search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வாடகைக்கு அழைத்து சென்று காரைதிருடி சென்ற 4 வாலிபர்கள் கைது
    X

    கோப்புபடம். 

    திருப்பூரில் வாடகைக்கு அழைத்து சென்று காரைதிருடி சென்ற 4 வாலிபர்கள் கைது

    • கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.
    • அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி, சூளையைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(60). வாடகை கார் வைத்துள்ளார். இவர் கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.

    அங்கு அவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் பேசி நெருக்கமானது. பின்னர் ஊட்டி சுற்றுலா செல்லலாம் என வாடகை பேசி காரில் புறப்பட்டனர்.இந்நிலையில், வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி டிபன் வாங்க சிவலிங்கம் இறங்கிச் சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரை எடுத்துக் கொண்டு தப்பியது. அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது காருடன் நான்கு பேர் கொம்பன் சுற்றி தெரிவது போலீசருக்கு தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் அருகே நடந்த சோதனையின் போது கார்த்திக்கு எது காரில் இருந்த நான்கு பேரையும் போலீசார் சுத்தியடைத்து கைது செய்தனர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பெருமாநல்லுாரைச் சேர்ந்த நந்தகுமார்,(20)ஜெயராம் (22), குன்னத்துாரைச் சேர்ந்த சபரீஸ்(28), மற்றும் ஒரு 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×