search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீர்த்தபுரீஸ்வரர் கோவில் பணிகள் தொடங்க சுவாமிகள் ஆசி
    X

    தம்புரான் சாமிகள் பேட்டியளித்தார்.

    தீர்த்தபுரீஸ்வரர் கோவில் பணிகள் தொடங்க சுவாமிகள் ஆசி

    • ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்க தம்புரான் சாமிகள் அறக்கட்டளை மூலமாக கோபூஜை செய்து கோயில் பணிகளை தொடர ஆசி வழங்கினார்.
    • துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கொற்கைகிராமம் சேவியக்காடு பகுதியில் அமைய உள்ள தீர்த்த புரீஸ்வரர் திருக்கோயிலில் இடம் தேர்வு செய்வது முன்னிட்டு கோயம்புத்துார் ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்க தம்புரான் சாமிகள் தேசிங்கு ராஜபுரம் வந்து ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மூலமாக கோபூஜை செய்து கோயில் பணிகளை தொடர ஆசி வழங்கினார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளையை சேர்ந்த சென்னை வெற்றிவேல் குமரன், முனைவர் ரவிச்சந்திரன். முனைவர் நா.துரைராயப்பன், சிட்டிபாபு, மடப்புரம் என்.எஸ்.எஸ்.சுப்பையன், வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சென்னை அனிதா குமரன், கவிதா ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அறநிலைய துறை செயல் அலுவலர்விமலா சந்திரன் கலந்து கொண்டார்.

    Next Story
    ×