search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறையில் கார் திருட்டு
    X

    பெருந்துறையில் கார் திருட்டு

    • கன்சல்டிங் நிறுவனத்தில் நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை.
    • இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ். வெள்ளமுத்து கவுண்டன்வலசை சேர்ந்த வர் கோபுராஜ் (வயது 30).

    இவர் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள பெருந்துறை ரோட்டில் தனது நண்பர் குமரவேல் என்பவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்கும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கோபு ராஜ் வழக்கம்போல் தனது கன்சல்டிங் நிறு வனத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்த 7 கார்களை கம்பி வேலி அமைக்கப்பட்ட பகுதிக்குள் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து அவர் காலை நிறுவனத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை. இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    காரை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×