search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேச்சேரியில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
    X

    மேச்சேரியில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

    • மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளது மேச்சேரி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் நுழைவுப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி நின்றது. கனரக வாகனங்க ள்செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது சாக்கடை வாரி இறைக்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கார்த்திக் போராட்டத்தை விளக்கிப் பேசினார், மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×