search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நின்ற கார் திருட்டு
    X

    கோட்டார் போலீஸ் நிலையம் முன்பு நின்ற கார் திருட்டு

    • உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் சுமை தாங்கி தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் கடந்த 24 ந் தேதி வைத்தியநாதபுரம் முத்தா ரம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் செந்தில் குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமார் நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வந்த னர். இந்த நிலையில் செந்தில்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் நேற்று மதியம் கோட்டார் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டி ருந்தது. இதை பார்த்த செந்தில் குமாரின் உறவி னர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தபோது காரில் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து காரை யாரும் எடுத்துச் செல்ல முடியாமல் முன் மற்றும் பின் சக்கரத்தில் பூட்டு போட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பூட்டு களை உடைத்து மர்மநபர் கள் காரை எடுத்துச் சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப் பட்டிருந்த காரை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலி பர்கள் காரின் பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னை பதிவு எண்ணை கொண்டது ஆகும். இதையடுத்து கார் பதிவின் மூலமாக உரிமை யாளரின் முகவரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் முக வரி கிடைக்க வில்லை .

    இதனால் அதன் உரி மையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கி டையில் காரில் போடப் பட்டிருந்த பூட்டை உடைத்து காரை திருடிச் சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×