search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Executive Meeting"

    • பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • அலங்கை ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே முடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் செல்லம்பட்டி முருகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, அலங்கை ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் செந் தில்குமார், பொருளாளர் ரேவதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப் பினர் செல்வம், ஸ்டாலின் வரவேற்றார். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரன் சிறப்புரையாற்றி னார். இந்த கூட்டத்தில் மது ஒழிப்பு மற்றும் தடை செய் யப்பட்ட போதை பொருட் கள் விநியோகத்தை கட்டுப்ப டுத்த வலியுறுத்தி தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் அலங்கை ஒன் றிய பெருந்தலைவர் சண் முகவேல் நன்றி கூறினார்.

    • கயத்தாறில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார். கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன், மாநிலதிட்டப்பொறுப்பாளர் ராம் ஆச்சாரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முனியசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் கருப்பசாமி, விவசாய அணி ஒன்றிய தலைவர் அரிச்சந்திரன், மாவட்ட நிர்வாகி கனகராஜ், பொதுச் செயலாளர்கள் பெருமாள்சாமி, வீரையாபாண்டி, ஒன்றிய பொருளாளர்கள் கதிர்வேல், மகேஷ் மற்றும் கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் காசிமாரியப்பன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் ஜெயா கல்வி குழுமங்களின் சேர்மன் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடந்தது.

    விருதுநகர் மாலட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணபெருமாள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலை வரும், சென்னை ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவருமான டாக்டர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி கற்றுத் தரும் விதத்தை 2 ரகமாக பிரித்து பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம். சுதந்தி ரத்திற்கு முன்பு, பின்னர் என்று எடுத்துக் கொள்ளலாம். கடும் எதிர்ப்புகளையும் தாண்டித்தான் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. வாயிலாக தரமான ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்க முடிந்தது. அதன் பலனாகத் தான் தமிழ்நாட்டுக்கு பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வெளிக் கொண்டு வரமுடிந்தது.

    கல்விக் கண் திறந்த காமராஜர் அவதரித்த புண்ணியபூமி என்பதால் விருதுநகர் மாவட்டம் அரசு தேர்வில் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. அரசு பள்ளிகளில் பல சலுகைகள் வழங்கப்பட்டாலும் நாம் என்றும் தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்க ளாகவும், ஒழுக்கத்தையும் வாழ்க்கையில் மேன்மையுற கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களை கற்றுதரும் சிறந்த கல்வி நிறுவனங்களாகவும் திகழவேண்டும்.

    தரம், நிரந்தரம் ஆக்கப்படும் போது தான் குழந்தைகளை பெரிய, பெரிய அதிகாரிகளாக வளர்க்க முற்படும் பெற்றோர்கள் நமது கல்வி நிலையங்களை தேடி வருவார்கள். அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விருதுநகர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    பள்ளி கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கக்கூடாது, விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளிகளுக்குதொடர் அங்கீகாரசான்று வழங்க வேணடும், ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும், அனைவருக்கும் ஒரே மாதிரியான, நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநில பொதுசெயலாளர் நந்தகுமார், சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளி நிர்வாகி சுரஜ்குமார் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் கந்தையா நன்றி கூறினார்.

    இதற்கான எற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
    • அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.


    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.

    ..........................

    மதுரை

    மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
    • ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    திருப்பூர்  :

    இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

    அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திராவிடர் கழகத்தின்ர கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்.

    அரவேணு

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஹரிச்சந்திரன் செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. வருகிற 1-ந் தேதி இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் படுக அகராதி வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவது .

    மேலும் தேயிலைக்கு குறைந்த பட்சம் ரூபாய் 30 விலை நிர்ணயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயி நிலங்களை சீரழித்து வரும் பன்றிகளை சுட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் சிவசுப்பிரமணி, நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேரள மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மங்கலம் :

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி அமைப்பான முஸ்லிம் யூத் லீக் அமைப்பின் கேரளா மாநில பொது செயலாளர் பி.கே.பிரோஸ் திருப்பூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்தார்.இந்நிகழ்ச்சியானது மங்கலம் நால்ரோடு அருகே உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் யூத் லீக் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் ஒன்றிய தலைவர் ஜக்கரிய்யா சேட் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த புத்தூர் பாபு துவக்கி வைத்தார்.இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் யூத் லீக், மாணவர் பேரவை நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செய்யது முஸ்தபா, மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், முஸ்லிம் யூத் லீக் மாநில செயலாளர் சிராஜ்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணை தலைவர் அப்பாஸ், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட செயலாளர் சல்மான்,துணை செயலாளர் முபீஸ்,மங்கலம் யூத் லீக் நகர தலைவர் சாதிக் அலி,பொருளாளர் ரியாஸ்,முஸ்லிம் மாணவர் பேரவை மங்கலம் நகர தலைவர் ஹக்கிம்,யாசர், கே.எம்.சி.சி.மாவட்ட தலைவர் அக்பர் அலி,மாவட்ட பொது செயலாளர் உவைஸ்,மாவட்ட செயலாளர் சாலிமார் அப்பாஸ்என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியில் முஸ்லிம் யூத் லீக் சார்பாக கேரள மாநிலத்திற்கு அரசியல் சுற்றுலா செல்வது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக ஒன்றிய செயலாளர் சாதிக் அலி நன்றி கூறினார்.

