search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாவரவியல் பூங்கா"

    • சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர்.
    • கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள்.

    ஊட்டி:

    மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சுற்றுலா வுக்கு பெயர் போன பகுதியாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து, இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ஏராளமான சுற்றுலா தலங்களிலும் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்ப டும். .சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடை விழா விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தோட்டக்கலை துறையினர் செய்து வருகின்றனர்.

    கோடை விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிவார்கள். சுற்றுலா பயணிகள் இடையூறின்றி வந்து செல்லவும், மலர்கள் சேதமாகாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் விரைவில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
    • இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அப்போது பெரும்பாலானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்து அதனை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    எனவே ஊட்டி தாரவவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    இதுதவிர ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு அவை தற்போது கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், ஜப்பான் பூங்காவில் அழகிய மாடம் மற்றும் மீன் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் வகையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வண்ணமிகு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

    மேலும் தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பழைய டயர்கள் மூலம் தேநீர் கோப்பை உட்பட பல்வேறு வடிவங்களில் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அதில் விதம்-விதமாக மலர்ச்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

    • 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.
    • சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் ஆண்டுதோறும் 2-ம் கட்ட சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நடக்கும்.

    2-ம் சீசனின் போது வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    முதல் சீசனின்போது, 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் தொட்டிகள் மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். 2-ம் சீசனின் போது குறைந்த அளவிலான மலர் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்படும்.

    இந்த முறை 21 ஆயிரத்து 500 தொட்டிகளில் டேலியா, சால்வியா, இன்காமேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், சைக்ளமன், ஜெரேனியம், டெல்பினியம், கொச்சியா, ஆந்தூரியம் போன்ற 70 வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர பல்வேறு அலங்கார செடிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தொட்டிகள் மாடங்களில் அடுக்கி வைக்கப்படும்.

    பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இந்த முறை கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் மலர் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மாடத்தில் தொட்டிகள் அடுக்கும் பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று முதல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பதற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இதனை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கலெக்டர் அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டு மலர்களை கண்டு ரசித்தும், மலர் அலங்காரங்களையும் பார்வையிட்டனர்.

    குறிப்பாக பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மறுசுழற்சி ஸ்மைலி போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுத்தது.

    சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப் படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தற்போது ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் இதமாக காணப்படுகிறது. இதனை ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணி கள் மிகவும் அனுபவித்து ரசித்து வருகின்றனர்.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன.
    • தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு களித்து ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் களைகட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 2-வது சீசன் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதற்காக ஊட்டி பூங்காவில் ஏற்கனவே சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உள்பட பல்வேறு நிறங்களில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி 2-வது சீசனுக்கு சிறப்பளிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜ5பின், கேண்டிடப்ட் உள்பட 60 வகையான மலர்விதைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்தன. அவை பூங்காக்களில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது மலர்ந்து அழகுடன் காட்சி தருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. அந்த செடிகளிலும் தற்போது பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. ஊட்டி பூங்காவில் உள்ள பார்வையாளர் மாடங்களில், மலர் பூந்தொட்டிகளை தொங்க விடும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆயுதபூஜை என தொடர்விடுமுறைகள் வருகின்றன. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    ஊட்டியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக புல்வெளி மைதானம் சேதம் அடைந்து இருந்தது.

    எனவே அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 

    • தமிழ்நாட்டின் பூர்வீக அரிய வகை, மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதே இப்பூங்கா அமைப்பதற்கான நோக்கமாகும்.
    • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு எடுத்துரைத்தார்.

    சென்னை:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள கடம்பூர் கிராமத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பூர்வீக அரிய வகை, மற்றும் தாவர இனங்களை பாதுகாப்பதே இப்பூங்கா அமைப்பதற்கான நோக்கமாகும்.

    தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர். மா.மதிவேந்தன் மற்றும் இங்கிலாந்து அரசின், சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறை மந்திரி தெரஸ் கோபே ஆகியோரது முன்னிலையில், தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் கியூ கார்டன் இயக்குனர் ரிச்சர்ட் டெவெரெல் ஆகியோருக்கு இடையே இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தொழிற்சாலைகளில் கரிம குறைப்புக்கான முன்முயற்சியின் பிரதியமைப்பாக, தொழிற்சாலைகளில் பசுமை அட்டவணைப்படுத்துதல் தமிழ்நாட்டின் குறைந்த கரிம தொழில் மேம்பாட்டிற்கான வழிகாட்டும் வரைபடத்தை இங்கிலாந்து மந்திரி கிரஹாம் ஸ்டூவர்ட் மற்றும் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    தொழில்முறைகளில் குறை கரிம கொள்கையினை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், 2070-ம் ஆண்டுக்கு முன்பு நிகர பூஜ்ஜிய உமிழ்வின்மை என்னும் இலக்கினை எட்டும் இம்மாநில அரசின் காலநிலை மாற்ற இலக்கினை அடையவும் தொழிற்சாலைகளுக்கான பசுமை மதிப்பீடு கட்டமைப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.

    தொழில்துறைகளில் பசுமை மதிப்பீடு நுட்பம் தொடர்பான தன்னார்வ பயிற்சிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல முயற்சிகள் எடுத்து வருவதாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு எடுத்துரைத்தார்.

    தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் பசுமை மதிப்பீடு வரையளவில் பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல அந்தஸ்தை பெற தானாக முன்வர எடுக்கப்படும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதை அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணை உயர் கமிஷனர் ஆலிவர் பால்ஹட்செட், இங்கிலாந்து அரசின் வளர்ச்சி, காலநிலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சாலி டெய்லர், கியூ கார்டன் இயக்குனர் ரிச்சர்ட் டெவெரெல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    ஊட்டியில் கோடை சீசன் நிறைவடைந்து உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக அங்கு உள்ள பூங்கா புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணி நடந்து வருகிறது.

    அங்கு தற்போது மழைப் பொழிவு இருந்து வருகிறது. எனவே புல்வெளிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் உருவாக்கும் வகையில் யூரியா உரம் தூவும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அடுத்த ஒரு சில வாரங்களில் பூங்கா புல்வெளி மீண்டும் பச்சை பசேலென மாறிவிடும் என்று தோட்டக்கலைத் துைறயினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்குவது வழக்கம்.

    கோடை சீசன் காரணமாக அந்த மைதானம் சேதமடைந்து உள்ளது. எனவே பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 500 மரக்கன்றுகளை நட்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் துறை 1990-93-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு கலைவாணி தலைமை வகித்தார்.

    பொருளியல் துறை தலைவர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு தனது கல்லூரி நினைவுகளை சக மாணவர்களும் பகிர்ந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் முதல்வர் பி.சுப்பிரமணிய கவுண்டர், முன்னாள் பேராசிரியர்கள் எம்.டி.ஜெயபாலன், ஆர்.வி. ரகுராமன், கே. சிவஜோதி, பி.சந்திரமோகன், எல். குப்புசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ தன்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தாவரவியல் பூங்கா ஏற்படுத்தி கல்லூரி வளாகத்தில் 500 மரக் கன்றுகளை நட்டனர்.

    தங்களுடன் படித்த நண்பர் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு பெற்று மக்கள் பணி யாற்றுவது பெருமையாக உள்ளதாக எம்.எல்.ஏ. விடன் படித்த நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவா நடைபெற்றது.
    • 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,முல்லைவனம் தாவரவியல் பூங்கா மற்றும் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது பல்லடம் ஒன்றியம்,இச்சிப்பட்டி ஊராட்சி-கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.

    இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு லிட்ரசி மிஷன் மேல்நிலைப்பள்ளி தலைவரும், பொன்னி அறக்கட்டளை தலைவருமான ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மலைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், பசுமை நிழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவின் பொருளாளர் பூபதி, முல்லைவனம் தாவரவியல் பூங்கா நிர்வாகிகள்,கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மூங்கில்,நாவல்,வேம்பு,பழா, உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரண சாரணிய மாணவ மாணவிகள்,என்.சி.சி மாணவர்களும் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    ×