என் மலர்
நீங்கள் தேடியது "நீர் மாசுபாடு"
- யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது.
- மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி பாஜக ஆட்சியை பிடித்தது. யமுனையை தாயை மீட்டெடுக்க போவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் யமுனை நதி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இப்படியே தொடர்ந்தால், டெல்லி தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை (DSIIDC) மூடுவதற்கு உத்தரவிடுவோம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் மன்மீத் ப்ரிதம் சிங் அடங்கிய அமர்வு, DSIIDC தாக்கல் செய்த நிலை அறிக்கைகளில் உள்ள தாமதங்களைக் குறிப்பிட்டு கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
ரூ. 2.5 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கான நிதி இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதும், எந்தவொரு மறுசீரமைப்புத் திட்டங்களும் இறுதி செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே நிலுவையில் உள்ள ரூ. 2.5 கோடி நிதியை இரண்டு வாரங்களுக்குள் நிதியை விடுவிக்குமாறு DSIIDC-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய போராட்டம் மற்றும் உயிர்பலிக்கு பிறகு மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், ஆலையை திறக்க விட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தூத்துக்குடியில் நீர்வளத்துறையின் ஆய்வு தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தியது வீணானது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறையின் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை எனவும், ஆய்வின் முடிவுகள் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளதாகவும் கிரிஜா வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், தமிழக அரசை கேட்காமல், நீர் வளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் மத்திய நீர்வளத்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan






