என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தாவரவியல் பூங்கா
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 500 மரக்கன்றுகளை நட்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் துறை 1990-93-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு கலைவாணி தலைமை வகித்தார்.
பொருளியல் துறை தலைவர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு தனது கல்லூரி நினைவுகளை சக மாணவர்களும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் முதல்வர் பி.சுப்பிரமணிய கவுண்டர், முன்னாள் பேராசிரியர்கள் எம்.டி.ஜெயபாலன், ஆர்.வி. ரகுராமன், கே. சிவஜோதி, பி.சந்திரமோகன், எல். குப்புசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ தன்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தாவரவியல் பூங்கா ஏற்படுத்தி கல்லூரி வளாகத்தில் 500 மரக் கன்றுகளை நட்டனர்.
தங்களுடன் படித்த நண்பர் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு பெற்று மக்கள் பணி யாற்றுவது பெருமையாக உள்ளதாக எம்.எல்.ஏ. விடன் படித்த நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






