search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomatoes"

    • தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன.
    • வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும்.

    சருமத்துக்கு அழகு சேர்ப்பதற்கு அழகுசாதனப் பொருட்களை சார்ந்திருப்பதால் மட்டும் பலன் கிடைக்காது. உண்ணும் உணவுப்பொருட்களும் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களில் சிலவற்றை பார்ப்போம்.

     தக்காளி:

    தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு பளபளப்பை அளிக்கக்கூடியவை. தக்காளியை `ஸ்கிரப்பாக' சருமத்திற்கு பயன்படுத்தலாம். சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதற்கு உதவும். சருமத் துளைகள் அதிகம் இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் தக்காளி உதவும்.

     டார்க் சாக்லேட்:

    சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் டார்க் சாக்லேட்டை பொறுத்தவரை இதயத்திற்கும், சருமத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது. இந்த சாக்லேட்டில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை நோய்த்தொற்றுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் இதில் உள்ள பிளவோனால்கள், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடியவை.

     அவகேடோ:

    வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துகள் அவகேடோவில் நிரம்பி உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படக்கூடியது. குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் முதன்மை பணியை மேற்கொள்ளும்.

    அத்துடன் அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். இதனை உட்கொள்வது சருமச் சுருக்கம், கரும்புள்ளிகள், விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றை தடுத்து சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும்.

     வால்நட்:

    இதில் சருமத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் கொழுப்புகள், வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம், புரதம் போன்ற சத்துகள் உள்ளடங்கி உள்ளன. அடிக்கடி பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் வால்நட்டை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும். மன அழுத்த அறிகுறிகளை கட்டுப்படுத்தி சரும நலனை பாதுகாக்கும்.

    • தக்காளி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கூட கிடைப்பதில்லை.
    • ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, இடையகோட்டை, மூலச்சத்திரம், வடகாடு, கேதையெறும்பு, பால்கடை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அதிகளவு தக்காளி பயிரிடப்பட்டது. தக்காளி தற்போது அதிகளவு விலைச்சல் அடைந்துள்ளது.

    விளைச்சல் அடைந்த தக்காளியை தரம் பிரித்து தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஒட்டன்சத்திரம் காமராஜர் மற்றும் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கனி மார்க்கெட்டிக்கு கொண்டு வந்து விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள்.

    இங்கிருந்து மதுரை, நெல்லை, உடுமலைப்பேட்டை பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியிலேயே காய்கறி மார்க்கெட்டுகள் அமைந்துள்ளதால் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.

    தினசரி 4 ஆயிரம் டன் வரத்து உள்ளது. 2 மார்க்கெட்டுக்கும் தலா 2 ஆயிரம் டன் தக்காளிகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து அதிகரித்ததால் ரூ.350க்கு விற்கப்பட்ட 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80முதல் ரூ.100 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ ரூ.10க்கு மட்டும் விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே தக்காளி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு குறைந்த அளவு லாபம் கூட கிடைப்பதில்லை.

    பறிப்பு கூலி மற்றும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் சரக்கு வேன் வாடகை கட்டணத்திற்கு கூட கட்டுபடியாகாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். பல ஆண்டுகளாக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தக்காளி சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.40க்கும், பல்லாரி ரூ.20க்கும் விற்கப்படுகிறது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர், அகரம், ரெட்டி யார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தக்காளி திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் உழவர் சந்தையில் 10 கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று 2 டன் மட்டுமே தக்காளி வரத்து வந்தது.

    இதனால் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் உழவர் சந்தையில் தக்காளி கடைகள் குறைவாகவே இருந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.24க்கு விற்கப்பட்டது. இன்று வரத்து குறைந்ததை அடுத்து விலை உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் செடியில் இருந்து காய்கள் உதிர்ந்து விட்டது. மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நீடித்தால் மேலும் விலை உயரும் என்று தெரிவித்தனர்.

    இந்த தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • உச்சத்தில் விற்ற தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.
    • போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை 1கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையானது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு ரேசன் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுத்தது. சில வியாபாரிகள் தக்காளி விற்றே லட்சாதிபதி ஆனார்கள். ஆனால் தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.

    தேனி மாவட்டம் போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தக்காளி விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்தனர். ஆனால் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உரம், பூச்சி மருந்து பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    இதனால் ரூ.200க்கும் மேல் விற்ற தக்காளி தற்போது யாரும் வாங்க முன்வராத நிலையில் செடியிலேயே அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது.
    • தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

    தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.

    தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

    பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

    அதேபோல் தங்காளி ஜூஸ் 3 ஸ்பூன், உருளைகிழங்கு ஜூஸ் 2 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

    • ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்த போது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பலர் லட்சத்தில் சம்பாதித்தனர்.

    இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கவே இங்கிருந்து ஏற்றுமதியான தக்காளி குறையத்தொடங்கிய நிலையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. ரூ. 28 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் தக்காளி, தற்போது வெளிச்சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளிகள் ஒரு டிப்பர் ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தைகளில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விலை உச்சத்தில் இருந்தபோது, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இங்கிருந்து சென்ற தக்காளி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கிவிட்டதால், இங்கு பற்றாக்குறை இல்லை. ஆகவே விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
    • இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்தது.
    • தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு நாள் ஒன்றுக்கு 100-டன் காய்கறி கள் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.

