search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SCST Act"

    • பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
    • பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை.

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

    மேலும், "மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

    • பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
    • ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    அரசுப் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #suprecourt #scstact

    புதுடெல்லி:

    அரசு பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு பயன்கள் பெறுவதற்கு சில நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2006-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் விதித்து இருந்தது.

    இந்த தீர்ப்பை மறுபரி சீலனை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அரசு பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. #suprecourt #scstact

    தலித் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    தலித் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் செ.அன்பின் பொய்யா மொழி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் மயிலம் வீராசாமி தொடங்கிவைத்தார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முனுசாமி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எத்திராஜ், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் இரா.பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அஸ்வின், கே.கலை மணி அன்பின் பொய்யா மொழி ஆகியோர் முடித்து வைத்தனர்.

    மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் பார்க் கருணாகரன், மாநில அமைப்பு செயலாளர் அமரம்பேடு அரிரமேஷ், மாநில மாணவரணி செயலாளர் ராஜ்கமல், மருத்துவரணி செயலாளர் டாக்டர் கணேஷ், தலைமை நிலைய செயலாளர் பச்சமுத்து, மாநில மகளிரணி செயலாளர் காஞ்சி மஞ்சுளா, மாணவரணி தலைவர் சரத்குமார், மகளிரணி தலைவி அபிராமி, அமைப்பு செயலாளர் எழில் அரசி, காஞ்சி மாவட்ட செயலாளர் அருண், அமைப்பாளர் வேலன், இணை செயலாளர் ராஜி, இளைஞரணி செயலாளர் பாஸ்கர், அச்சரப்பாக்கம் ராமு, விழுப்புரம் வட்ட செயலாளர் பத்தன், மாவட்ட தலைவர் ரகு, இணை செயலாளர் வீரதேவன், ரவிச்சந்திரன், பார்த்திபன், தொண்டரணி தலைவர் ராஜதுரை, அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.#tamilnews
    ×