என் மலர்
நீங்கள் தேடியது "M. K. Stalin"
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். மணி ரத்னம் அவர் இயக்கும் படத்திற்கு என தனி ஸ்டைல் இருக்கும், இன்று மணிரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மணி ரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்." என கூறியுள்ளார்.
- ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
- அமைதியுடனும், உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-
ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது நெஞ்சம் நிறைந்த 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எப்போதும் அமைதியுடனும், உடல் நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்நன்னாளில் விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மதுரை
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவிற்கு நாளை (15-ந்தேதி) மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்ப டுகிறது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மு.மணி மாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
செம்மொழி நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் வரை பல்லாயிரக் கணக்கான தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, எழுச்சிமிகுதியுடன் வரவேற்க வேண்டும்.
இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்வில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர் கள், துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடிகள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர், கழக உடன்பிறப்புகள் என பல்லாயி ரக்க ணக்கானோர் பங்கேற்க வேண்டும்.
இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி தி.மு.க.வினர் மிக உற்சாக மாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார்.
- மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார்.
கோவை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை கணபதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதயாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இந்த பாத யாத்திரை இரவு 10.30 மணியளவில் இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
கோவை பா.ஜனதாவின் கோட்டை. அந்த அளவுக்கு கோவையில் கட்சியினர் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துள்ளார்கள். இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
பாதயாத்திரையில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் காரணமாக 2 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. நேரமின்மை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தல் படியே 6 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் வந்தேன்.
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார். தமிழகத்திலும் 39 இடங்களையும் பெறுவதே நமது இலக்கு.
பிரதமர் மோடி தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ளார். தமிழ் மண்ணையும், மக்களையும், கலாசாரத்தையும் மோடி மிகவும் நேசிக்கிறார். அவருக்கு தமிழ் மொழியை சரளமாக பேச முடியவில்லை என்பது தான் வருத்தம். அவர் தமிழ் மொழியில் சரளமாக பேசிவிட்டால் தமிழகத்தையும் ஆட்சி செய்து விடுவார்.
பிரதமர் மோடி குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார். ஏழைகளுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. இதனால் உலகளவில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் உலகின் 3-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று மோடி கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றம் அடைய நேர்மையான ஊழல் இல்லாத அரசால் தான் முடியும். அது பா.ஜ.க அரசு அளிக்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கோவை மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார். தி.மு.க. சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் அவர் மீது பா.ஜ.க.வினர் 400 பேர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையோ, வழக்கோ இல்லை.
சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதிக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டனை தருவார்கள். மேலும் இந்து தர்மம், சனாதனம் மற்றும் நரேந்திர மோடியை பழித்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்.
கோவையில் பேசிய நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு கூட்டம் வரும் போது, கட்சிக்கு வரவில்லையே என பேசியிருக்கிறார். படத்திற்கு வந்த கூட்டம் என்பது அவர் நன்றாக நடிப்பதால் வந்தது.
கட்சி ஆரம்பித்ததில் இருந்து தி.மு.க.வை எதிர்த்து வந்த கமல்ஹாசன் தற்போது தனது தன்மானத்தை மொத்தமாக தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கிறார். அவர்களது கம்பெனி படத்தில் நடிக்கிறார். இப்படி எல்லாம் செய்து தனது தன்மானத்தை இழந்ததாலேயே கமல்ஹாசனின் அரசியலுக்கு கூட்டம் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.
- அருங்காட்சியகத்திற்கு டெல்லியில் “உலகளாவிய வடிவமைப்பு” விருதுகள் வழங்கப்பட்டது
சென்னை:
சென்னை காமராஜர் சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகமானது மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அங்கு வருகை புரிபவர்களுக்கு அவர்கள் தனிச்சையாக வாழ்வதற்கு ஏதுவாக காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்திற்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை நலத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
- சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.
சிவகங்கை
சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
- முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
திருச்செந்தூர்:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமான மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகம் முன்பு நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1,500 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்களுக்கான போட்டி திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவிலும், பெண்களுக்கு திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிலும் நடைபெற்றது.
கனிமொழி எம்.பி. கொடி அசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன்-சூர்யா தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து வெற்றி பெற்ற தம்பதியினருக்கு முதல் பரிசாக தலா ரூ. 1 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
2-வது பரிசாக 75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் உட்பட 10 பரிசுகள் தலா இருபாலர்களுக்கும் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ், நகர செயலாளர் சுடலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள்.
- 3 ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கட்டு வருகிறது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள். அப்படி இருந்தும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு பிரதமர் மோடி மாதந்தோறும் வருகிறார். தேர்தலுக்கு பின் தி.மு.க. இருக்காது என மோடி கூறி உள்ளார். மோடி மட்டுமல்ல, தி.மு. க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.
மதுரைக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 3 ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கட்டு வருகிறது.
மத்திய அரசு லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை என தமிழக அரசை மிரட்ட பார்க்கின்றார்கள். ஆனால் முதலமைச்சர் அதை எதிர்த்து போராடி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது கூட பணம் கொடுக்காமல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம்.
மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், மகளிர் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். மதுரை புறநகர் தொகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகர் பாராளுமன்றத்திலும் சோழவந்தான், உசிலம் பட்டி உள்ளிட்ட தொகுதிகள் தேனி தொகுதியிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார்.
- தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கமான வளர்ச்சித் திட்ட பணிகளை முழுமையாக செய்ய இயலாது
- சென்னை விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தல் முடிந்து வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதை அறிந்ததும் கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்களை சந்தித்து பேசினார்.
கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கமான வளர்ச்சித் திட்ட பணிகளை முழுமையாக செய்ய இயலாது என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றுள்ளார். 5 நாள் பயணமாக குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றுள்ள அவர் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
"தமிழ் எங்கள் உயிரென்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
— M.K.Stalin (@mkstalin) April 29, 2024
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே"
"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!"
எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்… pic.twitter.com/865mQOOnvV
- கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்.
- தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்த முற்றேன்.
மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்; பழகு தற்கினிய உள்ளம் கொண்டவர் அவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






