search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nithya Menon"

    • ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
    • இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    வித்ய லக்ஷ்மி இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான 'நூற்றெம்பது' படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

    இதனை தொடர்ந்து வெப்பம், பேச்சுலர் பார்டி, உஸ்தட் ஹோட்டல், பெங்களூரு டேஸ், காஞ்சனா-2 , 24 , மெர்சல், ஒகே கண்மணி போன்ற பல்வேறு படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என வேறுபாடின்றி நடித்துள்ளார்.

    2022 ஆம் ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா, பிரியா பவானி ஷங்கர், போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.

    ஷோபனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். எல்லா ஆண்களுக்கும் ஷோபனா போன்ற ஒரு பெண் தோழி வேண்டும் என இன்ஸ்டாகிராமில் மீம்ஸ்கள் வைரலாகியது.

    இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனரான காமினி இயக்கத்தில் 'டியர் எக்சஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஃபாண்டசி ரோம் காம் கதைகளத்தில் அமைந்து இருக்கிறது இந்த படம்.

    பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப் மற்றும் தீபக் பரம்பொல் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இன்று நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் பக்கத்தில் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். போஸ்டரில் நித்யா மேனன் மஞ்சள் புடவையில் கையில் மெஹந்தியுடன் கண்ணில் ஸ்டைலான கூலர்ஸுடன் காணப்படுகிறார். மறு கையில் உள்ள போனில் அவரது எக்ஸ் கால் செய்வதுப் போல் காட்சி அமைந்துள்ளது மை டியர் எக்சஸ் படப் போஸ்டரில்.

    காதல் தோல்வியில் உள்ள பெண்ணைப் பற்றிய கதைக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
    • இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வினய், யோகிபாபு, லால், ஜான் கெக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


    காதலிக்க நேரமில்லை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமா துறையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.
    • இவர் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்" என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நித்யா மேனன்.
    • தற்போது நித்யா மேனன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.

    நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரன் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது 'தி அயன் லேடி' என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

    நேற்று நித்யா மேனன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பது போன்று இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

     

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

    இந்நிலையில் நித்யா மேனன், தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தையே அவர் பகிர்ந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    திருச்சிற்றம்பலம்

    "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் நித்யா மேனனின், ஷோபனா கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இந்நிலையில், நடிகை நித்யா மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தின் நேரலையில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தயவு செய்து தன்னை "தாய்க்கிழவி" என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
    • 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

     

    இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    நித்யா மேனன்

    நித்யா மேனன்

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில் படக்குழு திரையுலகினர் என பலரும் கலந்துக் கொண்டனர். அந்த விழாவுக்கு நித்யா மேனன் வீல் சேரில் வந்திருக்கிறார். நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், "நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும்.." என தனுஷ் கூறியதால் அவர் வந்ததாக தெரிவித்துள்ளார்.

    'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

    '19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    19(1)(a)

    19(1)(a)

    இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நித்யா மேனன், தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #NithyaMenon #Nithya
    இணையங்களில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சென்சார் இல்லை என்பதாலும் குறைந்த பட்ஜெட்டில் தொடரை உருவாக்கி அதிக செலவு இல்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இணைய தொடரில் ஆர்வம் காட்டுகிறார்கள். மாதவன் இந்தியில் நடித்த இணைய தொடரான ‘பிரீத்’ தொடர் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



    அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராக உள்ளது. முதல் சீசனை இயக்கிய மயங் அகர்வால் இந்த சீசனையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித்சத் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். இதுவரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர், இதன் மூலம் இணைய தொடரில் கால்பதிக்க இருக்கிறார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகி வரும் நித்யாமேனன், மீடூ இயக்கத்தில் சேரமாட்டேன் என்று கூறியிருக்கிறார். #NithyaMenon #MeToo
    பிரியதர்ஷினி, லிங்குசாமி, விஜய், பாரதிராஜா ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இதில் பிரியதர்ஷினி இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளார்.

    இப்படத்திற்கு தி அயர்ன் லேடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நித்யா மேனன் பேட்டியளித்த போது இப்படம் பற்றி கூறியுள்ளார். அதில், “இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. கதை குறித்து மிகுந்த கவனத்தோடு அவர் இருக்கிறார். ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன். சரியான பாதையில் மிகுந்த நம்பிக்கையோடு பட வேலைகளை பிரியதர்ஷினி செய்துவருகிறார்.

    இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அது ஒரு நடிகையாக எனக்கு மிக சுவாரசியமானதாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.



    மேலும் மீடூ இயக்கம் பற்றி கூறும் போது, “மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான வி‌ஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன்.

    இதுபோன்ற வி‌ஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன் என்றார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நித்யா மேனன், முதல் முறையாக பாலிவுட்டில் பிரபல நடிகருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். #NithyaMenon
    விஜய் நடித்த மெர்சலில் காஜல் அகர்வால், சமந்தாவை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டவர் பிளாஷ்பேக்கில் வரும் ஐஸ்வர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன். தனது துறுதுறு நடிப்பால் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நித்யா, மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது தி அயர்ன் லேடி எனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தயாராகிவருகிறார். 

    அதுதவிர மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதியுடன் சைக்கோ எனும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் இந்தியில் நடிகர் அக்‌‌ஷய் குமார் நடிக்கும் மி‌ஷன் மங்கள் எனும் படத்திலும் நடிக்கவுள்ளார் நித்யா. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து தயாராகும் இந்தப்படம் ஒரு விண்வெளிப் படமாக உருவாகிவருகிறது. 



    இப்படத்தினை ஜெகன் ‌ஷக்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் இணைந்ததன் மூலம் ஆங்கிலப்படம் தொடங்கி தமிழ் வரை ஒரு ரவுண்டு வந்துவிட்ட நித்யா மேனன் முதன்முறையாக இந்தியில் நுழைகிறார். இதில் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்கா, டாப்சி என இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது வேடத்தில் யார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. #THEIRONLADY
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தன.

    இயக்குனர்கள் பாரதிராஜாவும் விஜய்யும் தனித்தனியாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களோடு இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்ஷினியும் களத்தில் இறங்கினார். ஆனால் பிரியதர்ஷினிக்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளவயது நடிகை வாழ்க்கை முதல் மருத்துவமனை இறுதி நாட்கள் வரை அனைத்தும் படமாக்கப்பட உள்ளன. அவரது சினிமா வாழ்க்கையை காட்டுவதற்காக அவர் நடித்த காலத்தில் கோடம்பாகத்தில் இருந்த சினிமா ஸ்டூடியோக்களை செட் போட்டு உருவாக்க இருக்கிறோம்.

    சினிமா முதல் அரசியல் வரை அவருடன் பயணித்தவர்கள் வேடங்களில் நடிக்க முக்கிய நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும்.

    அந்தக்களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக்காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது பெருமையாக இருக்கிறது.



    ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை கடமையாகவே உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எல்லோருமே பயந்தனர். ஆனால் நித்யா மேனன் மட்டும்தான் துணிச்சலுடன் ஒப்புக்கொண்டார். வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘தி அயர்ன் லேடி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வேடத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.



    இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளது.
    ×