என் மலர்
நீங்கள் தேடியது "நாகப்பட்டினம்"
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.
கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்.
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
- அதற்கான ஆதாரங்களை பின்னூட்டங்களாக வழங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதன்போது அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!
தவறான தகவல் 1 :
"மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மை :
தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.
தவறான தகவல் 2 :
கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.
உண்மை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.
தவறான தகவல் 3 :
மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?
உண்மை :
சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.
தவறான தகவல்களைப் பரப்பாதீர்!" என்று தெரிவித்து அதற்கான பத்திரிகை ஆதாரங்களை பின்னூட்டங்களாக வழங்கியுள்ளது.
- கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்.
- பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "4 ஆண்டுகளாக திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி கேட்கிறார்கள். கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது. கொரோனா காலத்தில்கூட விலைவாசி உயராமல் அதிமுக ஆட்சியில் பார்த்துக் கொண்டோம்" என்று கூறினார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை அறிவிக்கும் பாங்கு ஒலித்த சத்தம் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களிடம் உரையாற்றினார்.
பாங்கு ஓதப்பட்டு முடிந்த பிறகு தொண்டர்கள் அவரிடம் நினைவு படுத்தியதை அடுத்து மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்டார்.
- வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இரண்டு நாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மேலும் வருகிற 16-ம் தேதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமான இன்று (14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி வரை நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
- அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள்.
இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
விரிதிரைசூழ் கடற்நாகை அதிபதற்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற அதிபத்த நாயனார் பற்றி இந்த நாயனார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்.
சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீன்பிடித்து வியாபாரம் செய்யக்கூடிய மீனவ சமுதாயமான பரதவ இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்த நாயனார் இருந்தார்.
அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள். தன்னுடைய சிறு வயதில் இருந்தே சிறந்த சிவ பக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப்போகும் போதும் தன்னுடைய வலையில் சிக்கக்கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதிபத்த நாயனாரில் உயர்ந்த பக்தியை உலகிற்கு உணர்த்த சிவபெருமான், தன்னுடைய திருவிளையாடலை அதிபத்த நாயனாரிடம் நடத்த ஆரம்பித்தார்.
அதிபத்த நாயனார் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது மீன்கள் சிக்குவது குறைந்துகொண்டே வந்தது. இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பத்தில் வறுமை ஏற்படத்தொடங்கியது. ஆனாலும் அதிபத்த நாயனார் தன்னுடைய வலைகளில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அளிப்பதை நிறுத்தவே இல்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரேஒரு மீன் மட்டும் சிக்குமாறு விளையாடினார் சிவபெருமான். அதிபத்த நாயனாரும் வழக்கம்போல இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்கு உரியது. சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார்.
காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்துகொண்டே வந்தது. இதைபார்த்து மிகுந்த கவலையுடன் அதிபத்த நாயனாரின் மனைவி கணவனிடம் நம் பசியை தீர்க்க வீட்டில் எந்த பொருளுமே இல்லை. நம் குழந்தைகள் எல்லோரும் பசியுடன் பலவீனமாக இருக்கிறார்கள். நீங்கள் பொருள் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
அதிபத்த நாயனாரும் தனது மனைவி சொல்வதை கேட்டு தனது குழந்தைகளுக்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அதிபத்த நாயனார் வீசிய வலையில் நவரத்தினங்களும், நவமணிகளும் பதித்த ஒரு தங்க மீன் ஒன்று வலையில் மாட்டியது.
இதைக்கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிபத்த நாயனாரே இன்று உமக்கு ராசியான நாள். அதனால் தான் நீங்க வீசிய வலையில் தங்க மீன் கிடைத்துள்ளது. இந்த மீனை கொண்டுபோய் உங்க மனைவியிடம் கொடுங்க. உங்களது வம்சமே செல்வச்செழிப்பாக வாழலாம் என்று சொன்னார்கள்.
தங்க மீனை கண்டதும் அதிபத்த நாயனாரின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் வலையில் சிக்கிய முதல் மீனை இறைவனுக்கு கொடுப்பது போலவே இந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கு உரியது என்று கூறி கடலில் விட்டு விட்டார்.
அதிபத்த நாயனாரின் இந்த செயலைக்கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றனர். அப்போதுதான் சிவபெருமானும், பார்வதிதேவியும் அதிபத்த நாயனாருக்கு காட்சி அளித்தனார். அதுமட்டுமில்லாமல் கையில் தன்னுடன் இருக்கக்கூடிய பேரின்ப வரத்தையும் அதிபத்த நாயனாருக்கு அளித்தனர்.
இன்றைக்கும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தங்க மீனை சிவபெருமானுக்கு கொடுக்கும் திருவிழா நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகன சுவாமி கோவில் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் வைத்து மீன்பிடிக்க கடலுக்கு போவார்கள். அப்போது கடலில் வலைவீசுவது போலவும், அந்த வலையில் தங்க மீன் சிக்குவது போலவும் அதை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவணை செய்வார்கள்.
அந்தநேரத்தில் கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு முக்தி அளிக்க கடற்கரைக்கு வருகிறார். கடற்கரைக்கு வரும் சிவபெருமானுக்கு அந்த தங்க மீனை படைத்து பூஜையும் செய்வார்கள். அப்போது அந்த கடற்கரைக்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் சிவபெருமான் அருளாசி புரிவார்.
அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அருள் கிடைக்க பணமோ, பொருளோ கல்வியோ தேவையில்லை. தூய்மையான மனமும்ம் இறை அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதை தான் இந்த அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது.
- தங்க மீனை கடலில் விட்டு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி.
- அதிபத்த நாயனார் அதை கடலில் விட்டு இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை நம்பியார் நகரில் இருந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த அதிபத்த நாயனார், தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரிய மீனையும் மற்றும் முதல் மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.
ஒரு நாள் அதிபத்த நாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல், பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன்மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார்.
இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார். வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்த நாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.
அவரது அன்பில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர்.
பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
- சமுதாயக்கூடம் கட்டிடத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
- தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி முனிசிபல் பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 நிதியின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்தை, நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷாநவாஸ் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பா.திலகர், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நா.அருட்செல்வன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைக்கின்றனர்.
- நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நடத்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.
இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பெச்சாயி அம்மன். மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள். அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பெச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா.
அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது. காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
- அங்கு சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.
- பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.
நாகூர்
நாகப்பட்டினத்திற்கருகில் உள்ள நாகூர் என்னும் ஊரில் நாகராசா கோவிலில் சரஸ்வதியின் செப்புத் திருமேனி உள்ளது.
அங்கும் சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.
மு.ஈ.ச. மலை
பவானிசாகர் அருகில் மாதம்பாளையம் ஊராட்சியில் மாராயிபாளையம் என்னும் கிராமத்தில் ஒரு சிறு மலையில்
முருகன், ஈஸ்வரன், சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித் தனி மூலஸ்தான கோவில்கள் உள்ளது.
புதியதாக கட்டப்பட்ட இக்கோவில் மலை புஞ்சை புளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் வழியில்
பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.
இக்கோவிலுக்குச் செல்ல 800 படிகள் கொண்ட பாதையும், கனரக வாகனங்கள் செல்ல தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
வடநாட்டில் புஷ்கரத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் மலைமீது சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட கோவில் இது ஒன்றே.
- நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
- ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவையொட்டி முன்னதாக கடந்த 10-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கந்தூரி விழாவையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளி தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.
ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கொடி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகையில் இருந்து நாகூர் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண்கவர் வான வேடிக்கையுடன் நாகூர் தர்கா, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் வருகிற 23-ந்தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 24-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.
- ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.
தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.
கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.
நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






