search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indore"

    • சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
    • 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வந்தனர். அங்கு தங்கி இருக்கும் சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரி, "இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சிறிய தவறு செய்தாலும் தலைகீழாக தொங்கவிடுதல், இரும்பு கம்பியால் சூடு போடுதல், கட்டி வைத்து அடித்தல், அடுப்பில் காய்ந்த மிளகாயை போட்டு நுகர்ந்து பார்க்க வைத்தல், உள்ளிட்ட பல கொடுமைகளை இங்குள்ள சிறுவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

    இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, "தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக பரவி வரும் மர்ம வைரஸ் காய்ச்சலால் 64 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. #indoreunknownvirus

    இந்தூர்:

    மத்தியபிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த 4 மாதங்களில் அம்மாநிலத்தில் 64 பேர் பலியாகியுள்ளனர். இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள், போபாலில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    போபால் வைரஸ் ஆய்வு மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மொத்த மாதிரிகளில், 39 பேர் பன்றி காய்ச்சலாலும், 350 பேர் டெங்கு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் 64 பேரை கொன்ற வைரஸ் எந்த வகை வைரஸ் என்பது கண்டறியப்படவில்லை எனவும் கூறினர்.

    மத்திய பிரதேசத்தில் 72 பேர் ஏற்கனவே பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஐடிஎஸ்பி அமித் மலாக்கர் கூறுகையில், ‘ஆண்டுதோறும் பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் மரபணுக்கள் மாற்றம் அடைந்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த  மருந்துகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2015-ம் ஆண்டு காலிபோர்னியா பன்றிக் காய்ச்சல், ஹெச்1என்1 இறப்பு முதல் முறையாக பதிவு செய்யப்பட்டபோது பெயரிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிச்சிகன் ஹெச்1என்1 இன்ஃப்ளூஜென்ஸா என புதிய வகை வீரியமிக்க வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கிடையில் இந்த 64 நோயாளிகளின் மாதிரிகளில் காணப்படும் வைரஸ், பொதுவான காய்ச்சலுக்கான இயல்பு  கொண்டது. இருப்பினும், வைரஸ் வகை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

    இந்நோயாளிகள் கடுமையான குளிர் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. பன்றிக் காய்ச்சலைப் போல இந்நோயும் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக தாக்கி , இறப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், இது ஹெச்2என்3 எனும் புதிய தொற்றாகவும், இதற்கு அளிக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் வீரியம் குறைவாகவும் உள்ளது’ என கூறினார்.

    இதுவரை 510 பேர் ஹெச்1என்1 ஆல் தாக்கப்பட்டு பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 39 பேருக்கு இந்நோய் உள்ளது. இன்னும் 16 பேரின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #indoreunknownvirus  
    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    ×