search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.சி. வன்கொடுமை சட்டத்தை வலியுறுத்தி தலித் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
    X

    எஸ்.சி. வன்கொடுமை சட்டத்தை வலியுறுத்தி தலித் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

    தலித் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சென்னை:

    தலித் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பாதுகாத்திட வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் செ.அன்பின் பொய்யா மொழி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் மயிலம் வீராசாமி தொடங்கிவைத்தார். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முனுசாமி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் எத்திராஜ், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் இரா.பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அஸ்வின், கே.கலை மணி அன்பின் பொய்யா மொழி ஆகியோர் முடித்து வைத்தனர்.

    மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் பார்க் கருணாகரன், மாநில அமைப்பு செயலாளர் அமரம்பேடு அரிரமேஷ், மாநில மாணவரணி செயலாளர் ராஜ்கமல், மருத்துவரணி செயலாளர் டாக்டர் கணேஷ், தலைமை நிலைய செயலாளர் பச்சமுத்து, மாநில மகளிரணி செயலாளர் காஞ்சி மஞ்சுளா, மாணவரணி தலைவர் சரத்குமார், மகளிரணி தலைவி அபிராமி, அமைப்பு செயலாளர் எழில் அரசி, காஞ்சி மாவட்ட செயலாளர் அருண், அமைப்பாளர் வேலன், இணை செயலாளர் ராஜி, இளைஞரணி செயலாளர் பாஸ்கர், அச்சரப்பாக்கம் ராமு, விழுப்புரம் வட்ட செயலாளர் பத்தன், மாவட்ட தலைவர் ரகு, இணை செயலாளர் வீரதேவன், ரவிச்சந்திரன், பார்த்திபன், தொண்டரணி தலைவர் ராஜதுரை, அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.#tamilnews
    Next Story
    ×