search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weight fraud"

    • எடை மோசடியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இதில் வெளி மாவட் டங்களில் இருந்து சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்க முடிவதால் வாரச் சந்தைக்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

    வாரச் சந்தையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பழங்கள், காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் விலையை குறைத்து விற்பதாக கூறி, எடை குறைந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    விலை குறைவாக உள்ளதே என்று கிராம பொதுமக்களும் இந்த சந்தையில் பொருள்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இவ்வாறு வாங்கிச் செல்லும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாரச் சந்தையில் ஆய்வு செய்து உடனடியாக மோசடியைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். நுகர்வோர் அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வாரச் சந்நுதையில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும், வாரச் சந்தையின் போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மோசடி எடையளவுகளை பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் வாரச்சந்தையில் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடை மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதி மற்றும் வாரச் சந்தையில் எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசு களில் முறைகேடு செய்து எடை குறைவாக பொருட்கள் விற்பனை நடைபெறு வதாக புகார் எழுந்துள்ளது.

    மளிகை, காய்கறி, பழக் கடை உள்பட அனைத்து கடைகளிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருட்கள் எடைபோட எடைக்கற்கள் பயன்படுத்தப் பட்டது. எடைகற்கள் சரியான எடையில் இருக்கி றதா? என ஆய்வு செய்து முத்திரை யிடப்பட்டு வந்தது.

    நாளடைவில் பெரும்பா லான கடைகளில் எடைகற்க ளில் முத்திரை இல்லாமல் பயன்படுத்த தொடங்கினர். மேலும் எடைக்கற்கள் தேய்ந்து விடுவதால் கிலோவிற்கு 150 கிராம் முதல் 200 கிராம் எடை வரை குறைவாகி விடுவதும் உண்டு. இதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக் தராசு மூலம் எடை போடும் முறை பயன்பாட்டுக்கு வந்தது.

    எலக்ட்ரானிக் தராசில் பொருட்களை வைத்ததும் அதன் எடை குறியீடு டிஜிட்டல் முறையில் தெரியும். இதனால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான எடை இருப்பதாக நம்பி வாங்கி செல்லும் நிலை உள்ளது. சமீப காலமாக வியாபாரிகள் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடையை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அபிராமம் பேருராட்சியில் சுற்றியுள்ள 90-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மேல் இருப்பதால் இங்கு வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை வாரச்சந்தை நடபெறுகிறது. இதேபோல வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தினங்களில் சந்தை நடைபெறும். இந்த சந்தைகளில் காய்கறி, பழங்கள், மீன், தானிய வகைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    வாரச்சந்தைகளில் வாங்கும் பொருட்களுக்கு தராசில் உள்ள டிஜிட்டல் அளவு சரியாக காட்டி னாலும், 200 கிராம் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    எடை குறைவாக இருக்கும் வகையில் எலக்ட் ரானினிக் தராசுகளில் வியாபாரிகள் மோசடி செய்துள்ளனர். எடை கற்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டிற்கான முத்திரை யிடப்படுவதில்லை.

    இதுபோன்ற தவறுகள் வாரச்சந்தைகளில் தான் அதிகமாக நடந்துவருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து அபிரா மத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், வாரச்சந்தை கடைகளில் 1 கிலோ பொருட்கள் வாங்கிய தில் மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் அடைந்தேன். அதை வேறு இடத்தில் எடை போடும்போது ஒரு கிலோவிற்கு 150 கிராம் குறைவாக இருந்தது.

    வாரச்சந்தை கடைகளில் உள்ள கடைகளில் வாங்கும் பொருட்கள் எடை குறைவாக உள்ளன. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விலை குறைவாக விற்பதாக கூறி எடையை குறைத்து விடு கின்றனர். எலக்ட்ரானிக் தராசுகளில் இதுபோல் முறைகேடு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. அபிராமம் பகுதியில் வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும், தராசுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அபிராமம் வாரச் சந்தையில் எடை மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு உட்பட்ட காடனேரி, நத்தம், அச்சங்குளம், அகத்தாரிருப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அபிராமத்தில் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

    இங்கு பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் வியாபாரிகள் தராசில் இரும்பு எடை கற்களால் எடை போடுகின்றனர். இதில் எடை குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறிகளை அள்ளி போட்டு ஒரு பக்க தராசு தட்டு தரையை தொடும் அளவிற்கு செய்கின்றனர்.வீட்டில் எடை போட்டால் குறைகிறது.

    எங்களை வியாபாரிகள் நூதன முறையில் ஏமாற்றுகின்றனர். வசதி உள்ளவர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குகிறார்கள். நாங்களோ நம்பி இருப்பது வாரச்சந்தையை தான். சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்துபவர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்திரையிட்டு அனுமதி பெற வேண்டும்.

    இதை பெரும்பாலான விற்பனையாளர்கள் பின்பற்றுவதில்லை. இதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    ×