search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபூஜை"

    • மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
    • சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி’ வைப்பார்கள்.

    பொங்கலுக்கு அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை `கணுப் பொங்கல்' என்றும் சொல்வார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி' என்றும் வைப்பார்கள். (முதல் நாள் தைப் பொங்கல் அன்று, பொங்கல் வைத்த பானையில் இருந்து முழுவதையும் எடுத்து விடாமல், சிறிது மீதி வைத்திருப்பார்கள். அதனை கையால் பிடித்து வைப்பார்கள்.

    அந்த காலத்தில் நதிக்கரை, குளத்தங்கரையில் அல்லது திறந்தவெளியில் செம்மண் கோலம் போட்டு, மஞ்சள் இலை அல்லது வாழை இலையை கிழக்கு நுனியாக வைத்து முதல் நாள் சாதத்தில் சிறிது மஞ்சள், குங்குமம் சேர்த்து தனியாக மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், வெள்ளை சாதம் என்று ஒவ்வொன்றும் ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் உருண்டை பிடித்து வைப்பார்கள். பின்னர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஆரத்தி காட்டுவார்கள்.

    பொங்கல் பானையில் இருந்த மஞ்சளை எடுத்து வயதான பெண்களிடம் கொடுத்து திருமாங்கல்யத்திலும், நெற்றியிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் பின் தான் குளித்து புதுத் துணி அணிவார்கள். இவ்வாறு செய்வதால் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பிக்கை. காக்கை உருவில் எமதர்மராஜா வந்து இந்த உணவை சாப்பிடுவதாக ஐதீகம்.

    சகோதரர்களும் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பணமோ அல்லது துணியோ பரிசாக அனுப்பி வைப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோ பூஜை செய்ய நல்ல நேரம். பொதுவாக பசு மாடு வளர்ப்பவர்கள் பசுக்கொட்டிலில் பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பசு இல்லாதவர்கள் பசுவை வரவழைத்து பூஜிப்பது விசேஷத்தை தரும். பசுவையும், கன்றையும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வாசனை பூக்களால் அர்ச்சிப்பது நன்மை தரும். பசு மாட்டிற்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், கரும்பு கொடுக்க வேண்டும். இது சகல தோஷங்களையும் விலக்கும்.

    கோபூஜை முடித்த பிறகு பசுவிற்கு பொங்கலும் கொடுப்பார்கள். அன்று மாலை பசுக்களை சந்தோஷமாக வைத்திருக்க எண்ணி, அவற்றின் இஷ்டம் போல் ஓட விடுவார்கள். இதற்கு `ஸ்வச்சந்த சாரம்' என்று பெயர் .

    மாட்டுப்பொங்கல் அன்று, கிராமங்களில் ஊர் கூடி ஊருக்கு வெளியே, ஒரு பெரிய மேடான இடத்தில் கள்ளிமரச் சுள்ளிகளைக் கொண்டு மிகப்பெரிய வட்டத்தை உருவாக்குவார்கள். அதில் சிறிது எண்ணெய் சேர்ப்பார்கள். இந்த மேட்டிற்கு `திட்டாணி மேடை' என்று பெயர். இதை பாதுகாக்க ஒருவரை நியமிப்பார்கள். அவரை `திட்டாணி காவலர்' என்பார்கள்.

    பின்னர் ஊரில் உள்ள மாடுகளை அந்த வட்டத்திற்குள் கொண்டு வந்து கலச தீர்த்தத்தை அதன் மேல் சிறிது தெளித்து, அதன்பிறகு ஆவாரம் பூ, பிரண்டை ஆகியவற்றை, கோரை புல்லால் மாலையாக தயார் செய்து பசு மாடுகளுக்கு அணிவிப்பார்கள். ஒருவர் சேகண்டி அடிப்பார். ஒருவர் தீச்சட்டி எடுப்பார். ஒருவர் சங்கு ஒலிப்பார். எல்லோரும் மகிழ்ச்சியாக விசேஷமாக பாடிக்கொண்டு திட்டாணி மேடையை சுற்றி வருவார்கள்.

    அப்போதும் `பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்' என்று அனைவரும் கூறுவார்கள். இதை மாலையில் தான் ஆரம்பித்து செய்வார்கள். இரவு நீண்ட நேரம் ஆகிவிடும். அப்பொழுது திட்டாணி மேடையில் ஊர் கூடி பொதுப்பொங்கல் வைப்பார்கள். ஒரு பெரிய வாழை இலையில் பொதுப் பொங்கலை கொட்டி கற்பூரம் காட்டி பூஜை செய்வார்கள். பொங்கலை பசுமாடுகளுக்கு கொடுப்பார்கள்.

    தாங்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள். பின் அனைவரும் பசு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவரவர் வீட்டு வாசலில் நிற்க வைத்து வைகோலை கொளுத்தி திருஷ்டி கழிப்பார்கள்.

    கோ பூஜை மந்திரம்

    மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்யும் போதும், பசுவை பூஜிக்கும் பொழுதும் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி பூக்களால் அர்ச்சிக்கவும். இதில் `நம' என்று வரும் இடத்தில் 'நமஹா' என்று உச்சரிக்கவும்.

    ஓம் காமதேனவேநம

    ஓம் பயஸ்வின்யை நம

    ஓம் ஹவ்யகவ்ய நம

    ஓம் பலப்ரதாயை நம

    ஓம் வ்ருஷப பத்ன்யை நம

    ஓம் ஸௌரபேய்யை நம

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம

    ஓம் ரோஹிண்யை நம

    ஓம் ச்ருங்கிண்யை நம

    ஓம் க்ஷுரதாரிண்யை நம

    ஓம் கம்போஜஜனகாயை நம

    ஒம் பப்லஜகாயை நம

    ஓம் யவனஜனகாயை நம

    ஓம் மாஹேய்யை நம

    ஓம் நைசிக்யை நம

    ஒம் சபள்யை நம

    நானாவித பரிமள பத்ர

    புஷ்பாணி சமர்ப்பயாமி

    • சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது.
    • கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும்.

    திருப்பதி:

    கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் விஷ்ணு பூஜைகளின் ஒரு பகுதியாக திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று கோபூஜை சாஸ்திர பூர்வமாக நடந்தது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து 10 மணி வரை நடந்த கோபூஜையை உலக பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பினர்.

    முன்னதாக ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்களான வேணுகோபாலசாமி, ருக்மணி மற்றும் சத்யபாமாவை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்தனர். அங்கு, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகையில், சனாதன தர்மத்தில் பசு மிகவும் முக்கியமானது. கோபூஜை முப்பெரும் தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்றார்.

    முன்னதாக கார்த்திகை விஷ்ணு பூஜை சங்கல்பம், பிரார்த்தனை சூக்தம், விஷ்ணு பூஜை மந்திர பாராயணம் நடந்தது. அப்போது உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பசு மற்றும் கன்றுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து பிரசாதம் மற்றும் ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கோபிரதட்சணை செய்யப்பட்டது. நிறைவாக பிரார்த்தனை மற்றும் மங்களம் வேண்டி கோபூஜை முடிந்தது. அதில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அர்த்த ஜாம தரிசனம் மனிதன் வாழ்வில் தெய்வீக பலன்களை தருவதாகும்.
    • இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்

    ஒரு காலம் என்பது, நடராஜருக்காக ஸ்படிகலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து, பிறகு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு, தீபாராதனை செய்வது வரையிலும் ஆகும். இந்த முழு அமைப்பும் சேர்ந்துதான் ஒரு கால பூஜை எனப்படும். இவை எல்லாம் ஒரு கால பூஜையில் அடங்கும்.

    ஆறு காலங்கள்

    1. காலை சந்தி (முதல் கால பூஜை, காலை 7 மணி)

    2. இரண்டாங்காலம் (காலை 10 மணி)

    3. உச்சி காலம் (மூன்றாம் காலை பகல் 12 மணி)

    4. சாயங்காலம் (சாயரட்சை மாலை 6 மணி)

    5. 8 மணி காலம் (2-ம் காலம் இரவு 8மணி)

    6. அர்த்த ஜாமம் (6-ம் காலம் (இரவு 10 மணி)

    பரமானந்த கூபம்

    நடராஜர் அருள்பாலிக்கும் சிற்றம்பலத்துக்கும் கிழக்கு பாகத்தில் உள்ள பரமானந்த கூபம் என்னும் தீர்த்தமே (கிணறு) எப்போதும் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஐப்பசி மாத வளர்பிறை நவமி திதியில் கங்கையே இத்தீர்த்தத்திற்க வருகின்றாள். இத்திருக்கோவிலினுள் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தம் பயன்படுத்தப்படுகிறது.

