search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 youths arrested"

    • கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.
    • அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி, சூளையைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(60). வாடகை கார் வைத்துள்ளார். இவர் கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.

    அங்கு அவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் பேசி நெருக்கமானது. பின்னர் ஊட்டி சுற்றுலா செல்லலாம் என வாடகை பேசி காரில் புறப்பட்டனர்.இந்நிலையில், வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி டிபன் வாங்க சிவலிங்கம் இறங்கிச் சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரை எடுத்துக் கொண்டு தப்பியது. அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது காருடன் நான்கு பேர் கொம்பன் சுற்றி தெரிவது போலீசருக்கு தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் அருகே நடந்த சோதனையின் போது கார்த்திக்கு எது காரில் இருந்த நான்கு பேரையும் போலீசார் சுத்தியடைத்து கைது செய்தனர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பெருமாநல்லுாரைச் சேர்ந்த நந்தகுமார்,(20)ஜெயராம் (22), குன்னத்துாரைச் சேர்ந்த சபரீஸ்(28), மற்றும் ஒரு 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.
    • கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்

    கடலூர்:

    நெய்வேலி 21-வது வட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் அசோக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததுள்ளது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அசோக் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கி ஆபாசமாக திட்டி உள்ளனர்.

    மேலும் கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுகுறித்து மணிகண்டன் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அசோக். அரவிந்தன் (23). சுந்தரச் செல்வன் (23). முருகவேல் மகன் கணேஷ்குமார் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
    • 1.600 கி.கிராம் கஞ்சா, ரூ.23,500 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சாஸ்திரி ரோடு டெக்ஸ்டூல் பாலம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த கண்ணப்பன் (வயது 47), கணபதி வரதராஜன் நகரை சேர்ந்த சிவக்குமார் (51) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.600 கி.கிராம் கஞ்சா, ரூ.23,500 மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல், பீளமேடு போலீசார் அவிநாசி ரோடு தொட்டிபாளையம் பிரிவு வழியாக ரோந்து சென்றனர் . அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தொட்டிபாளையம் பிரிவு ஜெகதீஷ் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (23), நீலாம்பூரை சேர்ந்த கங்குலி(24) ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜபடுத்தப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். 

    • மதுரையில் ஆலையில் ரேசன் அரிசி பதுக்கிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கோழி தீவனமாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அரைத்து, கோழி தீவனமாக மாற்றி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் மதுரை மண்டல ரேசன் அரிசி தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் போலீசார், சோதனை நடத்தினர். அப்போது 4 அரிசி ஆலைகளில் 27 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனை நடத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

    சின்ன அனுப்பானடியில் உள்ள அரிசி ஆலையில் ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது. போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். அந்த அரிசி ஆலையில் 23 சாக்கு மூடைகளில் 575 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் வண்டியூர் கோமதிபுரம், செவ்வந்தி வீதி தெய்வேந்திரன் (33), காமராஜர்புரம் கக்கன் தெரு முத்துராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (24), பீகார் மாநிலம் சுரேந்திர ராய் மகன் மனிஷ் குமார் (23), சுதீர்குமார் (25) என்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்

    ×