search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetarian"

    • உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்
    • முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன

    சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.

    இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்தனர்.

    இந்நிலையில், சைவ உணவு பிரிவுக்கான பச்சை நிற உடை நடைமுறை படுத்தப்படாது, அதற்கு பதிலாக அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே அணிவார்கள் என நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

    ஆனால், சைவ உணவுகள் தனியாகவே டெலிவரி செய்யப்படும் எனவும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

    மேலும், சிவப்பு, பச்சை ஆகிய இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.

    • சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்
    • இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன

    சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.

    இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

    சொமேட்டோவின் இந்த புதிய முன்னெடுப்பை இந்த பார்வையில் தான் நாம் பார்க்க வேண்டுமா?

    சொமேட்டோவின் இந்த புதிய சைவ அணி அறிவிப்பில் என்ன பிரச்சனை உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு, சைவ உணவு மட்டும் தயாரிக்கப்படும் உணவகங்களில் இருந்தும் சைவ உணவை மட்டும் டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் இருந்தும் வாங்க விரும்புவதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே எனறு ஒரு தரப்பினர் வாதம் முன்வைக்கின்றனர்.

    ஆனால், ஏற்கனவே சொமேட்டோ ஆப்-இல் எந்த உணவகங்களில் இருந்து நமக்கு எந்த உணவு வேண்டும் என்பதை ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. ஆகவே இந்த புதிய நடவடிக்கையால் சைவ உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்வார். அசைவ உணவுகளை டெலிவரி செய்யமாட்டார் என்பது மட்டுமே இதில் புதிய அம்சம்.

    எதற்காக இந்த புதிய அம்சம் தேவைப்படுகிறது?. ஒருவேளை சொமேட்டோ டெலிவரி ஊழியரின் உணவு பையில், ஒரு தயிர் சாதமும், பிரியாணியும் டெலிவரிக்காக உள்ளது. இதில் பிரியாணி சாப்பிடுபவர் அதன் பக்கத்தில் எந்த உணவு உள்ளது, அது தயிர் சாதமா இல்லையா என்று கவலைப்படுவதில்லை.

    ஆனால், அதே சமயம் சைவ உணவு மட்டும் உண்பவர் தனது உணவுக்கு பக்கத்தில் ஒரு அசைவ உணவு இருந்து விடுமோ, அதனால் தனது சைவ உணவு தீட்டு பட்டு விடுமோ என்ற அச்சம் தான் இந்த புதிய அறிவிப்பிற்கு வழிவகுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏன் அந்த அச்சம் ஏற்படுகிறது? சாம்பார் சாதம் பக்கத்தில் மீன் குழம்பு இருந்தால் என்ன? ரயிலில் தியேட்டரில் நமக்கு பக்கத்தில் இருப்பவர் யார் என்று பார்த்து பார்த்து தான் நாம் உட்காருகிறோமா? சைவ உணவு சாப்பிடும் ஒருவர் பக்கத்தில் அசைவ உணவு சாப்பிடும் ஒருவர்  உட்கார கூடாதா? அப்படி யாராவது சொன்னால் அதற்கு தீண்டாமை என்று பெயர்.

    அப்படிப்பட்ட தீண்டாமையை தான் சொமேட்டோ ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஆகவே உணவில் தீண்டாமையை ஊக்குவிக்கும் வேலையைதான், சொமேட்டோவின் இந்த புதிய Pure Veg Mode உருவாக்க வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பழங்குடிகள், இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் 19% மக்கள் மட்டும்தான் சைவ உணவுகளை உண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீபகவத் கீதை உணவு பழக்கத்திற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை விளக்குகிறது
    • அசைவ உணவு பழக்கத்தை கைவிடுவது கடினமான செயல் அல்ல

    இந்தியாவில் பெரும்பாலானோர்கள் அசைவம், சைவம் இரண்டையும் உண்பவர்களாகவும், குறைந்தளவில் சில பேர் சைவ உணவை மட்டுமே உண்ணும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். பிற நாடுகளில் பெரும்பாலும் அசைவ உணவே அன்றாட உணவு.

    சைவ உணவு பழக்கத்திலேயே பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் பொருட்களையும் உணவில் தவிர்க்கும் முறை வேகனிசம் எனப்படுகிறது. வேகனிசத்தை கடைபிடிப்பவர்கள் மிகவும் குறைவானவர்கள்.