    முதற்காலம் (கால சந்தி)

    காலை 7 மணிக்கு பூஜாக்காரரால் கோபூஜை, கும்பம் வைத்து ஹோமம் செய்து, பஞ்சகவ்யம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்து 9 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    இரண்டாங்காலம் (ரத்தின சபாபதி தரிசனம்)

    காலை 10 மணிக்கு ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் கனக சபையில் செய்து, இச்சமயத்தில் ரத்தின சபாபதிக்கும் பால், தேன், சந்தன அபிஷேகம் செய்து, கற்பூர தீபாராதனைநடைபெறும். மாணிக்க நடராஜர் பின்புறம் தீபாராதனை காண்பிக்கும்போது ஜோதியாயும் (தங்கம் போல் ஜொலிக்கும்) தெரியும். இது மிக முக்கியமான தரிசனமாகும்.

    வாழ்வில் நல்ல பல மாற்றங்களை தந்தருளும். இரண்டாம் கால பூஜையில் சிறப்பு ரத்தின சபாபதி தரிசனம்தான் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. வேறு எந்த கால புஜையிலும் இத்தரிசனம் காண முடியாது. இத்தரிசனம் காலை 10 மணி முதல் 10 மணிக்குள் காணப்பட வேண்டும்.

    உச்சிக்காலம் (மூன்றாம் காலம்)

    ரத்தினசபாபதி தரிசன தீபாராதனை முடிந்ததும், மீண்டும் அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 1 மணிக்குத் தீபாராதனை உடனே நடைசாத்தப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    நான்காம் காலம் (சாயரட்சை)

    மாலை நடை திறந்தவுடன் அபிஷேகம் செய்து 6 மணிக்கு சோடசோபசார தீபாராதனை நடக்கும்.

    ஐந்தாம் காலம் (ரகசிய பூஜை காலம்)

    இரவு 7 மணிக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெறும். இந்த நேரத்தில்தான் அருவமான ரகசியத்திற்கு பூஜை நடைபெறும். கதவுகள் சாத்தப்பட்ட பூஜை செய்பவர். செய்விக்கின்றவர் ஆகிய இருவர் மட்டும் இருந்து பூஜை செய்து நைவேத்தியம் செய்து 8 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

    அர்த்த ஜாமம்

    இரவு 9 மணிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் காட்டி, 10 மணிக்கு தீபாராதனை செய்து, நடராஜரின் பாதுகையை வெள்ளி, தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து பள்ளியறையில் கொண்டு போய் வைத்து அங்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெற்று, பின்னர் பிரம சண்டிகேஸ்வரர்க்கும், பைவரருக்கும், அர்த்த சாம அழகருக்கும் நைவேத்தியம் செய்து தீபாராதனை நடைபெறும். இவையனைத்தும் அர்த்த ஜாமபூஜைகள் ஆகும்.

    பிரபஞ்சங்களில் உள்ள சிவகலைகள் அனைத்தும் இங்கு இருந்துதான் காலை 6 மணிக்கு புறப்பட்டு அங்கு நிகழ்த்தப்படுகின்ற பூஜைகளை ஏற்று இரவு அர்த்த ஜாம பூஜையில் மீண்டும் தில்லை திருக்கோவிலினுள் ஒடுங்குகிறது. அதாவது எல்லா கோவில் தெய்வங்களும் தில்லையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அர்த்த ஜாம பூஜையின்போது தில்லையிலேயே மீண்டும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாகிறது.

    எனவே அர்த்த ஜாம பூஜை தரிசனம் என்பது அன்று முழுநாள் சிவபூஜை செய்த சிவபுண்ணிய பலனையும், எல்லா கோவில்களின் தெய்வங்களின் அருளாசியையும் பெற்றுத் தருகிறது.

    அர்த்த ஜாம தரிசனம் மனிதனின் வாழ்வில் உன்னத தெய்வீக பலன்களை தருவதில் நிகரற்ற ஒன்றாகும். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் துதித்து வாழ்நாளில் ஒரே ஒருமுறை தில்லை திருக்கோவிலின் அர்த்தஜாம பூஜையை கண்டு தரிசிக்க வேண்டும். அர்த்தஜாம தரிசன பலன்கள் எண்ணிலடங்காதவை. வாழ்வில் எக்குறையும் நேராமல், இல்லாமல் வாழ விரும்புவோர் கண்டிப்பாக அர்த்தஜாம பூஜையை தரிசிக்க வேண்டும். இது சத்தியம் சத்தியம்.

