என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dr Ramadoss"
As I wait. For my hardwork called #ayogya to release. I did my best.more than an https://t.co/nThd9d438M always. I groomed my child since it came on my lap.BUT.not enuf??? #gajjnimohamed. My time will come. I continue my journey Gb pic.twitter.com/yjKHQitJ7O
— Vishal (@VishalKOfficial) May 9, 2019
Here is the release date of #Ayogya#AyogyaFromMay10@RaashiKhanna@TagoreMadhu@ivenkatmohan @rparthiepan @soniya_agg @SamCSmusic @LahariMusic @Screensceneoffl @AntonyLRuben pic.twitter.com/Bpz1d26sT2
— Vishal (@VishalKOfficial) April 8, 2019
செந்துறை:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
சிதம்பரம் தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மதுரையில் இருந்தவரை நான்தான் அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தினேன். அதற்காக இன்று என்னை பலரும் திட்டுகிறார்கள்.
2013-ல் தருமபுரி கலவரத்திற்கு பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கட்ட பஞ்சாயத்து, வன்முறை கும்பல் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொன்னேன்.
தலித் மக்களுக்காக நான் செய்த சேவைகளை பாராட்டி அவர்தான் எனக்கு தமிழ் குடிதாங்கி என்று பட்டம் சூட்டினார். ஆனால் தற்போது அரசியலுக்காக கேவலமாக பேசுகிறார். நான் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு உங்களை பேசினால் தான் நான் அரசியலில் வளர முடியும் என்கிறார்.
விவேகானந்தர் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார். ஆனால் இவரிடம் செல்லும் இளைஞர்களை தவறாக வழி நடத்தி சமூகத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். இதனை எண்ணி வெட்கபடுகிறோம், வேதனை படுகிறோம். ஆகையால் இந்த தேர்தலில் நீங்கள் அவருக்கு கொடுக்கும் பரிசு அவர் இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை 30 வருடங்களுக்கு முன்பாகவே திறந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. அதே போன்று அவரது காடு வெட்டி கிராமத்தில் இரட்டை குவளை முறையையும் ஒழித்தார். மேலும் பெரியாரே செய்ய துணியாத அழகாபுரம் கோவில் பிரச்சனையில் இரு சமூகத்தினரையும் மாலை அணிய வைத்து உள்ளே அழைத்து சென்றார்.
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நானும், குருவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தை நானும் காடுவெட்டி குருவும் போராடி பெற்று தந்தோம். ஆட்சிக்கு வராதபோதே பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறோம். இது போன்று எவ்வளவோ சொல்லி பார்த்தோம், பேசி பார்த்தோம் நடக்கவில்லை. தற்போது நல்ல சூழ்நிலை வந்து உள்ளது.
மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அப்போது சிதம்பரம் தொகுதியில் முக்கிய பிரச்சினைகளான ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
முந்திரி விவசாயிகள் பயனடையும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம்-அரியலூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்தை செயல்படுத்தவும் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை மற்றும் அந்த நிறுவனத்தில் அந்த விவசாயிகளை பங்குதாரர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று போராடி பெற்று தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #thirumavalavan #ramadoss #parliamentelection
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது.
இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார்.
ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் ஒரே மாதிரியான அணுகு முறையைத் தான் கடைபிடிக்கின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.
குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது வீட்டில் வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன.
இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறைதானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.
காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சி.பி.ஐ. தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
Here We Go....the First Look from my next movie, Ayogya....GB#Ayogya#AyogyaFirstLook#Vishal26@RaashiKhanna@TagoreMadhu@rparthiepan @ivenkatmohan @iamrascalpapa@SamCSmusic@AntonyLRuben@Karthikvenkatr4@art_murthi@gopiprasannaa@LightHouseMMLLPpic.twitter.com/ucFcRD3bqY
— Vishal (@VishalKOfficial) November 19, 2018
‘அயோக்யா’ திரைப்படவிளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018
திண்டிவனம்:
திண்டிவனம் அருக உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 11 நாட்கள் ஆகியும் இதுகுறித்து கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்தநாளில் 7 பேர் விடுதலை குறித்த நல்ல முடிவை கவர்னர் எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல்விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 30 நாட்களில் 31 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை தொடர்ந்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது.
தமிழக அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊழல் தான் பெருகி உள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிபெற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் இந்த 3 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 3 துறைகளுமே தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதி இல்லை. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும். ஆனால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து பா.ம.க. சார்பில் மிகபெரிய போராட்டம் நடத்தப்படும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து 3-வது நீதிபதி சத்யநாராயணன் அடுத்த வாரம் தீர்ப்பு அளிக்க உள்ளார். அந்த தீர்ப்பு எப்படியும் அரசுக்கு எதிராகத்தான் இருக்கும். தீர்ப்பு வந்தஉடன் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும். அரசை காப்பாற்ற கவர்னர் முயற்சி செய்யக்கூடாது.
2016-17-ல் தமிழக அரசின் ஊழல்குறித்து கவர்னரிடம் புகார் அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 2018 ஜனவரி முதல் செப்டம்பர் 15 வரையிலான தமிழக அரசின் ஊழல் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளேன். மீண்டும் கவர்னரிடம் ஊழல் பற்றி புகார் அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #drramadoss #Sterliteplant
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. முன்வைத்துள்ள நிலையில், பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. 2019 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது. ஆனால் மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல.ஏற்கனவே 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார்.
அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக்கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அரசு உடனடியாக பதவி விலகவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. #TNPSC #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்