என் மலர்

    நீங்கள் தேடியது "untouchability"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று உறுதிமொழி ஏற்றனர்.

    திருவாரூர்:

    தேசத்தந்தை காந்தியடி களின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி மேற்கொள்ள ப்பட்டது.

    வெண்ணவாசல் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று உறுதி மொழி ஏற்றனர்.

    இதுபோல் கொண்டையானிருப்பு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமையிலும், தீபங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வ ராணி, திருப்பள்ளிமுக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆசிரியர் கோமதி, பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வீரமணி, பூங்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
    • ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவோணம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கிளாமங்கலம் கிராமத்தில் நிலவும் தீண்டாமை கொடுமையை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், திருவோணம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு நீலமேகம், சுரேஷ்குமார், செல்வம் ஆகியோர் தீண்டாமை கொடுமையை கண்டித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு ராமசாமி, மாநகர செயலாளர் வடிவேலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-வது மாநில மாநாடு கருத்தரங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
    • மாநாட்டில் 10- மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 நிலையில் தேர்ச்சி பெற்ற தலித் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-வது மாநில மாநாடு கருத்தரங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். துணை செயலாளர் சரவணன் அஞ்சலி உரை வாசித்தார். துணை தலைவர் ஆனந்தன் தொடக்க உரையாற்றினார். செயலாளர் ராமசாமி களச் செயல்பாட்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ரமேஷ் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

    மாநாட்டில் 10- மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 நிலையில் தேர்ச்சி பெற்ற தலித் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

    சி.ஐ.டி.யூ. சீனிவாசன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.

    மாநாட்டில், மின்சார திருத்த மசோதாவை சட்டமாக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது, மின்துறையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை உடனே புதுவை அரசு கைவிட வேண்டும், அக்‌ஷய பாத்ரா திட்டத்தை கைவிட்டு மீண்டும் மதிய உணவு கூடம் மூலமே மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிர்வாகிகள் ராஜாங்கம், பெருமாள், கங்காதரன், ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அன்பழகன் விஸ்வநாதன், சலேத்தையன், பிரகாஷ், ஏகாம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி, கொடூரமாக தாக்கியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலத்தில் மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது உயர் சாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தலித் சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான்.

    ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Dalit Boys
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.

    மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நீதி துறை மந்திரி தெரிவித்துள்ளார். 
    ×