search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car theft"

    • காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கினார்.
    • அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் வசிக்கும் ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்நிலையில், நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர் காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

    இதுகுறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது.

    • அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடியும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடினார். இருந்த போதும் கார் கிடைக்கவில்லை.

    காரை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.
    • அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி, சூளையைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(60). வாடகை கார் வைத்துள்ளார். இவர் கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.

    அங்கு அவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் பேசி நெருக்கமானது. பின்னர் ஊட்டி சுற்றுலா செல்லலாம் என வாடகை பேசி காரில் புறப்பட்டனர்.இந்நிலையில், வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி டிபன் வாங்க சிவலிங்கம் இறங்கிச் சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரை எடுத்துக் கொண்டு தப்பியது. அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது காருடன் நான்கு பேர் கொம்பன் சுற்றி தெரிவது போலீசருக்கு தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் அருகே நடந்த சோதனையின் போது கார்த்திக்கு எது காரில் இருந்த நான்கு பேரையும் போலீசார் சுத்தியடைத்து கைது செய்தனர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பெருமாநல்லுாரைச் சேர்ந்த நந்தகுமார்,(20)ஜெயராம் (22), குன்னத்துாரைச் சேர்ந்த சபரீஸ்(28), மற்றும் ஒரு 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
    • முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூர்:

    சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தார்.

    கேளம்பாக்கம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டதாக கூறி ராஜ லிங்கத்தை தாக்கி காரின் சாவியை பறித்தனர். மேலும் கார் சாவியை போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வது அறியாமல் திகைத்த ராஜலிங்கம் அங்கிருந்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் வந்த தம்பதியினர் காரை திருடி தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜலிங்கம் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதில் கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.

    முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது வலது கைமுறிந்தது. சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர். திருடிய காரை அவர்கள் குறைந்த விலைக்கு விற்று இருப்பதும் தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.
    • கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    பல்லடம் :

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் ரேமன்ஸ் ராய் (வயது 45). இவர் கடந்த மாதம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் இவரது மாமனார் வீட்டிற்கு காரில் வந்துள்ளார். இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் காலை பார்த்த போது கார் காணவில்லை.கார் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று பல்லடம்- தாராபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் கடந்த மாதம் லட்சுமி மில் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல்(வயது 23), ஏகாம்பரம் மகன் பாரத் (22) என்பதும் இருவரும் சேர்ந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கார்,2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை.

    வேலூர்:

    வேலூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த டிப்பர் லாரி திருடிய வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திர்கி (வயது 36) கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் (52) ஆகியோரை வேலூர் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்த வழக்கில் 700 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.

    மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் குடும்பம் இல்லை. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து வாகன திருட்டில் ஈடுபட திட்டமிட்டனர்.

    இருவரும் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மும்பையில் இருந்து ஒரு காரை திருடிக்கொண்டு பெங்களூரு வழியாக வேலூர் வந்தனர்.

    அப்போது, செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் சத்துவாச்சாரியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்றதுடன் ஆற்காடு அருகே லாரியின் ஜி.பி.எஸ் கருவியை அகற்றிவிட்டு நம்பர் பிளேட்டையும் மாற்றினர்.

    கர்நாடக மாநிலத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கரை எந்த ஆவணங்கள் இல்லாமல் வாங்க முடியும் என்பதால் முன்கூட்டியே தமிழக பதிவெண் கொண்ட வாகன நம்பருக்கு அவர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கியுள்ளனர்.

    அந்த பாஸ்டேக் எண்ணை லாரியில் ஒட்டிக்கொண்டு காரைக்கால் வரை சென்றனர். பின்னர் லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்றனர். அந்தப்பணத்தில் லாட்ஜூகளில் அறை எடுத்து தங்கி மது குடித்து விட்டு உல்லாசமாக இருந்தனர். மும்பையில் இருந்து திருடி வந்த காரிலேயே அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்றனர். செல்லும் வழியில் திருட்டு பணத்தில் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

    மும்பை காரை கொல்கத்தாவில் விற்றனர். பின்னர் கொல்கத்தாவில் வேறு ஒரு காரை மீண்டும் திருடிக்கொண்டு தமிழகம் வந்தனர். ஓசூரில் தங்கி அடுத்த கட்ட திருட்டுக்கு திட்டம் தீட்டியுள்ளனர். அந்த நேரத்தில் வேலூர் தனிப்படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் இருவரும் வாகனங்களை திருடி அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததை தெரிவித்துள்ளனர்.

