியில் தான் எங்காவது வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதினர். தொடர்ந்து அந்த வாலிபரின் தலையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் குள்ளம்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபரின் உடலை தேடினர். இன்று அதிகாலை அக்ரஹாரம் ஏரி கரையில் வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்ய ப்பட்ட நபர் குள்ளம்பட்டி, வலசையூர், காட்டூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்? என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் கொலையாளியை தேடினர். அப்போது அங்குள்ள வேகத்தடை அருகே போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் காரிப்பட்டியை அடுத்த கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த திருமலை (32) என்பவர் ரோட்டில் கிடந்த வாலிபரின் தலையை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததால் உளறியபடியே இருந்தார். இதையடுத்து போலீசார் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது, அதன் விவரம் வருமாறு-

    கொலை செய்யப்பட்ட நபர் அங்குள்ள மதுக்கடையில் மது வாங்கிய போது திருமலைக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது அந்த நபர் திருமலையை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திருமலை வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து அந்த வாலிபரை கொலை செய்து தலையை அங்கு வீசி சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசாரிடம் சிக்கியுள்ள திருமலை வாழப்பாடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மாற்று திறனாளி கொலை வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைதானது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடைவீதி சாலையில் ஒரு வாலிபர் அமர்ந்து இருந்தார்.
    • திடீரென அவர் பிளேடால் தன்னை அறுத்து கொண்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சாலை ஓரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று அமர்ந்து இருந்தாா்.

    அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த பிளேடால் அவரின் மார்பு பகுதி மற்றும் கழுத்து பகுதியை தானே அறுத்துக் கொண்டார். இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.

    இதைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அவர் அருகில் யாரும் செல்லவில்லை.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரிடம் இருந்து பிளேடை நைசாக பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் அவரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூருவை சேர்ந்த பழனிசாமி என தெரியவந்தது.

    இவர் ஏன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்? என தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே பாலமேட்டில் ரத்த தான முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இந்த முகாமை ஏ.வி.பி. குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், முன்னிலை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முகாமை ஒருங்கிணைத்தனர். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

    பின்னர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ரத்த தானம் வழங்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே ரத்ததான முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு ரத்த தான முகாம் நடந்தது. ராஜ பாளையம் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்த னர்.

    பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், ரத்த தான முகாமை நடத்திய அரிசி ஆலை உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகி களை பாராட்டி னார். பின்னர் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற மக்கள் சேவையை மேற்கொள்ள வேண்டுமெனவும், தங்கள் தொழில் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சரும், நமது மாவட்ட வருவாய்த்துறை அமைச்சரும், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்ச ரும், நானும் உறு துணையாக இருப்போம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூர் சேர்மன் ஜெய முருகன், துணை சேர்மன் விநாயக மூர்த்தி, அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிக ரத்த தானம்் வழங்கியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    தேவகோட்டை

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தேவகோட்டை வட்டாரத்தில் அதிகளவில் ரத்தம் வழங்கிய ரத்த கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரத்த ெகாடையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் சாவித்திரி, பாலமுருகன், கல்லூரி மாணவர்கள் சூர்யா, கமலேசுவரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் ஷாம் சேசுரான், திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆலோசகர் அழகு ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் சிம்ம வாகனத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ராமலிங்கர் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடுதல், சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் படைக்கலம் கொண்டு வருதல் போன்ற பல்வேறு விசேஷ வைபவங்கள் நடத்தப்பட்டன. இதில் அந்த பகுதி இளைஞர்கள் பக்திபரவசத்துடன் கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட போதும் அவர்கள் தொடர்ச்சியாக கத்தி போட்டனர். கத்தி போடும் போது இளைஞர்கள் அனைவரும் தீஸ்க்கோ தாயே., தீஸ்கோ.. என்று கூறி கத்திப்போட்டு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ரத்தத்தை காணிக்கையாக செலுத்தினர். இத்துடன் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கண க்கான பக்தர்கள் பொங்கல் பானையின் மீது எந்த ஒரு பிடிமானமும் இல்லாத வகையில் வாள் தனித்து நிற்கும் வினோத நிகழ்வை கண்டு ரசித்தனர். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த வினோத விசேஷம் நடத்தப்படுவதால் கணக்கம்பாளையம் மட்டுமல்லாது பெருமாநல்லூர் திருப்பூர் காங்கேயம் அவிநாசி புளியம்பட்டி சத்தியமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த அதிசய வாளினை காண வந்தனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர்.

    நாமக்கல்:

    அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

    முகாமை நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் தொடங்கி வைத்தார். முகாமில் கூட்டுறவுச்சங்கங்களைச் சேர்ந்த 46 பேர்கள் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர். இதே போல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பொது மருத்துவ முகாம் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்றது.

    முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர். மேலும் முகாமில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • ரத்ததான சேவை விருது கலெக்டர் வழங்கினார்.
    • அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், ரத்ததான வங்கித் துறை தலைவர் சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     மதுரை

    மதுரை மருத்துவக் கல்லூரியில் ரத்ததான சேவையில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், ரத்ததான வங்கித் துறை தலைவர் சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாவட்ட எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் ஜெயபாண்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கி பாராட்டினார்.

    நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஹீமோகுளோபின் என்பது நமது ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகை புரதம் ஆகும். இதில் இருப்பு சத்து அதிகம் இருக்கும். நமது நாட்டில் பொதுவாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக காணப்படுகிறது.

    இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

    நெஞ்செரிச்சல், தலைவலி, உடல் சோர்வு, மயக்கம், நகம் உடைத்தல், உடலில் வலு இல்லாதது போல உணர்வது இப்படி பல அறிகுறிகள் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும்.



    இதில் அனைத்து அறிகுறிகளும் ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில அறிகுறிகள் சிலருக்கு இருக்கும்.

    ஹீமோகுளோபின் குறைய காரணம்:

    சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும்.

    பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
    இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. இதில் சிறு கவனக்குறைவு ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    இரத்தத்தை உறைய வைக்கும் இரத்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இரத்த தானம் செய்வீர். உயிர் காப்பீர் என்ற வாசகம் சந்து பொந்துகள் வரை பளிச்சிடுகிறது. சிறு கவனகுறைவு ஏற்பட்டால் கூட அந்த இரத்தம் உயிரையும் எடுக்கும் என்பதற்கு எச்.ஐ.வி. தொற்று இரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்திய விவகாரம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது வயற்றில் வளரும் குழந்தையையும் பாதுகாக்க மருத்துவ உலகம் போராடுகிறது. இரத்ததானம் செய்த வாலிபரோ ஏற்கனவே 2016-லும் இரத்ததானம் செய்து இருக்கிறார். அப்போதே அவரது இரத்தத்தில் எச்.ஐ.வி. தாக்கி இருப்பதை கண்டறிந்து இருக்கிறார்கள். இதுபற்றி அவருக்கு ஆலோசனைகள் வழங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    நோய் தொற்று இருப்பது தெரியாமல் தற்போது அவரது அண்ணிக்கு இரத்தம் கொடுக்க வந்த போதும் அவரது இரத்தத்தை எடுத்து இருக்கிறார்கள். எச்.ஐ.வி. கிருமி இருப்பது தெரியாமலே அந்த இரத்தத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இரத்தத்தை ஆய்வு செய்வதில் கவனக்குறைவு ஒரு பக்கம் இருந்தாலும், எச்.ஐ.வி. தாக்கியவர் என்று ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவரிடம் இரத்தம் எடுத்தது எப்படி?

    சம்பந்தப்பட்ட வாலிபர் தனக்கு எச்.ஐ.வி. இருப்பதை அறிந்து நேரடியாக வந்து விபரத்தை சொல்லி தனது இரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாதீர்கள் என்று சொல்லி இருக்காவிட்டால்...? இரத்தம் கொடுப்பதும், ஏற்றுவதும் வண்டிக்கு பெட்ரோல் போடுவதுபோல் ஒருவரது உடலில் இருந்து அப்படியே மற்றொருவர் உடலுக்கு செலுத்திவிட முடியாது.

    உயிர்காக்கும் இரத்தம் எடுப்பது, சேமிப்பது, பகுப்பாய்வு செய்வது எல்லாம் அவ்வளவு சுலபமானதா என்று கேட்டால் இல்லவே இல்லை என்று அடித்து சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையினர். அரசோ, தனியாரோ இரத்த பரிசோதனை நிலையம், இரத்த வங்கி தொடங்க அனுமதி பெறுவது கூட சாதாரண விஷயமல்ல. அதற்கு பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

    தகுதி பெற்ற மருத்துவர், செவிலியர், லேப் டெக்னிஷியன், நவீன ஆய்வு கருவிகள், பரிசோதனை கூடம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல வசதிகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே முடியும். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம் நேரடியாக ஆய்வு செய்து திருப்தி ஏற்பட்டால் மருந்து கட்டுப்பாட்டு கழகத்துக்கு பரிந்துரைப்பார்கள்.

    இதையடுத்து மருந்து கட்டுப்பாட்டு கழகம் சோதனையை தொடங்கும். அவர்களும் முழு திருப்தி அடைந்தால் மத்திய அரசுக்கு அனுப்புவார்கள். இதையடுத்து மத்திய அரசு துறையும் ஆய்வு மேற்கொண்டு அதன் பிறகே லைசென்சு வழங்கப்படும். அறையின் அளவு குறைந்தாலோ அல்லது ஏ.சி.யின் அளவு குறைந்தால்கூட அனுமதி கொடுக்க மாட்டார்கள். அந்த அளவு நுணுக்கமாகவும், கண்டிப்பாகவும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

    சரி, ஆய்வகம், இரத்த வங்கி தொடங்கியாச்சு. இஷ்டம் போல் இரத்தம் எடுத்துவிட முடியுமா? அதற்கும் கட்டுப்பாடுகள் அதிகம்! இரத்தம் கொடுப்பதால் எந்த ஆபத்தும் வராது. அப்படியிருந்தும் இரத்தம் கொடுக்க பலர் முன்வருவதில்லை. எனவே இரத்த தானம் செய்ய வருபவர்களை வரவேற்று எல்லோரிடமும் 350 மி.லி. இரத்தம் எடுத்து விடுவார்கள். இரத்தம் எடுக்கும் போது இரத்தத்தின் எச்.பி. அளவு மற்றும் இரத்ததானம் செய்பவரின் உடல் எடையை மட்டும் பார்த்து எடுப்பார்கள்.