    அர்த்தஜாம பூஜையில் வேண்டும் வரங்களை அள்ளித் தருகிறார் ஆடல்வல்லான். பக்தர்கள் வேண்டும் வரங்களை தருமாறு சிவகாமசுந்தரியே சாமி நடராஜரிடம் வேண்டிக் கொள்கிறாள். இங்கு பிரார்த்தனை செய்யுமிடம் பள்ளியறையில் தீபாராதனை நடக்கும் நேரம் ஆகும். அப்போது எல்லா கோவில் தெய்வங்களும் ஒருவித குளிர்ந்த காற்று ரூபத்தில் பள்ளியறைக்குள் செல்வதை பக்தர்கள் உணர முடியும் (பிராணாயாமம், வாசியோகம் செய்வோர் நன்கு உணர முடியும்)

    உதாரணமாக திருமணம் நடக்க வேண்டி திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையே தில்லையில் அர்த்தஜாம பூஜையில் பள்ளியறை தீபாராதனை வேளையில் அதே திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரனை தரிசித்த பலனால் திருமண பாக்கியம் கைகூடும்.

    • மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றது.
    • நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

    மணக்குள விநாயகர் ஆலயம் தொடர்பான 25 முக்கிய குறிப்புகள்...

    1. புதுச்சேரி நகரின் பழமையான வரலாற்று சம்பவங்களோடு மணக்குள விநாயகர் பின்னி பிணைந்துள்ளார். எனவே புதுச்சேரி வரலாற்றோடு மணக்குள விநாயகருக்கு முக்கிய பங்கு உண்டு.

    2. புதுச்சேரி நகரின் நம்பர்-ஒன் ஆன்மீகத் தலமாக மட்டுமின்றி நம்பர்-ஒன் சுற்றுலாத் தலமாகவும் மணக்குள விநாயகர் ஆலயம் திகழ்கிறது.

    3. 1923-ம் ஆண்டு வாக்கில் புதுவையில் `அச்சுகாபி விருத்தினி' என்ற பத்திரிகையை ஒர்லையான்பேட்டையைச் சேர்ந்த வெங்கடாசல நாயக்கர் நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் மணக்குள விநாயகர் பற்றி நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டன.

    4. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தையாபிள்ளை 1936-ம் ஆண்டு புதுச்சேரி வந்து மணக்குள விநாயகர் மீது பல பாடல்கள் பாடினார்.

    5. புதுச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி பிள்ளை, மாணிக்கப்பிள்ளை, ரத்தினப் பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க சுவாமிகள், சாமி பொன்னுப்பிள்ளை, பண்டிதர் சுப்புராய பக்தர், சோம சுந்தரம் பிள்ளை, கந்தசாமி உபாத்தியாயர், ராமானுஜ செட்டியார், பங்காரு பக்தர், நா.வேங்கடாசல நாயக்கர், வரதப்பிள்ளை உள்பட ஏராளமானவர்கள் மணக்குள விநாயகர் மீது பதிகங்களும், பாடல்களும் இயற்றியுள்ளனர்.

    6. மணக்குள விநாயகரை நெசவாளர்கள் எப்படியெல்லாம் போற்றி பாதுகாத்தனர் என்பதை சிவமதி சேகர் தனது புதுவையும் மணக்குள விநாயகரும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    7. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.

    8. மணக்குள விநாயகர், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டேனீஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என 5 வெளிநாட்டவர்களின் ஆட்சி முறைகளை கண்டவர் ஆவார்.

    9. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

    10. கோவில் கொடி மரத்துக்கு 1957-ம் ஆண்டு வடநாட்டு தொழில் அதிபர் ஒருவர் தங்க முலாம் பூசிய தகடு போர்த்தினார்.

    11. நடேச குப்புசாமிபிள்ளை என்பவர் 1909-ம் ஆண்டு சித்திரை மாதம் முதல் நாள் முதல் அபிஷேகம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அவர் இந்த அபிஷேகத்தை தொடர்ந்து நடத்தினார். 100 ஆண்டுகள் கடந்தும் தற்போதும் அவர் மகன் நடேச.கு.அர்த்தநாதன் பிள்ளை இந்த அபிஷேக ஆராதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    12. மணக்குள விநாயகர் கோவிலில் ஆவணி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது செங்குந்த மரபினர், ஆரிய வைசிய மரபினர், வேளாளர்கள், பிராமணர்கள், வன்னியர்கள், கவரா நாயுடுகள், விஸ்வகர்ம மரபினர், யாதவர்கள், சேனைத் தலைவர் மரபினர், சான்றோர் குல மரபினர், ரெட்டியார் மரபினர், நாட்டுக்கோட்டை நகரத்தார், வணிக வைசிய மரபினர் என அனைத்து இனத்தவர்களும் சுவாமி வாகன ஏற்பாடுகளை செய்கிறார்கள்.

