என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Psycho"

    • ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு

    ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.

    சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.

    • சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார்.
    • உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.

    கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    என்னிடம் சொன்ன கதையை வேறு நடிகரை வைத்து இயக்கி வரும் மிஷ்கினிடம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து ஏமாந்துவிட்டதாக இளம் நடிகர் மைத்ரேயா புகார் தெரிவித்துள்ளார். #Mysskin #Maithreya
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    மைத்ரேயாவின் மனுவை ஏற்று கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்ரேயா அளித்த பேட்டியில் ’மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று கலைத்தாய் மீது சத்தியம் செய்தார். இப்போது எனக்கு சொன்ன கதையை வேறு ஒரு ஹீரோவை வைத்து எடுக்கிறார்.



    எங்கள் படத்துக்காக அவருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசி, ஒரு கோடி ரூபாயை அட்வான்சாக கொடுத்தோம். பலமுறை பேச முயற்சித்தோம். அவர் முன்வரவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சங்கம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

    எனவே கோர்ட்டுக்கு சென்றேன். விஷால் எனக்கு உதவுவதாக கூறியுள்ளார். நான் அடுத்து ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார். #Mysskin #Maithreya

    பல வெற்றி படங்களை கொடுத்த மிஷ்கினுக்கு, கிரைம் திரில்லர் படங்களை எடுக்க உயர்நீதி மன்றம் விதித்துள்ளது. #Mysskin #CrimeThriller
    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிரைம் திரில்லர் படங்களை எடுக்க மிஷ்கினுக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

    பிரபல தயாரிப்பாளர் ரகுநந்தனின் மகன் ஷாம் என்னும் மைத்ரேயாவை வைத்து இயக்குனர் மிஷ்கின் கிரைம் திரில்லர் படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகுநந்தனிடம் முன்பணம் பெற்றிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஆனால், படம் எடுக்காமல் தள்ளிப்போட்டதாலும், தன்னை வைத்து எடுக்க இருந்த கதையை வேறொரு நடிகரை வைத்து எடுப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரகுநந்தன்.

    இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிரைம் திரில்லர் திரைப்படங்கள் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரகுநந்தன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாருக்கு பதிலளிக்க மிஷ்கினுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 
    சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது என்றும் இயக்குனர் மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் புதுமுக நடிகர் மைத்ரேயா புகார் கூறியுள்ளார்.
    பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

    இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


    ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Psycho #UdhayanidhiStalin #Myskkin
    உதயநிதி ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ், நித்யா மேனன் நடிக்கின்றனர். இயக்குநர் ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், சைக்கோ பர்ஸ்ட் லுக் வருகிற 7-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அதே தேதியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #Myskkin

    ×