search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor RNRavi"

    • நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.

    இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்ற 4 தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, இந்த மாணவர்கள் நமது மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என புகழாரம் சூட்டினார்.

    இதேபோல், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சனுக்கும், முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கும் வாழ்த்து.

    அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது, வருங்கால மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    • கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார்.
    • தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

    ஊட்டி,

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அப்போது அவர் முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்தநிலையில் அவர் மீண்டும் 5 நாள் பயணமாக நாளை (7-ந் தேதி) ஊட்டி வருகிறார். இதற்காக சென்னையில் விமானம் மூலம் கோவை வருகிறார்.

    இங்கிருந்து மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக கார் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

    கவர்னர் ரவி வருகிற 12-ந் தேதி வரை இங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பிறகே அவர் சென்னை திரும்ப உள்ளார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ஊட்டியில் தங்கியிருக்கும் அவர் நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய கேரள பகுதியான வயநாடு மாவட்டத்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கவர்னர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு உள்ளது.  

    • வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது.
    • காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் மோடியின் துணிச்சலான முயற்சி.

    வாரணாசியில் அடுத்த மாதம் 17-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலத்திற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருந்த ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை மீண்டும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

    சென்னையில் உள்ள செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மைசூருவில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் மற்றும் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் பங்குதாரர்களாக உள்ளன.

    இந்நிலையில் இந்த விழா குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாவது:

    காசியும், காஞ்சிபுரமும் சிவபெருமானின் இரு கண்கள் என்று புராணம் கூறுகிறது. வாரணாசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற தமிழ் இதிகாசங்களில் இந்த இணைப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிவியல், தொழில்நுட்பம், வானியல் போன்ற ஆய்வுகளின் சிறந்த மையங்களாக காசியும் காஞ்சிபுரமும் இருந்ததால் அது குறித்து விவாதிக்கப்படுகின்றன. காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் மோடி போன்ற ஒரு துணிச்சலான தலைவரின் துணிச்சலான பரிசோதனை முயற்சியாகும்.

    இந்த நிகழ்வுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காசி-தமிழ்ச் சங்கமத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நமது நாட்டின் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை நமது நாட்டு மக்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நிலை முரண்பாடானது, துரதிஷ்டவசமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு சட்டமசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
    • சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்யத்தான் நான் இருக்கிறேனே தவிர, அதிகார எல்லைகளை மீறுவதற்காக அல்ல. ஒரு சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைக்கவும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அதைக் கிடப்பில் போடவும் ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்திருக்கிறது.

    அரசின் செலவினங்களுக்கான பண மசோதாவாக இல்லை என்கிற பட்சத்தில், மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் அப்படியே ஒப்புதல் கொடுத்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் எதிர்பார்க்கிறதோ, அதையே செய்கிறேன் சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசனம் வகுத்துள்ள எல்லைக்கு உட்பட்டதுதான்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றாலும் சரி, அமைச்சர்கள் என்றாலும் சரி, அவர்களிடம் நல்ல நண்பராக நான் பழகுகிறேன். அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. அரசியல் ரீதியாக என்ன பேசப்பட்டாலும், ஊடகங்களில் கருத்து கூறப்பட்டாலும், என்னை அது பாதித்ததில்லை. அதுதான் எங்களுக்கிடையேயான தனிப்பட்ட நட்புறவு.

    தி.மு.க. அரசுடன் நல்லுறவை அனுபவித்து வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர். அவருடன் எனக்கு ஆழமான நட்புறவு உள்ளது. அவர் இந்த மாநிலத்துக்கும் அதன் மக்களுக்கும் நல்லதைச் செய்யும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார். அவரது திறனுக்கேற்றபடி சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதை எனது முன்னுரிமையாக வைத்துள்ளேன். தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டதாகும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் நல்ல பெயர் பெற்ற மாநிலம் தமிழகம். ஆனால் எஸ்.சி., ஆதிதிராவிடர், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தரவுகளை பார்க்கும் போது எனக்கு கவலை ஏற்படுகிறது. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றங்களுக்கான தண்டனை விகிதமும் குறைவாகவே உள்ளது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலையில் உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கட்டும், ஒரு குறிப்பிட்ட கைதியின் வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தது. அதுபோல மற்றவர்களின் விடுதலையிலும் உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கட்டும். அரசியல் சாசனத்தின் 142-வது ஷரத்து அளித்துள்ள அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    அதைச் செய்வதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. எனவே அதுதொடர்பான மனுக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பற்றி நான் ஏற்கனவே கூறியிருப்பதன்படி அது மிகவும் ஆபத்தான அமைப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×