search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girija vaidyanathan"

    தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. #OPSYagam
    சென்னை:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 
    தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை என்றார்.



    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, ஆனூர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #OPSYagam
    தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த அனுமதி கேட்டிருப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கலந்து ஆலோசிக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    இதற்காக சந்திக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது இதுவரை பிரதமர் அலுவலகம் எந்த முடிவும் எடுத்து பதில் அளிக்கவில்லை.

    என்றாலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. எனவே விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகளும் டெல்லி செல்ல இருக்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்கள் குறித்தும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் நிலுவையில் உள்ள நிதியை விரைவாக தரக்கோரியும் எடப்பாடி பழனிசாமி இந்த சந்திப்பின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.


    இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி குறித்து கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 12-ந்தேதிக்குள் பதிலளிக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இது குறித்தும் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று தெரிகிறது.

    மேலும் தமிழ்நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளது. கூட்டணி குறித்தும் பேசப்படும் என்று டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் சில முக்கிய தீர்வுகளை தருவதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். #PMModi #EdappadiPalaniswami
    தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நீர்வளத்துறைக்கு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    சென்னை:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய போராட்டம் மற்றும் உயிர்பலிக்கு பிறகு மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், ஆலையை திறக்க விட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தூத்துக்குடியில் நீர்வளத்துறையின் ஆய்வு தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தியது வீணானது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறையின் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை எனவும், ஆய்வின் முடிவுகள் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளதாகவும் கிரிஜா வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், தமிழக அரசை கேட்காமல், நீர் வளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் மத்திய நீர்வளத்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    ×