search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள்- அமைச்சர் கே.என்.நேரு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள்- அமைச்சர் கே.என்.நேரு

    • மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள்.
    • 3 ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக திகழ்ந்து வருகிறார். மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள். அப்படி இருந்தும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி மாதந்தோறும் வருகிறார். தேர்தலுக்கு பின் தி.மு.க. இருக்காது என மோடி கூறி உள்ளார். மோடி மட்டுமல்ல, தி.மு. க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.

    மதுரைக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 3 ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கட்டு வருகிறது.

    மத்திய அரசு லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை என தமிழக அரசை மிரட்ட பார்க்கின்றார்கள். ஆனால் முதலமைச்சர் அதை எதிர்த்து போராடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது கூட பணம் கொடுக்காமல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம்.

    மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், மகளிர் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். மதுரை புறநகர் தொகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகர் பாராளுமன்றத்திலும் சோழவந்தான், உசிலம் பட்டி உள்ளிட்ட தொகுதிகள் தேனி தொகுதியிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார்.

    Next Story
    ×