    இதில் தக்காளி மட்டும் 30 டன் வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து புதுவை பெரிய மார்க் கெட்டுக்கு தக்காளி வரவழைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. புதுவைக்கு நாள்தோறும் 10 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால் தக்காளி ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனையானது. இதனால் மக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தனர். தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்தது.

    இதனால் 4 நாட்களுக்கு முன்பு தக்காரி ரூ.100 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுவையில் இன்று தக்காளியின் வரத்து 20 டன்னை நெருங்கியது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டியின் விலை ரூ.500-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ரூ.60 விலையில் விற்கப்பட்டது. தக்காளி விலை குறைவால் மக்கள் சற்றே நிம்மதிய டைந்துள்ளனர்.

    • இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஏறுமுகத்தில் தக்காளியின் விலை உள்ளது. இடையில் சற்று விலை குறைந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக குறையும் என எண்ணி பொதுமக்கள் தக்காளிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    இருந்தாலும் அந்த விலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மீண்டும் தற்போது தக்காளி விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.100-க்கு தக்காளி விற்கப்பட்டது. ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே தக்காளிகளை வாங்கி செல்கின்றன. சமையலில் தக்காளிக்கு பதில் வேறு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.

    தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வரும் தக்காளியின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது :-

    வெளியூரில் இருந்து தஞ்சைக்கு வழக்கத்தை விட குறைவான அளவிலே தக்காளி லோடுகள் வருகின்றன. விளைச்சல் பாதிப்பால் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. தொடர்ந்து வரத்து இதேபோல் குறைந்தால் தக்காளி விலை இதைவிட அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரித்தால் மட்டுமே தக்காளியின் விலை குறையும் என்றனர்.

    • சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் பல காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    தக்காளி

    ரூ.120 ஆக நீடிப்பு

    சமீப காலமாக சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து அதே விலை நீடித்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 70 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனையாகிறது .

    பீன்ஸ் ரூ. 105

    உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு, உருளை கிழங்கு 34, பெரிய வெங்காயம் 25-30, பச்சை மிளகாய் 70-75, கத்திரி 30-36, வெண்டைக்காய் 30-32, முருங்கைக்காய் 30-40, பீர்க்கங்காய் 40-44, சுரக்காய் 20-25, புடலங்காய் 24-26, பாகற்காய் 50-55, தேங்காய் 20-28, முள்ளங்கி 18-20, பீன்ஸ் 95-105, அவரை 50-55, கேரட் 56-62, மாங்காய் 25-30, வாழைப்பழம் 30-55, கீரைகள் 20-24, பப்பாளி 20-24, கொய்யா 30-45, மாம்பழம் 40-60, ஆப்பிள் 180, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.   

    • திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளி பயிரிட்டு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தை, மொத்த மார்க்கெட்டுகளில் விலை குறையாததால் சில்லரை விற்பனையிலும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ள ப்பட்டனர்.

    வரத்து குறைவு மற்றும் வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இடைய கோட்டை, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கடந்த சித்திரை மாதம் தக்காளி நடவு செய்தனர். அதை 70 நாளில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனை செய்தபோது அதிக வரத்தால் மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கியதால் போக்குவரத்து செலவிற்கு கூட கட்டுபடியாகாததால் விவசாயிகள் தக்காளியை பறித்து சாலை ஓரங்களில் கொட்டிய காலம் ஏற்பட்டது.

    சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது, மாறுபட்ட சிதோஷண நிலை, திடீரென தக்காளி விளைச்சல் வரும் நேரத்தில் பெய்த மழை, வெயில் உள்ளிட்ட பருவ நிலை மாறுபாட்டால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் பலரும் தக்காளியை பயிரிட விரும்பவில்லை. இதனால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    அதன்பிறகு தக்காளி பயிரை அழித்து மாற்று விவசாயத்திற்கு விவசாயி கள் சென்று விட்டனர். வரத்து குறைந்ததால் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நகரத்திற்கு ஏற்ற வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோவில் 10 முதல் 15 தக்காளிகள் வரை இருக்கும். இன்றைய விலையை கணக்கு பார்த்தால் ஒரு தக்காளி ரூ.13 என்ற விலையில் உள்ளது.

    கடந்த 70 நாட்களுக்கு முன்பு நடவு செய்து தற்போது பறித்து விற்ப னைக்கு அனுப்பி வரும் கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.

    இது குறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், பக்கத்து தோட்டத்தில் தக்காளி பயிரிட்டதால் அதை பார்த்து மற்ற அனைத்து விவசாயிகளும் தக்காளியையே பயிரிடுவ தால் வரத்து அதிகரிக்கு ம்போது விலை கிடைப்ப தில்லை.

    இதனையடுத்து விவசாயி கள் மற்ற விவசாயத்திற்கு மாறிய நேரத்தில் நான் 2 ஏக்கர் அளவில் தக்காளி நடவு செய்து கவனத்தோடு முறையாக பராமரித்து வந்ததால் தற்போது 3 நாளைக்கு ஒரு முறை 14 கிலோ கொண்ட பெட்டியில் 30 பெட்டிகள் வரை தக்காளி கிடைக்கிறது.

    வரத்து குறைந்த நேரத்தில் தக்காளியை பறித்து ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.900 முதல் ரூ.1300 வரை வியா பாரிகள் வாங்குகி றார்கள்.

    வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரி கள் வாங்கி அதை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த முறை தக்காளி சாகுபடி எங்களுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது என்றார்.

    • தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
    • தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.

    நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.

    பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-

    தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.

    அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×