search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி அழகாபுரி நகரில் தொடர் கைவரிசை- 4 கார்கள் திருடிய கும்பல்
    X

    காட்பாடி அழகாபுரி நகரில் தொடர் கைவரிசை- 4 கார்கள் திருடிய கும்பல்

    காட்பாடி அழகாபுரி நகரில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட காரை மர்ம கும்பல் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி கிளித்தான் பட்டறை விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட மேஸ்திரி. இவருக்கு சொந்தமான காரை நேற்று இரவு வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இன்று காலையில் காரை காணவில்லை.

    இதனால் திடுக்கிட்ட ரங்கநாதன் அப்பகுதியில் காரை தேடி பார்த்தார். மேலும் அவரது வீட்டின் எதிரே உள்ள மெக்கானிக் கடையில் உள்ள சி.சிடி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கார் திருடப்பட்ட காட்சி பதிவாகியிருந்தது.

    நள்ளிரவு 2.12 மணிக்கு 2 வாலிபர்கள் ரங்கநாதன் வீட்டின் அருகே வந்து நோட்டமிடுகின்றனர். ஒருவர் டீ சர்ட்- சார்ட்ஸ் அனிந்துள்ளார். மற்றொருவர் லுங்கி, பனியன், அணிந்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் நோட்டமிட்ட அவர்கள் காரை கள்ள சாவிபோட்டு திறந்து ஓட்டி செல்கின்றனர்.

    கார் குடியாத்தம் ரோட்டில் செல்வது வரை காட்சிகள் பதிவாகி உள்ளது. இது பற்றி ரங்கநாதன் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அழகாபுரி நகரில் கடந்த சில மாதங்களில் 3 கார்கள் திருடப்பட்டன. 4-வது தடவையாக ரங்கநாதன் கார் திருடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கார் திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    Next Story
    ×