    இருவரையும் போலீசார் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாண்டிக்குடி அருகே கார் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள வாழைகிரி என்ற பகுதியில் தாண்டிக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்தபகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கார் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையை சேர்ந்த உதயநிதி என்ற மதி (வயது 27) என்பதும் அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த காரை திருடி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காருடன் உதயநிதி பட்டுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைதான உதயநிதி மீது பட்டுக்கோட்டையில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    வாடகை பணம் தருவதாக கூறி காரை திருடி சென்றவரை பெருந்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    ஈரோடு, பெரிய சேமூர், நந்தவனத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் சபீர் அகமது (வயது 33).

    இவர் ஈரோட்டை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த காரை கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்த ராஜாராம் என்கிற ராஜா அடிக்கடி வாடகைக்கு எடுத்தார்.

    அந்த வாடகை பணம் பாக்கி தரவேண்டியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 12-ந் தேதி ராஜாராமை சபீர் அகமது தொடர்பு கொண்டார்.

    பெருந்துறைக்கு நேரில் வந்து வாடகை பாக்கி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அழைத்துள்ளார். இதனை நம்பிய சபீர் அகமது பெருந்துறைக்கு காரில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் பகுதியில் காரை சாவியுடன் நிறுத்தி விட்டு அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த காரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ராஜாராமிற்கு போனில் தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரின் உரிமையாளருக்கு சபீர் அகமது தகவல் தெரிவித்தார்.

    பல்வேறு இடங்களில் காரை தேடியும் கிடைக்கவில்லை. எனவே கார் திருடப்பட்டது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ், ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், காந்தி மற்றும் லோகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை பெருந்துறை டோல்கேட் அருகேயுள்ள வாய்ப்பாடி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரை ஒட்டிவந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    எனவே அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நூதன முறையில் சபீர் அகமதுவை பெருந்துறைக்கு வரவழைத்து காரை திருடிச் சென்றதை ராஜாராம் என்கிற ராஜா ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்த அவர்கள் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
    பனியன் நிறுவன மேலாளர் காரை முகமூடி கும்பல் திருடி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    சேலத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மனைவி சல்மா. இவர்கள் திருப்பூர் ராக்கியா பாளையம் சொர்ணபுரி பகுதியில் வசித்து வருகிறார்கள். நவ்ஷாத் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பனியன் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    வாரம் ஒரு முறை இவர் குடும்பத்துடன் சேலம் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 14-ந் தேதி நவ்ஷாத் குடும்பத்துடன் சேலம் சென்றார். இன்று காலை அவர் திருப்பூர் வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டின் முன் புறம் நிறுத்தப்பட்டு இருந்த காரை காணவில்லை.

    நவ்ஷாத் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போய் இருந்தது. மேலும் அங்கிருந்த லேப்டாப்பும் திருட்டு போய் இருந்தது. இது குறித்து நவ்ஷாத் அனுப்பர் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    நவ்ஷாத் வீட்டின் முன் பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 1.40 மணிக்கு முகமூடி அணிந்த 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்வதும், அங்கிருந்த கார் சாவியை எடுத்து கொண்டு காரை திருடி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

    கார் பதிவெண் குறித்து திருப்பூர், பெருந்துறை டோல் கேட் மற்றும் ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
    காட்பாடி அழகாபுரி நகரில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட காரை மர்ம கும்பல் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி கிளித்தான் பட்டறை விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான காரை நேற்று இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இன்று காலையில் காரை காணவில்லை.

    இதனால் திடுக்கிட்ட ரங்கநாதன் அப்பகுதியில் காரை தேடி பார்த்தார். மேலும் அவரது வீட்டின் எதிரே உள்ள மெக்கானிக் கடையில் உள்ள சி.சிடி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கார் திருடப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது.

    நள்ளிரவு 2.12 மணிக்கு 2 வாலிபர்கள் ரங்கநாதன் வீட்டின் அருகே வந்து நோட்டமிடுகின்றனர். ஒருவர் டீ சர்ட்- சார்ட்ஸ் அனிந்துள்ளார். மற்றொருவர் லுங்கி, பனியன், அணிந்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் நோட்டமிட்ட அவர்கள் காரை கள்ள சாவிபோட்டு திறந்து ஓட்டி செல்கின்றனர்.

    கார் குடியாத்தம் ரோட்டில் செல்வது வரை காட்சிகள் பதிவாகி உள்ளது. இது பற்றி ரங்கநாதன் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அழகாபுரி நகரில் கடந்த சில மாதங்களில் 3 கார்கள் திருடப்பட்டன. 4-வது தடவையாக ரங்கநாதன் கார் திருடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கார் திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    ×