    • சின்னியம்பா–ளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் சின்னியம்பாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • தந்திர தின விழாவை சங்கத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை

    கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சின்னியம்பா–ளையம் கிளை நிர்வாகிகள் கூட்டம் சின்னியம்பாளையம் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சின்னியம்பாளையம் கிளை தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்து அனைவரையும் வரவேற்றார்.


    கூட்டத்தில் தலைமை கமிட்டியின் சார்பில் தலைமை தலைவர் முத்துப்பாண்டி, செய்தி தொடர்பாளர் தனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, முகக் கவசம் அணிவது, புகையிலை பொருட்களை தடை செய்வது போன்ற விழிப்புணர்வு நோட்டீஸ்களை அனைத்து கடைகளிலும் ஒட்ட செய்வது, சுதந்திர தின விழாவை சங்கத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அலுவலகப் பொறுப்பாளர் ஜெபராஜ், துணை தலைவர்கள் முருகன், கணேசன், ராஜா, துணை செயலாளர்கள் ஜஸ்பர், ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.
    • அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பெயரில் அறிக்கைகள் வெளியாகும் நிலையில், இருவரின் பெயரும் இன்றி தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட தீர்மானம்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பால் நேரு, மாநிலத் துணைத் தலைவர் சேது ஹரிஹரன், குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சுவாமி தாஸ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார்.

    சங்கரன்கோவிலில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக பஸ் நிலையம் கட்ட வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய பஸ் நிலையத்தை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த காய்கறி கடைகள் அனைத்தும் ஊருக்குள்ளே இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் நடராஜன், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மதி ராஜ் மற்றும் தனியார் மில் தொழிலாளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாகுபுரத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    ஆறுமுகநேரி:

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க 98-வது ஆண்டின் 7-வது செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன கலையரங்கத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நிறுவனத்தின் மூத்த செயல் உதவித்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தகசங்கத்தின் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் தலைவர் ஜெகதீசன்  தீர்மானங்களை விளக்கி பேசியதாவது:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துறையில் முக்கியப்பங்காற்றி வருகின்றன. இவற்றின் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதமும், ஏற்றுமதி வணிகத்தில் சுமார் 40 சதவீதமும் நடந்து வருகிறது.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விளிம்பு நிலை உச்சவரம்பை குறைக்க வேண்டும்.

    திறன்களுடன் கூடிய போதுமான மனிதவளத்தை பெற ஏதுவாக மாநிலம் முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்களை அரசு அமைக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலையைக் குறைக்கும் பொருட்டு மானிய விலையில் ஒதுக்கீடு செய்யும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

    நமது மாநிலத்தின் முதுகெலும்பாக தொழில் வணிகத்துறையில் முக்கிய பங்காற்றி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர்கள் ஜீயர்பாபு, ரமேஷ், பொருளாளர் ஸ்ரீதர், இணைசெயலாளர்கள் ராஜிவ், முன்னாள் தலைவர் நீதிமோகன், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன உதவித்தலைவர் சுரேஷ், துணை உதவித்தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் சுந்தரலிங்கம் நன்றி கூறினார்.
    கரூரில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலய கூட்டரங்கில் நடந்தது-. மாவட்ட அவை தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-

    வாங்கல் - மோகனூர் உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் மின்இணைப்பு கொடுக்கப்படாததால் இருள் சூழ்ந்தபடி இருக்கிறது. எனவே அங்கு மின்விளக்குகள் எரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வாங்கல் அல்லது தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கரூருக்கு புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் பஸ் நிலையத்தில் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும்.

    மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற கருத்தினை முன்வைத்து அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டி காட்டி ஊராட்சி சபை கூட்டம் நடத்த வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே. மணி, வக்கீல் மணிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, எம்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் எம். ரகுநாதன், ஆர்.கந்தசாமி, எம்.எஸ்.மணியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMK
    ×