search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly market"

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.
    • வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

    உடன்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்வதும். பின்பு மழை தணிவதுமாக இருந்தது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 37 மில்லிமீட்டரும், மற்ற 2 பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிக பட்சமாக சேரன்மகாதேவியில் 11.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில்1 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 108 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, தென்காசி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குலசேரகன்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு இன்று காலை நிலவரப்படி 60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், சூரன்குடி, வைப்பார், விளாத்திகுளம், கீழ அரசடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    உடன்குடி பகுதியில் நேற்று திடீரென பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, மெய்யூர், தேரியூர், மாதவன்குறிச்சி, பிச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கனமழையால் வாரந்தோறும் திங்கட்கிழமை செயல்படும் உடன்குடி வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.

    • தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
    • தீபாவளி பண்டிகை வருவதால், நாளை (சனிக்கிழமை) வார சந்தை செயல்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நகராட்சியின் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறி மற்றும் தானிய வகைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வருவதால், நாளை (சனிக்கிழமை) வார சந்தை செயல்படும்.

    ஆகையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர மன்ற தலைவர் மு.கனியரசி, ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியாபாரிகளும் வருவார்கள்.
    • இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் வாரந் தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறு வது வழக்கம். ரம்ஜான் பக்ரீத் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டி கை நாட்களில் ஆடுகள் அதிக அளவில் விற்பனை யாவது வழக்கம். இதில் கள்ளக்குறிச்சி மட்டும் இல்லாமல் வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியா பாரிகளும் வருவார்கள். இந்த நிலை யில் வருகின்றதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு கிராமங்க ளில் மாவட்டங்களில் இருந் தும் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வார சந்தையில் ஒரே நாளில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாது.

    • ராமநாதபுரத்தில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    • தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் வாரச்சந்தை புதன்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

    தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் ஆட்டு வியாபாரிகள், கசாப்பு கடைகாரர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் அதிகமாக கூடினர். இதே போல் வீடுகளில் வளர்க்கப்பட்ட நாட்டு கோழி விற்பனை சூடு பிடித்து காணப்பட்டது. இதனால் சந்தை களை கட்டியது.

    வழக்கத்தை விட ஆடுகளின் விலை அதிக மாக உள்ளதாக கசாப்பு கடை வியாபாரிகள் தெரி வித்தனர். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டது. இன்று மட்டும் ஆடுகள், நாட்டுக் கோழிகள் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.
    • தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    காரிமங்கலம்:

    வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள், கோழி விற்பனைகளை கட்டியது. தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக வியாபாரிகள், கறி கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் அதிக அளவில் ஆடுகள் மற்றும் கோழி வாங்கி சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தையில் ஆடு, கோழி விற்பனைகளை கட்டியது. தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்வது வழக்கம்.

    அதனை தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கறி விருந்து நடைபெறும். அதற்கு இன்று கூடிய சந்தையில் ஆடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.

    வழக்கத்தை விட இந்த வாரம் கூடிய ஆட்டு சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    காரிமங்கலம் பகுதியில் தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    கடந்த வாரம் 10, 15 கிலோ கொண்ட ஆடு 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெற்று வருகின்றது.
    • பல லட்சங்கள் புரளும் வியாபார தளமாக இருந்து வருகின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் புகழ்பெற்ற மாட்டு வார சந்தை மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெற்று வருகின்றது.

    இந்த சந்தையில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாட்டு வியாபாரிகள் இந்த சந்தையில் ஒன்று கூடி மாடுகளை விற்பதும், வாங்குவதும் என பல லட்சங்கள் புரளும் வியாபார தளமாக இருந்து வருகின்றது.

    இந்த வாரச்சந்தையில் மாடுகள் மட்டும் இல்லாமல் காய்கறிகள், பழங்கள், கருவாடுகள், மரக்கன்றுகள், மாடுகளுக்கு தேவையான மூக்கணாம் கயிறு, சாட்டை ஆகியவற்றை வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை செய்வார்கள். தற்போது இந்த சந்தை மேம்படுத்தப்படாமல் குடிநீர், கழிவறைகள், சிமெண்ட் தரைகள், சுற்றுச்சுவர் மற்றும் கதவுகள் என அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை பெய்த மழையால் வாரச்சந்தை எங்கு பார்த்தாலும் சேரும், சகதியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த வாரம் வியாபார கடைகள் குறைந்து காணப்பட்டது.

