search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS Bharati"

    • ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை திருவல்லி கேணியில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் அசோசியேசன் சார்பில் தனியார் ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சி சேர்மன் சிற்றரசு, நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முஹம்மது நபி வாழ்க்கையில் சமத்துவம் குறித்து இந்த விழாவில் சிறப்புரையாற்றப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, அன்வர் பாசா, நீலம் பாசா காதிரி, இர்பான், சதக்கத்துல்லா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வாழ்நாள் சேவை சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் பிரசிடன்ட் நாகூர் கலீபா சாஹிப் தென்னிந்திய தர்காக்கள் பற்றி புத்தகத்தை வெளியிட தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுகொண்டார். விழா ஏற்பாடுகளை அசோசியேசன் செயலாளர் முஜம்மில் ஜாபர் செய்திருந்தார். பொருளாளர் அபு மூசா நன்றியுரை கூறினார். பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • முதன் முதலில் காமராஜருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்து அதை நேருவை வைத்து திறக்க வைத்தார் கலைஞர்.
    • 2024-ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற ஒற்றுமையாக இருந்து வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று ஆர்.எஸ். பாரதி பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சதீஷ்குமார், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கலைஞர் தமிழ்நாட்டில் 13 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அருந்ததியின சமுதாய மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து அந்த சமுதாய மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க செய்தவர். இதேபோல் மீனவ மக்களை மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து அந்த மாணவர்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சிறக்க வைத்தார் . மீனவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து மண்எண்ணையை வாங்கி மானிய விலையில் ரூ.25-க்கு வழங்கினார். 3.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து சிறுபான்மையினரை காப்பாற்றியவர் கலைஞர். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி தொடங்கினார்.

    உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு செய்தார். ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்க காரணமாக இருந்தார். அவர் வழியில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு ரு. 10ஆயிரம், புதுமை பெண்கள் திட்ட மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், முதியோர் பென்ஷனை ரூ.1200 ஆக உயர்த்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ. 1500 ஆக உயர்த்தியுள்ளார். மேலும் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் வழங்க உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

    அமைச்சர் அனிதாராதாகி ருஷ்ணனை பழிவாங்க நினைத்தால் அது நடக்காது. அவரை அமலாக்கத்துறை ஒன்றும் செய்ய முடியாது. அவர் பட்டொளி வீசி பறப்பார். கனிமொழியை போன்ற எம்.பி. நாட்டுக்கு தேவை. மக்களுக்கு புரிகின்ற வகையில் பேசு என்றார் அண்ணா. அந்த வகையில் மக்களிடம் எளிதாக பேசி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருபவர்கள் கனிமொழி எம்.பி. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்க துறை ஒன்றுமே செய்ய முடியாது. அமலாக்கத்துறையே 2026-ல் காணாமல் போய்விடும். அரசியல் அனுபவம் இல்லாத ஆட்டுக்குட்டி அண்ணாமலை. நாகர்கோவிலில் அவர் கருணாநிதியை பற்றி தரகுறைவாக பேசியுள்ளார். அங்கு அவர் கருணாநிதி- காமராஜரை இழிவுபடுத்தி விட்டார் என்று பேசியிருக்கிறார். காங்கிரசை விட தி.மு.க. தான் காமராஜருக்கு அதிகம் செய்துள்ளது என்பது அவருக்கு தெரியாது. முதன் முதலில் காமராஜருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்து அதை நேருவை வைத்து திறக்க வைத்தார். கள்ளம் கபடம் இல்லாத நல்ல தலைவர் காமராஜர். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். இப்படி காமராஜருக்காக காங்கிரசை விட அதிகம் செய்தது தி.மு.க. தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2024-ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற ஒற்றுமையாக இருந்து வெற்றியைத் தேடித் தாருங்கள். ஒரு வளமான திட்டம் மீண்டும் தருவதற்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் மற்றும் பெண்களுக்கு தையல் மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், ரேவதி கோமதிநாயகம், ஆனந்த ராமச்சந்திரன் உளபட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வாள் சுடலை நன்றி கூறினார்.

    • உங்கள் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
    • வீடியோ காட்சியை அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்க வேண்டும்.

    சென்னை :

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை சார்பில் அவரது வக்கீல் ஆர்.சி.பால் கனகராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக இளம்வயதில் பொறுப்பு ஏற்றவர் அண்ணாமலை. கடந்த 14-ந் தேதி பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் அளித்த பேட்டியில், 'ஆருத்ரா கோல்டு' மோசடியில் பல கோடி ரூபாயை அண்ணாமலை பெற்றுள்ளதாக முதலில் குற்றம் சாட்டினீர்கள்.

