search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படைவெட்டி மாரியம்மன் கோவிலில் சண்டி ஹோமம்
    X

    சண்டி ஹோமம் நடந்தது.

    படைவெட்டி மாரியம்மன் கோவிலில் சண்டி ஹோமம்

    • உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.
    • மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி படைவெட்டி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேர்ந்த ங்குடியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சண்டி ஹோமம் நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் பருவமழை தவறாமல் பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் நவ சண்டி ஹோமம் செய்யப்பட்டது.

    திங்கட்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, தேவி மாஹாத்மிய பாராயணம் செய்யப்பட்டு, கஜ பூஜை கோ பூஜை, அஸ்வ பூஜை எனப்படும் குதிரைக்கு பூஜை, ஒட்டக பூஜை, கன்னிப்பெண்களுக்கு செய்யப்படும் கன்னியா பூஜை, வடுக பூஜை, பிரம்மச்சாரி பூஜை ஆகியவை செய்யப்பட்டது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்று கலசங்கள் புறப்பாடாகி ஸ்ரீ படைவெட்டி மாரியம்ம னுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன வள்ளலார் கோயில் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    Next Story
    ×