    பின்னர் அந்த இரத்தத்தின் மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்று அதில் எச்.ஐ.வி., மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எச்.பி.வி. ஆகிய 5 நோய் தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா? என்பது பகுப்பாய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எதுவும் இல்லை என்று உறுதி செய்த பிறகு மருத்துவரின் ஒப்புதல் பெறவேண்டும். அதன் பிறகு தான் அந்த இரத்தபை இரத்த வங்கியில் சேமிப்பு செய்யப்படும். இப்படித்தான் ஒவ்வொரு பை இரத்தமும் தீவிர பரிசோதனைக்கு பிறகே ஸ்டோரேஜ் செய்ய வேண்டும்.



    இந்த பரிசோதனையின் போது ஏதாவது இரத்தத்தில் எச்.ஐ.வி. நோய் தொற்று இருப்பது தெரிய வந்தால் உடனே அந்த இரத்தம் அழிக்கப்படும். அதோடு அந்த இரத்தத்தை கொடுத்தவர் பற்றிய விபரம் நம்பிக்கை மையத்துக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த நபரை உடனே அணுக வேண்டும். அவரை வரவழைத்து நம்பிக்கை மையத்தினர் அவரிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்கள். அது மிகவும் துல்லியமான பரிசோதனை. அந்த பரிசோதனையில் தான் எச்.ஐ.வி. இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.

    உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங், விழிப்புணர்வு, கூட்டு மருந்து சிகிச்சை ஆகியவை வழங்கப்படுவதோடு அவர் நம்பிக்கை மையத்தின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சில நேரங்களில் நம்பிக்கை மையத்தின் பரிசோதனையில் எச்.ஐ.வி. இல்லை என்றும் வருவதுண்டு. பொதுவாக சேமிக்கப்படும் இரத்தத்தை விட அழிக்கப்படும் இரத்தம் அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

    100 பேரிடம் இரத்தம் எடுத்தால் குறைந்தது 10 பேருக்காவது எச்.ஐ.வி. இருப்பதற்கான அறிகுறி தென்படுவதுண்டு. ஆனால் நம்பிக்கை மையத்தின் துல்லிய ஆய்வில் அதில் பலருக்கு இல்லாமல் கூட இருக்கும் என்கிறார்கள். இரத்தம் 36 நாட்கள் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். அதற்குள் வரிசைப்படி இரத்தத்தை பயன்படுத்துவார்கள்.

    இரத்த வங்கியில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்காக இரத்தம் தேவைப்படுவோருக்கு உடனே செலுத்திவிட முடியாது. இரத்தம் தேவைப்படுபவரின் இரத்தமும் செலுத்த வேண்டிய இரத்தமும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இரு இரத்தமும் ஒரே பிரிவு இரத்தம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானால் மட்டுமே பயன்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் இரத்த சோதனை மற்றும் இரத்த வங்கிகள் கண்காணிப்புக்காக நோடல் அதிகாரியாக ஒரு மருத்துவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவும் இருந்தும் தான் இப்படி....! எப்படி இருக்கு?

    அடையாளம் காணவேண்டும்

    ஒருவருக்கு இரத்தத்தில் எச்.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நம்பிக்கை மையத்தினர் தொடர்பு கொண்டு அழைக்கிறார்கள். அதில் சிலர் சிகிச்சை பெறாமல் எங்காவது சென்று விடுவதுண்டு. அப்படிப்பட்டவர்களை கண்டு பிடிப்பதும், அவர்களால் எய்ட்ஸ் பரவுவதை தடுக்கவும் வழியில்லை என்பது பலரது கருத்து.

    இதை தடுக்க குருதி கொடையாளர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்துவது பற்றியும் பரிசீலித்து வருகிறார்கள். இந்த முறையை அமல்படுத்தினால் அவர்கள் இரத்ததானம் செய்வதையாவது தடுக்கலாம் என்கிறார்கள்.
    இரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.
    சாத்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும்.

    பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும்.

    சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும்.

    பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம்.

    250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.

    அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும்.



    இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும்.

    என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும்

    மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும்.

    இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

    தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள்.

    பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும்.

    ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

    சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும்.

    ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும்.

    ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,
    முன்னாள் துணை இயக்குனர்,
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்.
    சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். #kanimozhi #HIVBlood #PregnantWoman
    சென்னை:

    திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக் குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார்.

    இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். 

    சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது போதுமானதல்ல.  உடனடியாக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  #kanimozhi #HIVBlood  #PregnantWoman
    ×