search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GPS"

    • லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் தெரிந்துள்ளது.
    • முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் கல்குவாரி உள்ளது. குவாரிக்குள் இயங்குவதற்காக புதுப்பட்டியைச் சேர்ந்த மாலதி(வயது 32) என்பவருக்குச் சொந்த மான லாரி இயங்கி வந்தது.

    லாரி கடத்தல்

    ஆடி அமாவாசையை விடுமுறையை முன்னிட்டு லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் தெரிந்துள்ளது. இது குறித்து லாரி உரிமையாளர், டிரைவரிடம் கேட்ட போது அவர் தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.

    3 பேர் கைது

    இதையடுத்து மாலதி ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார், முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

    மேலும் லாரியை கடத்தி் சென்ற புதுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(38), பாலமுகேஷ்(34), மதன்(30) ஆகிய 3 பேரை் கைது செய்தனர்.

    • செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்ற காலாண்டு நுகர்வோர் கூட்டம், கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்டது. அதன் தீர்மான விபரம் தற்போது நுகர்வோர் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில்,தெருக்களில் சரியான முறையில் வாட்டமாக மழைநீர் வடிகால் அமைத்து, பிரதான ஓடை, ஆறுகளின் வழியாக தண்ணீர் வழிந்தோடி செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், 15வது நிதிக்குழு மானிய நிதியிலும், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளில் உள்ள தெருக்களில் நீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பு, வடிகால் அமைப்பு, தனிநபர் இல்லம் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    ஊராட்சிகளில் உள்ள குளங்கள் வற்றிய நிலையில் புதர், செடி, கொடி மண்டி, மரம் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு அதில் வழிந்தோடி வரும் மழைநீர் தடைபடும் வகையில் உள்ளது என நுகர்வோர் அமைப்பினர் கூறியிருந்தனர்.இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குளம், ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர் நிலைகளில் உள்ள புதர், செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாதந்தோறும் 5 மற்றும் 20-ந் தேதிகளில் கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் போன்ற மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் இந்த விளக்கம் குறித்து, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:-

    நுகர்வோர் அமைப்பினரின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் விளக்கமளிப்பது பாரட்டுக்குரியது,வரவேற்கதக்கது. அதே நேரம், சரியான தகவலை அளிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் சுத்தமாக இல்லை. உதாரணமாக நல்லாறு, கவுசிகா நதிக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.பல ஊராட்சிகளை ஒட்டிய சாலையோர மழைநீர் கால்வாய் புதர்மண்டி, மழைநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளன. எனவே, ஊராட்சிகள் வாரியாக ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் நீர்நிலைகளை சர்வே செய்து அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் யுடிராக் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஜி.பி.எஸ். பயன்பாட்டிற்கு வருகிறது. #GPS

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது. யுடிராக் என பெயரிடப்பட்டுள்ள இந்திய ஜி.பி.எஸ். சேவை இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பில் இருக்கும் விவரங்களை கொண்டு இயங்குகிறது.

    யுடிராக் ஜி.பி.எஸ். சேவை முழுக்க முழுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்களின் திட்டமிடலில் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்தியாவுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ். சேவை துவங்குவதற்கு முதல் காரணம் அமெரிக்கா தான் எனலாம். கார்கில் போரின் போது குறிப்பிட்ட பகுதியின் ஜி.பி.எஸ். விவரங்களை வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. அமெரிக்கா இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கென சொந்தமான ஜி.பி.எஸ். சேவை துவங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.



    இதுவரை பல்வேறு ஜி.பி.எஸ். செயலிகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜி.பி.எஸ். அமைப்புகளை சார்ந்து இயங்குகிறது. இந்தியாவின் யுடிராக் சேவையை கொண்டு ராணுவம் மற்றும் கடற்சார் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு இருவித நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. ஒன்று அனைவருக்குமான ஸ்டான்டர்டு பொசிஷனிங் சேவைகள் மற்றொன்று என்க்ரிப்ட், தடை செய்யப்பட்ட சேவைகள் அனுமதி பெற்ற பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு L5 மற்றும் S ஃப்ரீக்வன்சி பேன்ட்களில் வேலை செய்கிறது. யுடிராக் சேவை மிகவும் துல்லியமாக வழிகாட்டும் என்பதால் பயணிகள் மற்றும் ஹைக்கர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அமைப்பு ரஷயாவின் GLONASS அமைப்புடன் இணையும் வசதி கொண்டுள்ளது.
    ×