search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் திருட்டு"

    • நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி தனது காரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்த புரியில் இருக்கும் பழுது பார்க்கும் மையத்தில் சோதனைக்காக கொடுத்திருந்தார்.

    அந்த காரை அவரது டிரைவர் ஜோகிந்தர் திரும்ப பெற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த கார் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த கார் குருகிராம் நகரை நோக்கி சென்றதாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

    அந்த காரை மீட்டு தருமாறு நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    • காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கினார்.
    • அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் வசிக்கும் ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்நிலையில், நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர் காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

    இதுகுறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது.

    • உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் சுமை தாங்கி தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் கடந்த 24 ந் தேதி வைத்தியநாதபுரம் முத்தா ரம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் செந்தில் குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமார் நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வந்த னர். இந்த நிலையில் செந்தில்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் நேற்று மதியம் கோட்டார் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டி ருந்தது. இதை பார்த்த செந்தில் குமாரின் உறவி னர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தபோது காரில் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து காரை யாரும் எடுத்துச் செல்ல முடியாமல் முன் மற்றும் பின் சக்கரத்தில் பூட்டு போட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பூட்டு களை உடைத்து மர்மநபர் கள் காரை எடுத்துச் சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப் பட்டிருந்த காரை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலி பர்கள் காரின் பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னை பதிவு எண்ணை கொண்டது ஆகும். இதையடுத்து கார் பதிவின் மூலமாக உரிமை யாளரின் முகவரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் முக வரி கிடைக்க வில்லை .

    இதனால் அதன் உரி மையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கி டையில் காரில் போடப் பட்டிருந்த பூட்டை உடைத்து காரை திருடிச் சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை.

    வேலூர்:

    வேலூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த டிப்பர் லாரி திருடிய வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திர்கி (வயது 36) கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் (52) ஆகியோரை வேலூர் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த வழக்கில் 700 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.

    மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட திட்டமிட்டனர்.

    இருவரும் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மும்பையில் இருந்து ஒரு காரை திருடிக்கொண்டு பெங்களூரு வழியாக வேலூர் வந்தனர்.

    அப்போது, செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் சத்துவாச்சாரியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்றதுடன் ஆற்காடு அருகே லாரியின் ஜி.பி.எஸ் கருவியை அகற்றிவிட்டு நம்பர் பிளேட்டையும் மாற்றினர்.

    கர்நாடக மாநிலத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கரை எந்த ஆவணங்கள் இல்லாமல் வாங்க முடியும் என்பதால் முன்கூட்டியே தமிழக பதிவெண் கொண்ட வாகன நம்பருக்கு அவர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கியுள்ளனர்.

    அந்த பாஸ்டேக் எண்ணை லாரியில் ஒட்டிக்கொண்டு காரைக்கால் வரை சென்றனர். பின்னர் லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்றனர். அந்தப்பணத்தில் லாட்ஜூகளில் அறை எடுத்து தங்கி மது குடித்து விட்டு உல்லாசமாக இருந்தனர். மும்பையில் இருந்து திருடி வந்த காரிலேயே அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்றனர். செல்லும் வழியில் திருட்டு பணத்தில் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

    மும்பை காரை கொல்கத்தாவில் விற்றனர். பின்னர் கொல்கத்தாவில் வேறு ஒரு காரை மீண்டும் திருடிக்கொண்டு தமிழகம் வந்தனர். ஓசூரில் தங்கி அடுத்த கட்ட திருட்டுக்கு திட்டம் தீட்டியுள்ளனர். அந்த நேரத்தில் வேலூர் தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் இருவரும் வாகனங்களை திருடி அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததை தெரிவித்துள்ளனர்.

    இருவரையும் போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×