search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "botanical garden"

    • சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
    • இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அப்போது பெரும்பாலானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்து அதனை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    எனவே ஊட்டி தாரவவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    இதுதவிர ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு அவை தற்போது கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், ஜப்பான் பூங்காவில் அழகிய மாடம் மற்றும் மீன் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் வகையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வண்ணமிகு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

    மேலும் தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பழைய டயர்கள் மூலம் தேநீர் கோப்பை உட்பட பல்வேறு வடிவங்களில் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அதில் விதம்-விதமாக மலர்ச்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன.
    • தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அப்போது தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படும்.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டும் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் கண்டு களித்து ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் களைகட்டுவது வழக்கம். இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 2-வது சீசன் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இதற்காக ஊட்டி பூங்காவில் ஏற்கனவே சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உள்பட பல்வேறு நிறங்களில் 15 ஆயிரம் மலர்த்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி 2-வது சீசனுக்கு சிறப்பளிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்காமேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜ5பின், கேண்டிடப்ட் உள்பட 60 வகையான மலர்விதைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்தன. அவை பூங்காக்களில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவை தற்போது மலர்ந்து அழகுடன் காட்சி தருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏற்கெனவே 4 லட்சம் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தன. அந்த செடிகளிலும் தற்போது பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன. ஊட்டி பூங்காவில் உள்ள பார்வையாளர் மாடங்களில், மலர் பூந்தொட்டிகளை தொங்க விடும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஆயுதபூஜை என தொடர்விடுமுறைகள் வருகின்றன. எனவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    ஊட்டியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக புல்வெளி மைதானம் சேதம் அடைந்து இருந்தது.

    எனவே அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
    • ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது.

    ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவை போன்று ஊட்டி பூங்காவை அமைக்க விரும்பி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று, செடிகளை நடவு செய்தார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஜலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரக்கன்றுகளை கொண்டுவந்து நடவு செய்தார்.

    தற்போது, இந்த நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர்.

    இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

    இதில், அந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எப்போது நடவு செய்யப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தது. அவற்றின் மூலிகைத் தன்மை என்ன என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

    இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறியதாவது-

    தாவரவியல் பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தாவரங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறாமரம், ருத்ராட்சை மரங்களில் கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பெயர் பலகை வைக்கப்படும், பின்னர் அனைத்து மரங்களுக்கும் கியூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    ஊட்டியில் கோடை சீசன் நிறைவடைந்து உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக அங்கு உள்ள பூங்கா புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணி நடந்து வருகிறது.

    அங்கு தற்போது மழைப் பொழிவு இருந்து வருகிறது. எனவே புல்வெளிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் உருவாக்கும் வகையில் யூரியா உரம் தூவும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அடுத்த ஒரு சில வாரங்களில் பூங்கா புல்வெளி மீண்டும் பச்சை பசேலென மாறிவிடும் என்று தோட்டக்கலைத் துைறயினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்குவது வழக்கம்.

    கோடை சீசன் காரணமாக அந்த மைதானம் சேதமடைந்து உள்ளது. எனவே பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 500 மரக்கன்றுகளை நட்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் துறை 1990-93-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மு கலைவாணி தலைமை வகித்தார்.

    பொருளியல் துறை தலைவர் எஸ்.விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு தனது கல்லூரி நினைவுகளை சக மாணவர்களும் பகிர்ந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் முதல்வர் பி.சுப்பிரமணிய கவுண்டர், முன்னாள் பேராசிரியர்கள் எம்.டி.ஜெயபாலன், ஆர்.வி. ரகுராமன், கே. சிவஜோதி, பி.சந்திரமோகன், எல். குப்புசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ தன்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரி வளாகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தாவரவியல் பூங்கா ஏற்படுத்தி கல்லூரி வளாகத்தில் 500 மரக் கன்றுகளை நட்டனர்.

    தங்களுடன் படித்த நண்பர் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு பெற்று மக்கள் பணி யாற்றுவது பெருமையாக உள்ளதாக எம்.எல்.ஏ. விடன் படித்த நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
    • கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்கள், வனம் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்த்து மகிழ்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பார்கள்.

    அவர்கள் நூற்றாண்டு புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த நிலையில் 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாகவும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் ஒமைக்ரான் தொற்று பரவியது. இருந்தபோதும், பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

    இதனால் கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அதன்பின் ஆண்டு முழுவதும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதில் மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்கள் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவா நடைபெற்றது.
    • 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,முல்லைவனம் தாவரவியல் பூங்கா மற்றும் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் வெடிக்கு பதில் செடி என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவானது பல்லடம் ஒன்றியம்,இச்சிப்பட்டி ஊராட்சி-கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.

    இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு லிட்ரசி மிஷன் மேல்நிலைப்பள்ளி தலைவரும், பொன்னி அறக்கட்டளை தலைவருமான ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார் .மேலும் இந்த நிகழ்ச்சியில் தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மலைக்காடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம், பசுமை நிழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, மகிழ்வனம் தாவரவியல் பூங்காவின் பொருளாளர் பூபதி, முல்லைவனம் தாவரவியல் பூங்கா நிர்வாகிகள்,கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மூங்கில்,நாவல்,வேம்பு,பழா, உள்ளிட்ட 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சாரண சாரணிய மாணவ மாணவிகள்,என்.சி.சி மாணவர்களும் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மொத்த பரப்பளவு 22 ஹெக்டேர். வெளிநாடுகளை சேர்ந்த மரங்கள் பச்சை, பசேல் என வளர்ந்து காணப்படுவதோடு, பசுமையான புல்வெளிகள் உள்ளது. இதேபோன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் ஊட்டி ரோஜா பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் இயங்கி வருகின்றது.

    ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் மற்றும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை, விடுமுறை காலங்களில் தாவரவியல் பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை (டிசம்பர் 15-ந் தேதி வரை) 26 லட்சத்து 91 ஆயிரத்து 727 சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை புரிந்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் நுழைவுக்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆகவும் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பூங்கா பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூங்காவில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து 2 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.50 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. ஊட்டி ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட வில்லை. இதுகுறித்து ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்கள், 2-வது சீசன் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு அதிகமாக வருகை தருகின்றனர். மேலும் விடுமுறை காலங்களிலும் வருகை புரிகிறார்கள். பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பூங்காவிற்கு சென்று கண்டு ரசிக்க முடியாத வகையில், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் திடீரென உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, ஊட்டியில் அரசுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா சாதாரண மக்கள் தங்களது குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழிக்கும் இடமாக இருந்தது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அந்த பூங்கா ஏலம் விடப்பட்டு, குழந்தைகள் விளையாடும் இடமாக மாற்றப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.100-க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் குழந்தைகளுடன் பொழுதுகளை போக்க சமவெளி போன்ற நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் இல்லை. எனவே, பிற துறையிடம் உள்ள நகராட்சி பூங்காவை திரும்ப பெற்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும்.

    மேலும் ஊட்டியில் நடந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட மலையாள திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ, ஊட்டியில் சினிமா கட்டணம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பு அதிகளவில் எடுக்கப்படுவது இல்லை என்று தெரிவித்தார். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, சினிமா தொழிலாளர்கள் வேலையிழப்பை அதிகரிக்கும்.

    எனவே கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×