என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணி செய்த கவர்னர் ஆர்.என்.ரவி
- மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
- கிண்டி காந்தி மண்டபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
சென்னை:
நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்று அங்குள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி தனது கையால் சுத்தப்படுத்தினார். அதன் பிறகு தரையையும் 'மாப்' பயன் படுத்தி சுத்தப் படுத்தினார். குப்பைகளை அகற்றினார்
அதன் பிறகு காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று தனது கையால் குப்பைகளை அகற்றிய அவர் ஒரு வாளியில் சேகரித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தன்னார் வலர்கள் சுமார் 300 பேர் இணைந்து காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று குப்பைகளை அகற்றி னார்கள். காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை கவர்னர் இந்த பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக `தூய்மையே சேவை' என்ற உறுதிமொழி யையும் ஏற்றுக் கொண்டார். கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Next Story






