search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Colorful Flowers"

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன.
    • தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு களித்து ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் களைகட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 2-வது சீசன் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதற்காக ஊட்டி பூங்காவில் ஏற்கனவே சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உள்பட பல்வேறு நிறங்களில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி 2-வது சீசனுக்கு சிறப்பளிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜ5பின், கேண்டிடப்ட் உள்பட 60 வகையான மலர்விதைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்தன. அவை பூங்காக்களில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது மலர்ந்து அழகுடன் காட்சி தருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. அந்த செடிகளிலும் தற்போது பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. ஊட்டி பூங்காவில் உள்ள பார்வையாளர் மாடங்களில், மலர் பூந்தொட்டிகளை தொங்க விடும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆயுதபூஜை என தொடர்விடுமுறைகள் வருகின்றன. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    ஊட்டியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக புல்வெளி மைதானம் சேதம் அடைந்து இருந்தது.

    எனவே அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 

    • 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.
    • மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டி கர்நாடக தோட்டக்கலை துறை பூங்காவில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் நடப்பாண்டு கோடை சீசனையொட்டி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் பாத்திகளில், 200-க்கும் மேற்பட்ட ரகங்களில், 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தொங்கு பாலத்தில் நடந்து சென்று 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா நடுவே அமைக்கப்பட்ட கட்டமைப்பு வளையத்தில் பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகள் விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த பிரபலமான இந்த பூங்கா சுற்றிலும் காணப்படும் அழகால் சூழப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

    புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் மகிழ்ச்சிதரும் இடமாக கர்நாடக பூங்கா அமைந்துள்ளது. பசுமைக்கு மத்தியில் அமைதியை இங்கு அனுபவிக்கலாம். 38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் கர்நாடக தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம், எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    மலைப்பகுதிக்குள் உள்ள 2-வது பெரிய பூங்காவாக இது கருதப்படுகிறது.

    நீலகிரிக்கு வரும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மலர் படுக்கைகளுடன் பல புல்வெளிகளும் உள்ளன. இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பூங்காவின் முக்கிய சிறப்பம்சமாக பூங்காவின் நர்சரி குடிலில் 50 ஆயிரம் வெவ்வேறு தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ணமயமான மற்றும் அழகான மனதை கவரும் மலர்கள் உள்ளன. இங்கு மூலிகைகளுக்கான தனி பிரிவுவும் உள்ளது. பூங்காவின் நர்சரி குடிலில் உள்ள மலர்கள் அழகாய் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுகின்றது.

    • பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா கொண்டாடப்பட்டது.
    • தேர் பவனியின் போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி பண்டாரவாடை கிராமத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் தேர்பவனி விழா கொண்டாடப்பட்டது.

    பாபநாசம் புனித செபஸ்தி யார் ஆலய பங்கு தந்தை கோஸ் மான் ஆரோக்கியராஜ் தலைமையிலும் இணை பங்கு தந்தை தார்தீஸ் முன்னிலையிலும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றன.

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித காணிக்கை மாதா ஆடம்பர தேரில் எழுந்தருளி தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.

    தேர் பவனியின் போது, பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    • புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    ×