search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deeparadhana"

    • யாகசாலையில் புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    • கும்பாபிஷேகத்திற்கு பின்னர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த கெங்கை சமுத்திரம் பகுதியில் ஆனந்த விநாயகர் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம்இன்று நடைபெற்றது. இக்கோவி லில் ஸ்ரீ ஆனந்த விநாயகர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயத்தின்முன்புறம் யாகசாலை அமைக்கப்பட்டு இருந்தது. யாகசாலையில் புனித நீர் கொண்டு வரப்பட்டு விநாயகர் வழிபாடு உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. முதல் கால யாகசாலை பூஜைக்கு பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை இன்று காலை தொடங்கியது. இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றவுடன் புனிதநீர் அடங்கிய கடம் நாதஸ்வர இசை முழங்க புறப்பட்டது.

    புனிதநீர் அடங்கிய கடம் கோவில் வலம் வந்த பின்னர் கோவிலின் மூலஸ்தான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலசு ப்பிரமணியர் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆகிய அமைந்துள்ளசன்னதி களுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது.கும்பாபி ஷேகத்திற்கு பின்னர் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகவிழா ஏற்பா டுகளை கெங்கசமுத்திரம் கிராம பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    • உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.
    • மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி படைவெட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேர்ந்த ங்குடியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.

    திங்கட்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, தேவி மாஹாத்மிய பாராயணம் செய்யப்பட்டு, கஜ பூஜை கோ பூஜை, அஸ்வ பூஜை எனப்படும் குதிரைக்கு பூஜை, ஒட்டக பூஜை, கன்னிப்பெண்களுக்கு செய்யப்படும் கன்னியா பூஜை, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை ஆகியவை செய்யப்பட்டது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி ஸ்ரீ படைவெட்டி மாரியம்ம னுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன வள்ளலார் கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    யாகத்தில் 108 வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டு புடவை, தங்கதாலி, வெள்ளி கொலுசு ஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புற்றடிமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த கடந்த ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினம் தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

    இதனையொட்டி உலக தேச நலன் பெற வேண்டி அம்மனுக்கு சர்வ மங்கள மகா சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் 108வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டுபுடவை, தங்கதாலி, வெள்ளிகொலுசுஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாரா தனை நடை பெற்றது. முன்னதாக கோபூஜை, கஜபூஜைகள் செய்யப்ப ட்டது. மகாதீபா ராதனை கட்டப்பட்டது.பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்க ப்பட்ட 108 கலசங்களைக் கொண்டு அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெ ணற்றது.பூஜைகளை வைத்தீஸ்வரன்கோயில் ராஜாமகாதேவ சிவாச்சா ரியார் தலைமை யில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஆர்ப்பாக்கத்தில் பூரணபுஷ்க லாம்பிகா சமேத அய்யனார் ஆலய கும்பாபிஷேகம 6வது ஆண்டு நிறைவு விழா, சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

    • பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.

    மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்வாக தங்க கருட சேவை நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது.

    பின்னர் பிரதான வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×