    இன்று அக்டோபர் 1, 'உலக சைவ தினம்' என கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு மனிதரும் கடைபிடிக்கும் உணவு பழக்கம், அவர்களின் உடல் பலம், மன உறுதி மட்டுமின்றி ஆன்மிக தேடலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இந்தியாவில் பண்டைய காலம் முதல் சைவ உணவு பழக்கம் பெரிதும் போற்றப்படுகிறது. இந்திய கலாச்சாரம் போர், உயிர் கொலை, மிருக வதை உட்பட பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்து அதனால் பெறப்படும் எந்த வெற்றியையும் இன்பத்தையும் ஆதரிப்பதில்லை.

    அசைவத்தை அறவே ஒதுக்குமாறு கூறாவிட்டாலும் இந்திய கலாச்சாரத்திலும், இந்து மத நூல்களிலும் சைவ உணவு மிகவும் உயர்வாக பேசப்படுகிறது. இந்து மத புனித நூல்களில் ஒன்றான ஸ்ரீபகவத் கீதையில் உணவு பழக்கத்திற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பது விளக்கப்படுகிறது.

    நாம் கொண்டாடும் பண்டிகைகளிலும், பழக்க வழக்கங்களிலும் சில தினங்களுக்கு அசைவத்தை ஒதுக்கி வைப்பது நமது குடும்பங்களில் காலம் காலமாக நடக்கிறது.

    உடலாரோக்கியத்தில் செரிமானமே முக்கிய பங்கு வகிக்கிறது என அனைத்து மருத்துவ முறைகளும் ஏற்கின்றன. நல்ல செரிமானத்திற்கு சைவ உணவு உதவுவதை ஆங்கிலேய மருத்துவர்களே ஒப்பு கொள்கின்றனர்.

    குழந்தைகள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் வயோதிகர்கள் உட்பட அனைவருக்கும் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சைவ உணவிலேயே தேவைக்கு அதிகமாக உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நம்மில் பலர் அசைவ உணவு வகைகள் எங்கெங்கு கிடைக்கின்றன என்பதை தேடி தெரிந்து கொண்டு அங்கு சென்று ஒரு பிடி பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு உயிரை பலவந்தமாக கொன்று அதன் மாமிசத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவினால் நாவிற்கு கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி அசைவத்தை உண்ணும் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

    ஆனால், அது அத்தகைய கடினமான செயல் அல்ல.

    மீன்கள், கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் மனிதர்களை போன்றே உணர்வுள்ள ஜீவன்கள்தான். தன்னிடம் சிக்கி கொண்ட மனிதர்களை பிற மனிதர்கள் கொல்லும் போது, சிக்கியவர்களுக்கு ஏற்படும் வலியும், அச்சமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு மிக தீவிரமானது.

    உணவுக்காக கொல்லப்படும் உயிரினங்களும், அவை கொல்லப்படும் சில நொடிகள் இதே போன்றுதான் பரிதாபமாக தவிக்கும் என்பதை சில வினாடிகள் உணர்ந்து சிந்தித்தால், நம் மனதில் தோன்றும் இரக்கமே அசைவ உணவு பழக்கத்திலிருந்து நம்மை விடுபட வைக்கும்.

    தன்னூன் பெருக்கற்கு தான்பிறிது ஊனுண்பான்

    எங்ஙனம் ஆளும் அருள்

    தன் உடம்பை பெருக்க செய்வதற்காகவே மற்றோரு உயிரின் உடம்பை தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும் எனும் திருக்குறள் வாசகங்களை உணவு மேசைக்கருகே சுவற்றில் மாட்டி வைத்தால், தட்டில் அசைவம் இருந்தாலும் எடுத்து உண்ண மனம் வருமா?

    ஒரு குடும்பத்துக்கு அரை கிலோ ஆட்டிறைச்சி எடுத்து சமைப்பதே குதிரைக்கொம்பாக உள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் ஒருவர் 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக தின்று தீர்த்துள்ளார். #22KgMutton #Muttoneatingchallenge
    சென்னை:

    நோய்களுக்கு பயந்து அசைவப் பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறிவிட்டாலும், சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

    ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ.., என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

    22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சோற்றுத்தட்டில் உதறி எடுத்து, ரசித்து சுவைக்கும் சுகமே அலாதியானது. #22KgMutton  #Muttoneatingchallenge

    இதை வீடியோ வடிவில் காண..,



    ×