search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PC Sriram"

    • குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
    • 4 ஆண்டுக்குப் பிறகு தற்போது சி.ஏ.ஏ. நடைமுறைக்கு வந்துள்ளது

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடந்த உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது

    இந்நிலையில், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்த சிஏஏ எங்கு பொருந்தும்? என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை இன்று இயக்குநர் சீனு ராமசாமி தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
    • இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அப்படத்திற்கு வடக்கன் என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், பணியாற்றும் வட மாநிலத்தொழிலாளர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக தயாராகி வருகிறது.

    படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து, வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் நாளை (பிப் 29) காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இதனை இயக்குநர்கள் பாரதிராஜா, லிங்குசாமி, சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர் நாசர் ஆகியோர் வெளியிடுகின்றனர்.

    • திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம்.
    • இவர் தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

    இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே, ஐ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.


    மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.




    • இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
    • சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட்டைக்காளி வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     

    பி.சி.ஸ்ரீராம்

    பி.சி.ஸ்ரீராம்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளார். அதில், நான் பணியாற்ற உள்ளேன்.ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Psycho #UdhayanidhiStalin #Myskkin
    உதயநிதி ‘கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து தற்போது கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக அதிதி ராவ், நித்யா மேனன் நடிக்கின்றனர். இயக்குநர் ராம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சைக்கோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    இதுகுறித்து பி.சி.ஸ்ரீராம் அவரது ட்விட்டர் பக்கத்தில், சைக்கோ பர்ஸ்ட் லுக் வருகிற 7-ந் தேதி வெளியாக இருப்பதாக கூறியுள்ளார். அதே தேதியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #Psycho #UdhayanidhiStalin #AditiRaoHydari #Myskkin

    பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi #Mysskin
    நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    முன்னதாக மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அதே கதையில் உதயநிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த படத்தை உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். 



    மிஷ்கின் - சாந்தணு கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது. #Udhayanidhi #Mysskin 

    ×