என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வண்ண மலர்கள்"
- ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன.
- தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.
இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு களித்து ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் களைகட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 2-வது சீசன் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
இதற்காக ஊட்டி பூங்காவில் ஏற்கனவே சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உள்பட பல்வேறு நிறங்களில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
ஊட்டி 2-வது சீசனுக்கு சிறப்பளிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜ5பின், கேண்டிடப்ட் உள்பட 60 வகையான மலர்விதைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்தன. அவை பூங்காக்களில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது மலர்ந்து அழகுடன் காட்சி தருகின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. அந்த செடிகளிலும் தற்போது பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. ஊட்டி பூங்காவில் உள்ள பார்வையாளர் மாடங்களில், மலர் பூந்தொட்டிகளை தொங்க விடும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆயுதபூஜை என தொடர்விடுமுறைகள் வருகின்றன. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
ஊட்டியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக புல்வெளி மைதானம் சேதம் அடைந்து இருந்தது.
எனவே அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
- புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்