search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goats sold for 5 crores"

    • வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் இருந்து குவிந்தனர்.
    • ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகின.

    விழுப்புரம்: 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பழமைவாய்ந்த வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் இருந்து குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் வேலூர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆடு வளர்ப்பவர்கள் செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் வாகனத்தில் செஞ்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து ஏராளமான வியாபாரிகளும் செஞ்சி சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கினர். ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகின. சுமார் 10 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

    மேலும், செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்ச லுக்காக மலையும் காடுகளும் சார்ந்த பகுதி என்பதால் இங்கு வள ர்க்கப்படும்ஆ டுகளின் கறி சுவையாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்து ஆடுகைளை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்தையில் மாடுகள், கோழிகள்ஆகியவைகள் விற்பனையாகின. மாட்டுப் பொங்கலுக்கு கால் நடைகளுக்கு தேவையான கழுத்தில் கட்டும் கயிறுகள், கால்நடைகளுக்கு கட்டப்படும் சலங்கைகளை கால்நடை வளர்ப்பவர்கள் காலையிலேயே வாங்கி சென்றனர்.

    ×