என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணியிடம் பணப்பை பறிப்பு"

    புதுவையில் சுற்றுலா பயணியிடம் பணப்பையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் கவுர் கோபால்ஷா. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி அமிதஷா (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வேலூருக்கு வந்திருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க புதுவை வந்தார்.

    புதுவை விடுதி அறையில் தங்கி சுற்றுலா இடங்களை பார்க்க வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் அமிதஷா புதுவை ரோமண்ட் ரோலண்ட் வீதியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென அமிதஷா தோளில் மாட்டி சென்ற கைப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    அமிதஷா அந்த பையில் 2 செல்போன், ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை வைத்திருந்தார்.

    இதுகுறித்து அமிதஷா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டு இருந்த சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்து பணப்பையை பறித்து சென்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×