    13. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    14. கருவறையில் உள்ள தொள்ளைக்காது சித்தருக்கு அரூப முறையில் பூஜைகள் செய்யப்படுகிறது.

    15. மணக்குள விநாயகரின் அருள் பெறுவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    16. மணக்குள விநாயகருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பழம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யலாம்.

    17. மணக்குள விநாயகர் ஆலயம் உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் அதன் ராஜகோபுரம் இன்னமும் இரு நிலைகளிலேயே உள்ளது.

    18.மணக்குள விநாயகர் மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே தோன்றி விட்ட போதும், எந்த மன்னரும் பெரிய அளவில் திருப்பணி செய்யவில்லை. மக்களால் மட்டுமே இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    19. கடந்த ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தன்று காலையில் சுமார் 50 ஆயிரம் பேர் மணக்குள விநாயகரை வழிபட்டனர். இது அந்த ஆலய வரலாற்றில் புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.

    20. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    21. மணக்குள விநாயகர் ஆலய கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

    22. கோவில் உள்ளே இருக்கும் சுதை சிற்பங்களில் ஒன்றில் மயிலில் பறக்கும் முருகருடன் விநாயகரும் இருக்கிறார். இது போன்ற சிற்பம் அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் ஆலயத்திலும் உள்ளது.

    23. மணக்குள விநாயகர் ஆலயம் கானாபத்திய ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

    24. மணக்குள விநாயகரின் உற்சவ மூர்த்திக்கு தயாரிக்கப்பட்டுள்ள தங்க கவசத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். 5 கிலோ எடையில் 91.66 தரத்தில் ஹால்மார்க் சான்றிதழுடன் இந்த கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    25. இத்தலத்தில் பக்தர்களுக்கு தினமும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    26. கடற்கரையை ஒட்டிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இக்கோவில் விநாயகரை `புவனேச கணபதி' என்றும் சொல்கிறார்கள்.

    27. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

    28.விநாயகருக்கு இத்தலத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக எண்ணெய், பஞ்சாமிர்தம், பழவகைகள், தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள். மேலும் சொர்ணா அபிசேகம், 108 கலசாபிசேகம், சங்காபிசேகம் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

    29.உலகில் உள்ள எல்லா விதமான விநாயகர் ரூபங்களையும் சுதையாக இங்கு செய்து வைத்துள்ளனர் என்பது சிறப்பான அம்சம்.

    30. விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

    31. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவார்கள். புதுவருடம் பிறக்கும் அந்த நாளில் மணக்குள விநாயகரின் திருமுகத்தை தரிசிக்க அவரின் ஆசியோடு அந்த புது வருடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஆவலில் இத்திருத்தலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருக்கிறது.

    32. பிரம்மோற்சவம் ஆவணி 25 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது.

    33. பவித்திர உற்சவம் 10 நாட்கள் திருவிழா விழாவாக கொண்டாடப்படுகிறது.

    34. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிசேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்.

    35. வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ் புத்தாண்டு தினம், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் மூலவருக்கு விசேஷ அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

    36. சென்னையில் இருந்து 160 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து 40 கி.மீ கடலூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் புதுச்சேரி உள்ளது.

    37. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் பாண்டிச்சேரி நகரில் உள்ள தனியார் லாட்ஜ்களில் தங்கிகொண்டு கோயிலுக்கு சென்று வசதி உள்ளது.

    38. பாண்டிச்சேரி நகரின் மத்தியில் கோயில் இருப்பதால் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வர வசதி உள்ளது.

    39. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

    40. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்ததி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

    யாகத்தில் 108 வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டு புடவை, தங்கதாலி, வெள்ளி கொலுசு ஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புற்றடிமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த கடந்த ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினம் தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

    இதனையொட்டி உலக தேச நலன் பெற வேண்டி அம்மனுக்கு சர்வ மங்கள மகா சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் 108வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டுபுடவை, தங்கதாலி, வெள்ளிகொலுசுஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாரா தனை நடை பெற்றது. முன்னதாக கோபூஜை, கஜபூஜைகள் செய்யப்ப ட்டது. மகாதீபா ராதனை கட்டப்பட்டது.பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்க ப்பட்ட 108 கலசங்களைக் கொண்டு அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெ ணற்றது.பூஜைகளை வைத்தீஸ்வரன்கோயில் ராஜாமகாதேவ சிவாச்சா ரியார் தலைமை யில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    ×