search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
    X

    கடத்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம்

    • செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடத்தூர்,

    தருமபுரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தருமபுரி தேர்தல் பணிக்குழு தலைவர் ஸ்டீல்ஸ் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, செந்தில், ராமசுந்தரம், முத்துசாமி, ஜெயகுமார், சிவகுமார், வணங்காமுடி, இமயவர்மன், ராமலிங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஜி.கே. மணி பேசும் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கட்சியின் 35-வது ஆண்டு துவக்கவிழா எழுச்சியோடு கொண்டாட வேண்டும். ஆழுகின்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கட்சியாக பாமக உள்ளது என பேசினார்.

    Next Story
    ×