search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Ramadoss"

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் விமர்சனம்.
    தாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த
    ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.

    பின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார். சென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.



    இதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.

    பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.



    ராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

    கடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா? பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.



    பார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.

    தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படம், இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். படத்தில் இடம்பெறும் வசனங்கள் மட்டும் மிகைப்படுத்தியிருப்பது போல தோன்றுகிறது.

    சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `அயோக்யா' குற்றம் குற்றமே.

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளியாக இருந்த `அயோக்யா' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் `அயோக்யா'. விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படம் இன்று (மே 10) திரைக்கு வர இருந்தது.

    ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கியை செலுத்திய பிறகே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.



    இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி, ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை  ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. #Ayogya #Vishal #Raashikhanna

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் `அயோக்யா' படத்தின் முன்னோட்டம். #Ayogya #Vishal #RaashiKhanna
    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள படம் `அயோக்யா'.

    விஷால் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடித்திருக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவாரியா, சோனியா அகர்வால், சச்சு, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனா கான் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - வி.ஐ.கார்த்திக், படத்தொகுப்பு - ரூபன், கலை - எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சி - ராம்-லக்‌ஷ்மன், கதை - வக்கந்தம் வம்சி, ஆடை வடிவமைப்பு - உத்ரா மேனன், பாடல்கள் யுகபாரதி, விவேக், ரோகேஷ், இணை இயக்குநர் - துரை கண்ணன், நடனம் - சோபி, பாஸ்கர், ஒலி - உதயகுமார், நிர்வாக தயாரிப்பு - டி.முருகேசன், தயாரிப்பு மேற்பார்வை - அந்தோணி சேவியர், இணை தயாரிப்பாளர் - பிரவீண் டேனியல், தயாரிப்பு - பி.மது, எழுத்து, இயக்கம் - வெங்கட் மோகன்.



    பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    இதில் விஷால் எதிர்மறை போலீஸ் கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளம்பெண் ஒருவருக்கு இளைக்கப்படும் கொடுமையால் தனது அயோக்யதனத்தை மாற்றிக் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது.



    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வருகிறது. #Ayogya #Vishal #RaashiKhanna

    அயோக்யா டிரைலர்:

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் - ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் உறுதிப்படுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் அயோக்யா படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக படத்தை ஏப்ரல் 19-ல் வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது படம் வருகிற மே 10-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. #Ayogya #Vishal #Raashikhanna

    பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #thirumavalavan #ramadoss #parliamentelection

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிதம்பரம் தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மதுரையில் இருந்தவரை நான்தான் அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தினேன். அதற்காக இன்று என்னை பலரும் திட்டுகிறார்கள்.

    2013-ல் தருமபுரி கலவரத்திற்கு பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கட்ட பஞ்சாயத்து, வன்முறை கும்பல் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொன்னேன்.

    தலித் மக்களுக்காக நான் செய்த சேவைகளை பாராட்டி அவர்தான் எனக்கு தமிழ் குடிதாங்கி என்று பட்டம் சூட்டினார். ஆனால் தற்போது அரசியலுக்காக கேவலமாக பேசுகிறார். நான் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு உங்களை பேசினால் தான் நான் அரசியலில் வளர முடியும் என்கிறார்.

    விவேகானந்தர் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார். ஆனால் இவரிடம் செல்லும் இளைஞர்களை தவறாக வழி நடத்தி சமூகத்தை சீரழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆதலால் இனிமேல் இது போன்ற தவறை செய்ய மாட்டேன். இதனை எண்ணி வெட்கபடுகிறோம், வேதனை படுகிறோம். ஆகையால் இந்த தேர்தலில் நீங்கள் அவருக்கு கொடுக்கும் பரிசு அவர் இந்த தொகுதியில் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.


    இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை 30 வருடங்களுக்கு முன்பாகவே திறந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. அதே போன்று அவரது காடு வெட்டி கிராமத்தில் இரட்டை குவளை முறையையும் ஒழித்தார். மேலும் பெரியாரே செய்ய துணியாத அழகாபுரம் கோவில் பிரச்சனையில் இரு சமூகத்தினரையும் மாலை அணிய வைத்து உள்ளே அழைத்து சென்றார்.

    ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக நானும், குருவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தை நானும் காடுவெட்டி குருவும் போராடி பெற்று தந்தோம். ஆட்சிக்கு வராதபோதே பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறோம். இது போன்று எவ்வளவோ சொல்லி பார்த்தோம், பேசி பார்த்தோம் நடக்கவில்லை. தற்போது நல்ல சூழ்நிலை வந்து உள்ளது.

    மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அப்போது சிதம்பரம் தொகுதியில் முக்கிய பிரச்சினைகளான ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

    முந்திரி விவசாயிகள் பயனடையும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம்-அரியலூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்தை செயல்படுத்தவும் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை மற்றும் அந்த நிறுவனத்தில் அந்த விவசாயிகளை பங்குதாரர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று போராடி பெற்று தருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #thirumavalavan #ramadoss #parliamentelection

    குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை கையூட்டு வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் செய்த தீமையும், துரோகமும் மன்னிக்கப்படக் கூடாதவை.


    சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட விரோதமாக குட்கா போதை பாக்குகளை விற்பனை செய்ய அனுமதித்ததன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பாக்கு பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது.

    இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார்.

    ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை அனைவரும் ஒரே மாதிரியான அணுகு முறையைத் தான் கடைபிடிக்கின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது வீட்டில் வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன.

    இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது. இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறைதானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.

    காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சி.பி.ஐ. தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #PMK #Ramadoss #Vijayabaskar #Gutka
    அயோக்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஷால் கையில் பீர் பாட்டில் இருந்ததற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு விஷால் விளக்கம் அளித்துள்ளார். #AyogyaFL #Vishal
    விஷால் அடுத்து நடிக்கும் படம் அயோக்யா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த போஸ்டரில் விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தது சர்ச்சையானது. ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    இந்த கண்டனங்களுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். ‘நான் பீர் பாட்டிலை கையில் வைத்திருந்தேனே தவிர குடிப்பதுபோல் இல்லை. கையில் வைத்திருப்பது குடிப்பதாக ஆகாது. இந்த படத்தில் நான் போலீசாக நடிக்கிறேன்.



    நான் துப்பறியும் ஒரு குற்றத்தில் அந்த பாட்டில் ஒரு தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சண்டையிடுவதாக காட்சி அமைந்துள்ளது. இதைத் தான் அந்த போஸ்டரில் சொல்லி இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். 

    வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். #AyogyaFL #Vishal #Ramadoss

    வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘அயோக்யா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ayogya #Vishal
    ‘சண்டக்கோழி 2’  படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அயோக்யா’.

    வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. போஸ்டரின் மூலம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி ரிலீசாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.
    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

    ‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #Ayogya #Vishal #RashiKhanna

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். #drramadoss #Sterliteplant

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருக உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 11 நாட்கள் ஆகியும் இதுகுறித்து கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்தநாளில் 7 பேர் விடுதலை குறித்த நல்ல முடிவை கவர்னர் எடுக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல்விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 30 நாட்களில் 31 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை தொடர்ந்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது.

    தமிழக அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊழல் தான் பெருகி உள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிபெற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் இந்த 3 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 3 துறைகளுமே தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதி இல்லை. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும். ஆனால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து பா.ம.க. சார்பில் மிகபெரிய போராட்டம் நடத்தப்படும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து 3-வது நீதிபதி சத்யநாராயணன் அடுத்த வாரம் தீர்ப்பு அளிக்க உள்ளார். அந்த தீர்ப்பு எப்படியும் அரசுக்கு எதிராகத்தான் இருக்கும். தீர்ப்பு வந்தஉடன் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும். அரசை காப்பாற்ற கவர்னர் முயற்சி செய்யக்கூடாது.

    2016-17-ல் தமிழக அரசின் ஊழல்குறித்து கவர்னரிடம் புகார் அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 2018 ஜனவரி முதல் செப்டம்பர் 15 வரையிலான தமிழக அரசின் ஊழல் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளேன். மீண்டும் கவர்னரிடம் ஊழல் பற்றி புகார் அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #drramadoss #Sterliteplant 

    பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சி போன்றவற்றை விற்பனை செய்ய தமிழக அரசு தடைவிதித்துள்ளது வரவேற்கதக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. முன்வைத்துள்ள நிலையில், பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. 2019 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள தமிழக அரசின் இந்த அறிவிப்பை பா.ம.க. வரவேற்கிறது. ஆனால் மக்காத, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல.ஏற்கனவே 7.5.2002 அன்று பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் 30.1.2003 அன்று வெளிப்படையான காரணம் எதுவும் இன்றி அச்சட்டத்தை திரும்பப்பெற்றார்.

    அப்போது அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் 15 ஆண்டுகள் கழித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு 2003-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலைமை, இப்போதைய புதிய அறிவிப்புக்கும் ஆகிவிடக்கூடாது. இந்த புதிய பிளாஸ்டிக் தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அரசு உடனடியாக பதவி விலகவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
    ×