    • தட்டார்மடம் போலீஸ் நிலையம் அருகே முன்பு செயல்பட்ட இடத்தில் மீண்டும் வாரச்சந்தை தொடங்கப் பட்டது.
    • வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டார்மடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை முறையாக செயல்பட்டு வந்தது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேலும் அந்த வாரச்சந்தை செயல்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்ததால் அதனை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று வாரச்சந்தை இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி தலைவர் சபிதா செல்வராஜ் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. அவைகளை முறையாக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காய்கறி மற்றும் இதர கடைகள் வருகிற வாரம் செயல்படும் என தெரிவிக்கப் பட்டது. வாரந்தோறும் புதன்கிழமை இந்த வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்ட பா.ஜனதா துணைத் தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. கிளை செயலாளர் முரளி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கிருஷ்ண குமார், கோவில் தர்மகர்த்தா ஆதி லிங்கராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சகாய் விஜயன், ஆடு வியாபாரிகள் கிருஷ்ணன், நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
    • கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
    • பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்,

    கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆபரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் பேரூராட்சி க்குட்பட்ட வார சந்தையை ரூ.1.35 கோடியில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்கி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாரச்சந்தை நடத்த போலீசார் தற்காலிக தடையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் திங்கள் தோறும் வாரச்சந்தை நடைபெறும். இதன் மூலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமம் பேரூ ராட்சி அலுவலகம் அருகே ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் வாரச்சந்தை கட்டிட கட்டுமான பணி தொடங்கியது.

    3 மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் முடிந்த நிலையில் தற்போது வரை புதிய வாரச்சந்தை வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. புதிய கட்டிடத்தில் கடை களை ஒதுக்குவதில் பேரூ ராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக வியாபாரிகள் புகார் தெரி வித்தனர்.

    இது தொடர்பாக பரமக்குடி கோட்டாட்சியர் வாரச்சந்தையை ஆய்வு செய்தார். அப்போது புதிய வாரச்சந்தை கட்டிடத்தில் 180 கடைகள் உள்ளதாகவும், அதில் வாரச்சந்தை வியா பாரிகள், சங்க வியா பாரிகளுக்கு 120 கடை களும், புது வியா பாரிக ளுக்கு 60 கடைகளும் வழங்கப்பட உள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதற்கு வாரச்சந்தை வியா பாரிகள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

    300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில் 120 கடைகள் மட்டும் ஒதுக்கினால் பிரச்சினை உருவாகும். எனவே அபிராமத்தில் வாரச்சந்தையை நடத்த போதுமான இட வசதி இல்லை எனக்கூறி அருகில் உள்ள நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர். இதனால் பொதுமக்கள் வாரச்சந்தை எங்கு நடைபெறும்? என குழப்பமடைந்தனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து இந்த பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அபிராமத்தில் வாரச்சந்தை நடத்த அனுமதி கிடையாது என தற்காலிக தடை விதித்து போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது.

    இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 10 கி.மீ. தொலைவில் உள்ள கமுதிக்கு சென்று காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள்.
    • ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை,

    அவிநாசி

    அவிநாசி நகரப்பகுதியில் கடைகள், வணிக நிறுவனங்கள் முன் அதிக அளவில் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறாா்கள். ஆகவே வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், காவல் ஆய்வாளா்கள் ராஜவேல், சக்திவேல்(போக்குவரத்து), நெடுஞ்சாலைத்துறை அலுவலா் சுப்பிரமணியம், பேரூராட்சி சுகாதார அலுவலா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வியாபாரிகள், வணிகா்கள், தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் சாலையோர கடைகள் அவிநாசி வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம் செய்யப்படும். அதேபோல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்க அனுமதி இல்லை, தள்ளுவண்டியில் விற்பனை செய்யும், உணவுப் பொருள்கள் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அனுமதி பெற்று நடத்த வேண்டும். வாரச்சந்தை வளாகத்தில் மாற்றிக் கொடுக்கப்படும் கடைகளுக்கு தற்போது பேரூராட்சி மூலம் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும். உழவா் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மட்டும் வேளாண்மை அலுவலக வளாகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும்.

    ஒலிபெருக்கி மூலம் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தற்காலிகமாக அடையாள அட்டை அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து சாலையோர வியாபாரிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும். மேலும், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் அக்டோபா் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    ×