    பின்னர், அண்ணாமலையும், அவரது கூட்டாளிகளும் ரூ.84 கோடியை பெற்றுள்ளனர் என்றும், எதற்காக பணத்தை இழந்த முதலீட்டாளர்கள் பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தினார்கள் என்றும் கூறியுள்ளீர்கள். ஆனால், கூட்டாளி யார்? யார் மூலம் எவ்வளவு தொகை பெற்றார்? என்ற விவரங்களை கூறவில்லை

    தி.மு.க.வினரின் ஊழல் குறித்த விவரங்களை என் கட்சிக்காரர் அண்ணாமலை வெளியிட்டதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான, சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தியுள்ளீர்கள்.

    நீங்கள் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அண்ணாமலை மறுக்கிறார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்திடம் இருந்து பெருந்தொகை பெற்றுள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டை கூறுவதாகவும் நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.

    எனவே, நீங்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை, சித்தரிக்கப்பட்டவை, அண்ணாமலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவை என்பது நிரூபணமாகிறது.

    இதனால் உங்கள் மீது கிரிமினல் வழக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம். எனவே, கடந்த 14-ந் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அந்த வீடியோ காட்சியை அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மேற்கொண்டு பரப்பக்கூடாது.

    இதை செய்யத் தவறினால், நீங்கள் என் கட்சிக்காரருக்கு 500 கோடியே 1 ரூபாயை மான நஷ்டஈடாக தரவேண்டும். அவ்வாறு தரும்பட்சத்தில், அந்த தொகையை பிரதமர் நலநிதிக்கு என் கட்சிக்காரர் வழங்குவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. மீதும் என் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறிய ஆர்.எஸ்.பாரதி தான் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்தார்.
    • ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு பாரதிய ஜனதா-தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

    தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை முன் வைத்த நிலையில் அவரது கைக் கடிகாரம் விவகாரத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி கிளறிவிட்டார். இந்த கைக் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், கைக் கடிகாரம் வாங்கியதற்கான ரசீது இருப்பதாகவும், அதை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடுவேன் என்றும் அப்போது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்து பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.

    அதன்படி கடந்த 14-ந்தேதி தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டா லின் மற்றும் சபரீசன் உள்பட 12 பேர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

    இந்த பட்டியல் மூலம் தி.மு.க.வுக்கு அவதூறு ஏற்படுத்துவதாகவும் 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அன்றைய தினமே பேட்டி அளித்திருந்தார்.

    ஆனால் இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கோடிகளில் சொத்து குவித்து வைத்திருக்கும் தி.மு.க.வினர் இருக்கும் போது ஆர்.எஸ்.பாரதி என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்பதா?

    பா.ஜ.க. மீதும் என் மீதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை கூறிய ஆர்.எஸ்.பாரதி தான் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்தார். இதற்காக விரைவில் நோட்டீசு அனுப்பப்படும் என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் தி.மு.க. சார்பில் வில்சன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் தனித்தனியாக அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி இருந்த னர். ஆனால் இன்னும் யாரும் வழக்கு தொடரவில்லை.

    இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அண்ணாமலை மீது எப்போது வழக்கு தொடரப்படும்? என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தனிப்பட்ட முறையில் தி.மு.க. பிரமுகர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அண்ணாமலையிடம் இருந்து எங்களுக்கு இன்னும் வக்கீல் நோட்டீசு வந்து சேரவில்லை. வக்கீல் நோட்டீசு முழுமையாக வரும்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    அவதூறு வழக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்சியிலும் அவதூறு வழக்குகள் சில சமயம் தள்ளுபடி ஆகி விடுகிறது.

    எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க அண்ணாமலையின் வக்கீல் நோட்டீசுக்காக காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்று அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
    • கலைத்துறை வாரிசுபோல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு?

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாட்டில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்துக் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறியுள்ளார். கலைத்துறையில் வாரிசுகள் வருவது போல், அரசியலில் வாரிசுகள் வருவதில் என்ன தவறு? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் வெற்றியை மட்டுமே தேடித் தந்துள்ளார் என்றும், அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    • எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர்.
    • கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது.

    சென்னை ஆர்.எஸ் புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை . உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர். எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி ஆகி விட்டனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது, அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×